Friday, October 25, 2013

காய் வெட்ட - நூல் கட்ட - தடை வெட்ட - விஸ்னு சக்கரம்

வணக்கம் மாணவர்களே,

பேய் பூத பசாசு சூனியம் செய்வினை என எப்படிப்பட்ட துஷ்ட மந்திரங்களை பயன்படுத்தி தீங்கு செய்திருந்தாலும் அதை விலக்கி நோயாளியை காப்பது ஓர் வைத்தியரின் கடமை அல்லவா. அப்படி ஓர் தேவைக்கு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரப்பிரயோகம் செய்யும் ஆற்றல் வைத்தியருக்கும் மாந்திரீகருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்த மந்திரம் தலையாய மந்திரமாகும்.

விஸ்னு சக்கரம் இது காக்கும் சக்கரம் என்று அனைவரும் தெரிந்ததெ, அதை பயன்படுத்த மந்திரமாக இருந்தால் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.

மந்திரம் 

ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர் கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம் அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன் அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன் உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா ( என்று சொல்லி நூல் கட்டலாம்) 

கரு நாவுடையான் ஆணை  அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா ( என்று சொல்லி காய் வெட்டலாம் - தேங்காய் வெட்டி தடைகளை வெட்டலாம்) 

கிரிகை 

மந்திர சித்தி செய்த பின்னர். 9 முறை உரு செய்து பயன் படுத்தலாம்.

நூல் கட்டல் தொடர்பான முறையை வரும் பதிவில் எதிர் பாருங்கள் 

நன்றி.

4 comments:

  1. ஐயா,

    அருமையான பதிவு

    இதேபோல் யந்திர (அட்ஷரம்) முறை ஓன்றையும் தாருங்கள்


    நன்றி

    ReplyDelete
  2. ஐயா நான் இலங்கையில் வசிப்பவன்.நான் உங்கள் இணையதளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் வாசித்து பார்த்தேன் மிகவும் சிறப்பாகவும் எளிய வசன நடையிலும் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.நான் தங்களது துறை பற்றி பல காலம் விரும்பி அராய்ந்து வருகிறேன்.எனக்கு தங்களது உதவி ஒன்று தேவை நான் முந்தி ஒருநாள் ஒருவரது பதிவை படித்தேன் அவர் அதில் இடைவெளிகளை விட்டு அது என்ன என கூறாது விட்டு விட்டார் தயவு செய்து எனக்கு அதை நிரப்பி தர முடியுமா அல்லது அதுக்காண மாற்றீடு ஏதேனும் இருப்பின் கூறியுதவவும்.முக்கியமாக பிறர் மனதை அறியும் முறை தெரிந்தால் கூறவும்.கிழே அந்த விடயங்கள குறிப்பிட்டுள்ளேன் எனது மின்னஞ்சல் paramananthamkuruparan@gmail.com


    வசியம் செய்ய…
    வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி —-, —- என 108 தரம் ஜெபித்து, அவர் முகத்தின் முன் கைச் சொடக்கிட அவர் வசியமாய் சொன்ன சொல் கேட்பார்.
     
    நாய் வாய் கட்ட மந்திரம்
    குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி, —-,—-,—-,—- கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால்நாய் குரைக்க இயலாது. குரைக்க முயன்றாலும் சப்தம் செய்யாது. இரையும் எடுக்காது. ஆனாலும் இதனை ஆபத்துக் காலத்திலே அல்லாமல் அகாலமாய் உபயோகம் செய்பவன் நபும்சகனாய் வாரிசற்று வீழ்வான். அவன் குலம் பாழாகும்.
     
    மிருகங்கள் வசியம்
    ஆ, ஔ என்கிட நாய் உறுமும். எ, யா என்கிட விலகும். ஐயா என அழைக்கக் கூத்தாடும்.
     
    பிறர் மனதை அறிய
    குப்பைமேனி வேர், வெள்ளெருக்கு வேர், வரட்டைச் செடி வேர் இவற்றை எரித்து, புனுகு, கோரோசனை, —-,—-,—- மற்றும் —- கலந்து, ஒரு மெழுகு போல் அரைத்து, அதனைத் திலமாக்கி இட்டுக் கொள்ளப் பிறர் மனதில் இருப்பதை, அவர்கள் நிழல் விழும் வட்டத்தில் வரும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. bro enakkum ithai pattri therivikkaum mail id sriram8155@gmail.com

      Delete
  3. நன்றி நல்ல தகவல் அன்னை பகவதி வழிபாட்டு முறையை கற்பிக்க பணிவுடன் வேண்டுகிறேன்

    ReplyDelete