Thursday, October 24, 2013

அகோரம் தனிக்க - மாரி அம்மன் மந்திரம்

வணக்கம் அன்பர்களே,

இதுவும் ஓர் அவசியமான பதிவாகவே இருக்கும்.

அகோரம் தனிக்க என்றால்...

சாமி வந்து ஆடுகிறவர்களை நீங்கள் பார்திருப்பீர்கள் இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாந்திரீகர் தனது தேவைக்காக ஒருவர் உடல் மேல் குறிப்பிட்ட தேவதை அழைத்து குறி கேட்பது.

மற்றது ஆலய வழிபாடு செய்யும் போது அல்லது சில விசேட பூசை நேரங்களில் சிலர் உடலில் சாமி வந்து ஆடுவார்கள், இப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களின் ஆவேசத்தை தனியச்செய்து அவர்களை சாந்தபடுத்தி மீண்டும் அவராக மாற்றுவதே இது.

மந்திரம் 

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் அகோரமாரி அகோரம் தனி அவ்வும் தனி சவ்வும் தனி ஆதி சர்வ சக்தி அங்குசம் அடங்க தனி முத்துக்கண் மோகாம்பரி அம்மை ஆணை தனி சுவாகா. 


கிரிகை

மந்திரம் சித்தி செய்த பின்னர் தேவை ஏற்படும் போது நமது வலது கையை சாமி ஆடுபவரின் தலையில் வைத்து சற்று அழுத்தி மந்திரத்தை 3 முறை கூற தனிவார். 

மந்திர சித்தி பற்றி முன்னமே கூறியுள்ளேன்.

நன்றி 

No comments:

Post a Comment