Tuesday, April 22, 2014

யகார மைய சக்கரம்

வணக்கம் தோழர்களே,

திரு மூல நாயனார் அல்லது சித்தர் பெருமக்களில் ஒருவரான திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியிருக்கும் பல மாந்திரீக உபாசனைகளில் ஒன்றான் யகார மையச்சக்கரம் மிக சக்திவாய்ந்த மந்திர உபாசனைகளை கொண்டது.

திருமந்திரம் 3000 என்ற பாடற்தொகுதியில் அனேக தெய்வ உபாசனைகளையும் பல யந்திர தந்திர அஷ்டகர்ம முறைகளையும் விரிவாகவும் அதே நேரத்தில் கடுமையான பரிபாசையாகவும் கூறியிருக்கிறார்.

திருமந்திரத்தில் பஞ்சாட்சர விளக்கம் மனோன்மணி சக்கரம் வைரவர் எண்கோணம் தொடக்கம் அனேக விளக்கங்கள் தரப்பட்ட நிலையில் இந்த யகார மையச் சக்கரம் ஓர் அபூர்வ வகை யந்திரமாக கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் எப்படி பிரசித்தமோ அதை விட அதிக சக்திவாய்ந்த யந்திரமாக சித்தர்களால் மறைக்கப்பட்ட ஓர் யந்திரம் இது.

” யகார மையம் ” என்றால் என்ன என்ற கேள்வி நீங்கள் கேட்பது புரிகிறது....

” சிவயநம ” எனும் பஞ்சாச்சரத்தின் நடுவில் இருப்பது எதுவோ அதுவே யகாரம் அதுவே மையம்..

இந்த “ ய “ ஏன் நடுவில் உள்ளது என்று சிந்தித்த மத, மாந்திரீக, ஆன்மீக சமய வாதிகள் எத்தனைபேரோ எமக்கு தெரியாது.. அதை போல் சி முதல் ம வரை என்ன இருக்கிறது என்ற எமது ஆய்வின் போது கிடைத்த பல இரகசியங்கள் வியப்பையே தந்திருக்கிறது.





சி என்றால் இது வ என்றால் இது என என்று இன்று கிடைக்கும் புத்தகங்களி கிடைக்கும் விளக்கம் எதுவும் நியமல்ல என்பது எமது தெளிவு.. அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 12 வருடங்களுக்கு முன் நாம் ஆய்வு செய்த அதாவது வரந்த (வரைய முட்பட்ட) திரு மூலரின் யகாரமைய சக்கரம் இது. வரைந்த பின்னர் அதை உருதிப்படுத்த சில சில ஆய்வாலரின் கட்டுரைகளையும், திருவாடுதுறை ஆதீனத்தின் சில குறிப்புக்களையும் ஒப்பிட்டு பார்த்து உருதிசெய்தோம்.

அதையும் தாண்டி அதன் உபாசனைகளை செய்த போது அதன் உண்மையும் ஏன் சித்தர்கள் இதை மறைத்தனர் என்ற தெளிவும் எமக்கு கிடைத்தது..

முக்தியை நோக்கிய பயனத்துக்கும் அஷ்ட யோகம் எனும் நிலைக்கும் ஆரம்ப படிக்கட்டே இது என புரிந்தது, ஆனால் நமது வயதும் செயலும் இதற்கு ஏற்றது இல்லை என்ற மிக தெளிவான நிலை நம்மிடன் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட உபாசனையுடன் நிருத்திக்கொண்டோம்.

நாம் அப்போது ஆராய்ந்த சில விடயங்களை நேற்று மாலையில் தேடும் போது இந்த சில ஆய்வுகளின் பக்கங்கள் கிடைத்தது அதை வாசகர்களுக்கு பதிவிடலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது..

இதை சரியான முறையில் உபாசனை செய்தால் தன்னை மறந்த நிலையும் இறைவனின் அருவ நிலையும் தெளிவாக புரியும். ஆனால் இதை எப்படி உபாசனை செய்வது என்ற தகவல் இங்கு பதிவிடவில்லை, காரணம் முன்னமே நாம் கூறியது போல உருதியான மன கட்டுப்பாடு இல்லா விட்டால் இது உங்களை அழைத்து செல்லும் பாதை மிக ஆபத்தாகிவிடும்.

முறிப்பிட்ட மன பக்குவமும் வாழ்கையின் கடமைகளை செய்து முடித்தவர்களுக்கும் மட்டுமே இது உகந்த உபாசனையாக இருக்கும் என்பது எமது கருத்தும் ஆய்வின் முடிவுமாக உள்ளது...

இதை பற்றிய உபாசனைகளை முறையாக செய்ய வேண்டுமாயின் அதை பற்றி கற்பிக்க தயாராக இருகிறோம் ஆனால் யாருக்கு என்பது இறைவனின் சித்தம். வாழ்கையின் கடமைகளை செய்து முடித்த தோழர்கள் ஆன்மீக பாதையின் உண்மையை உணர விரும்பின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

இது மிக கடினமான பாதை என்பதை மனதில் வைத்து பின்னர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு வேலை இது உங்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்..

நன்றி


சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, April 17, 2014

வர்ம சூத்திரம் பற்றி சில விளக்கம்

வணக்கம் தோழர்களே,

சித்தர் இலக்கியத்தில் அடுத்து பேசப்படும் ஓர் கலை வர்ம சூத்திரம், இது ஓர் மருத்துவம் சார்ந்த கலையாகவும், போர்க் கலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

வர்ம சூத்திரத்தை பற்றி அதிகமாக பாடியிருப்பது அகத்தியரும், போகரும் ஆகும்.

இதர சித்தர்கள் பலர் பாடியிருந்தாலும் இவர்களின் பாடல்கள் மிக தெளிவாக இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.

உடலின் நரம்பு மண்டலத்தையும் தச வாயுக்களையும் கட்டுப்படுத்தும் ஓர் சக்தியாக வர்ம சூத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திடீர் என ஏற்படும் அதிர்வு கூட ஒருவரை மரண படுக்கைக்கு கொண்டுசெல்லும் என்பது அனைவரும் தெரிந்த விடயமே அதன் பின்னனியில் இருப்பது தான் இந்த வர்ம சூத்திரம். வேறு எந்த மருத்துவ முறையிலும் வர்ம சூத்திரம் பற்றி பெரிய விளக்கங்கள் கூறப்படவில்லை என்பதும் சித்த மருத்துவத்திற்கே உறியதாக இருப்பது இந்த வர்ம சூத்திரம், மாறாக வேறு மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் வர்ம முறைகள் சித்தர்களிடம் இருந்தே சென்றது என்பது தான் உண்மை.

ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய விடயங்களில் வர்ம சூத்திரமும் ஒன்று. நாடிப்பரீட்சை எப்படி அனாதியானதோ அதே போல் இந்த வர்ம புள்ளிகள் அதன் தன்மைகள் அதன் விளைவுகள் அதற்கான தீர்வுகள் என பல விடயங்கள் தெளிவாக புரிந்தால் தான் சித்த மருத்துவம் முழுமையடையும்.

இன்று மருத்துவத்துறை எந்த அளவுக்கு வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரசினைக்கான தீர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை, இதற்கான காரணம் மருத்துவம் பிரிக்கப்பட்ட விதம் தான் என்பது எனது கருத்து.


ஒரு சித்த மருத்துவர் தனியே மூலிகைகளை பற்றி தெரிந்திருந்து எந்த பலனும் முழுமையாக கிடைக்காது, அதே போல் பற்ற்பம் செந்தூரம், களங்கு, குரு மருந்து என தெரிந்தும் பல இடங்களில் அவரின் மருந்துகள் பலன் தராமல் போவதற்கு இது தான்காரணமாகிறது.

உதாரணமாக கூறினால், வர்ம தாக்குதலுக்கு உட்பட்ட ஒரு நோயாளியை வெருமனே மருந்துகளால் மட்டும் காப்பாற்ற முடியாது அதே வேலை குறிப்பிட்ட வர்ம தாக்குதலின் விளைவுகளை வர்ம தட்டுகள் மூலமும் குனப்படுத்த முடியாது, இரண்டு முறைகளும் சரியாக தெரிந்தால் தான் அதில் இருந்து ஒரு பாதிப்பாலரை குணப்படுத்த முடியும்.

தற்போது இவை தனித்துறைகளாக ஆனபின் பாதிப்படைவது நோயாளர்களாகவே இருக்கிறார்கள்.

வர்மங்கள் பற்றியும் அவற்றுக்கான சரியான மருந்துகள் பற்றியும் சரியான் தெளிவு இருப்பின் பலதரப்பட்ட நோயாளர்களை காக்க முடியும்.

தச வாயுக்கள் அவற்றின் இருப்பிடம், நாடிகளின் பரீட்சை முறைகள், நரம்பு மண்டலம் பற்றிய சரியான ஆய்வு செய்தால் அவை நிச்சயம் ஓர் சித்த மருத்துவரை புகழடையச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

நமது முன்னோர்கள் கையாண்ட மருத்துவ முறைகளில் வர்ம ரகசியங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கான பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.

அவற்றில் இருந்து சில பதிவுகளை உங்களுக்கு வரும் தினங்களில் சில குறிப்புக்களாக பதிவிட இருக்கிறேன் என்பதில் மகிழ்சியடைகிறேன்.

நன்றி


Thursday, April 3, 2014

பெண் வசியம்

வணக்கம் தோழர்களே,

பெண் வசியம் தேவை எனும் வேண்டுகோள் விடுக்கும் அன்பு நெஞ்சங்களே, மிகவும் இலகுவான ஓர் முறை இது. முடிந்தால் பரிபாசையை தகர்த்து வெற்றி கானுங்கள்.

பாடல்

“ செய்வதோர் மந்திரங்கள்
செபிப்பது ஆயிரம்தான்
கையொடு காலும்தொட்டு
வருவது கூடத்தொட்டு
மையது பற்றவைத்து
வாவென்று நெற்றியிலிட்டால்
தையலார் எவரும்தேடி
சணத்தினில் வருவார்திண்ணம் “.
















 











விளக்கம் தெரிந்தவர்கள் கருத்து பதிவிடலாம்.

நன்றி

சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாளாக மாந்திரீக பதிவுகள் மற்றும் மருத்துவ பதிவுகள் எதுவும் தரவில்லை என்று எமது மாணவர்களும் வாசகர்களும் மின்னஞ்சல் மூலம் கேட்டவாரு இருப்பதால், அவர்களுக்காக இனி சில பதிவுகள் வரும். நமது siththarvaakadam முக நூல் மூலமும் பல தகவல்களை கானலாம்.

சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை ஒன்றை இன்று பார்க்கலாம்.

மோகனம் என்றால் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை நம் மீது மோகம் செய்ய வைப்பது என்று அறியவும். இது சத்துரு மோகனம் என்பதால் பொதுவாக நமது எதிரிகள் நம் மீது மோகம் கொள்ளுவர்.

பாடல்

“ சென்னாயுருவி வெண்குன்றி
சீதாதேவி செங்கழுநீர்
சொன்னார்துடரி சிறுபுன்னை
தொகுப்பாயஞ்சு வேர்களையும்
மன்னார்கோடக சாலையிலே
வகைசேர்சாத்தி லரைத்துருட்டி
என்னால்சத்துரு மோகனமாம்
இயபாய்த்திலத முறைதானே”.


விளக்கம்

குறிப்பிட்ட ஐந்து வேர்களையும் முறைப்படி காப்புகட்டி ஆணிவேர் அராமல் எடுத்து மேல் கூறிய சாற்றினால் அறைத்து வில்லைகள் செய்து பதப்படுத்தவும். தேவை ஏற்படும் போது அதை பயன்படுத்தலாம்.

இதில் மேலதிக விளக்க வேண்டும் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், முறைப்படி மாந்திரீக பயிற்சிகள் செய்பவர்க்கு மட்டுமே இதன் மந்திர முறைகள் மற்றும் சித்தி செய்யும் முறைகள் பற்றி தெரியும் என்பதால், வெறுமனே இதை மிக்சியில் அறைக்கும் சட்னி என்று முயற்சி செய்ய நினைக்கவேண்டாம்.




















இதற்கான மந்திர முறைகள் நமது மானவர்களுக்கு வழங்கப்படும்.

என்றும் அன்புடன்

சிவஸ்ரீ மா கோ முதலியார்.