Saturday, October 4, 2014

விடம் தீண்டினால்

வணக்கம் தோழர்களே,

விடம் தீண்டியவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று கேட்ட தோழர்களுக்கு இந்த மந்திரப்பதிவு.

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து வைத்திருந்தால் யாருக்கு விடம் தீண்டினாலும் உபயோகிக்களாம். அது போல் மந்திரம் சித்தியானவருக்கு விட பூச்சிகள் குறிப்பாக பாம்பு தீண்டாது..

சித்தி செய்வது அமாவாசை இரவு நல்லிரவில் 108 முறை தனிமையான இடத்தில் இருந்து உருச்செய்ய வேண்டும்..

சித்தியானால் அதில் இருந்து மூன்று நாட்களுல் உங்கள் உறவுகள்








அல்லது நண்பர் யாருக்காவது பாம்பு தீண்டும்,,..

பயந்தால் மந்திரம் செய்யும் என்னத்தை விட்டுவிடுங்கள்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, October 3, 2014

இரசவாதம்.. கல்லுப்பு

வணக்கம் தோழர்களே,

எமது பயனத்தின் போது கல்லுப்பு பற்றிய ஓர் தேடலுக்காக இந்து சமுத்திரத்தின் ஓர் பகுதியின் நிலப்பரப்புக்கு சென்றிருந்தோம்.

அருமையான கடல், அமைதியாக இருந்தது, குறித்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் புதையல்கள் அளவு கடந்து கிடப்பது தெரிந்தது..

மிக அருமையான மருத்துவப் பொருட்கள் குமிந்து கிடக்கும் ஓர் இடம் அது.. ஆனால் அந்த பிரதேசத்தை ஒட்டிய எந்த மருத்துவருக்கும் இது தொடர்பான எந்த ஆற்றலும் அறிவும் இல்லை..., அவர்களை பொருத்தவரை அங்கு இருப்பது கட்கள் அவ்வளவு தான்..

ஆனால் எமது கண்ணுக்கு தெரிந்தவை புதையல்கள்.., அதில் நாம் சிறப்பான பல விடயங்களை படமாக்கினோம்.. அவை ஒவ்வொன்றாக பதிவாகும் இங்கு..

அதில் ஒன்று இங்கு காட்டப்படுகிறது..

“ வாதியா மென்றுசொல்லி கல்லுப்பைதான்
வடிவாக விட்டுமே மூலிதேடி
சேதியாய் கேட்டுமே வாதம்சுட்டு
சிறப்பித்து திரிவார்கள் உலகவாதி”

“ ஆகுமே கல்லுப்பு திராவகத்தால்
வடைவான வேதையிது அடுத்துப்பாரு
ஏருமே சரக்கெல்லாம் கட்டிப்போகும்
மெளிதான லோகமெல்லாம் தானேநீரும்”

“ கொள்ளவே கல்லுப்பு பலமோபத்து
கூறான வீரமது பலமோபத்து
கொள்ளவே இதுவிரண்டும் கல்வத்திட்டு
விருப்பமாம் சாமமிரண்டு அரைத்துக்கொள்ளு”

இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய கல்லுப்பு இதுவாகும்..

சுக்காண் கல்லு இது இல்லை என்பதை மிக தெளிவாக அவதானிக்க வேண்டும்... இது கடலின் நுறையால் உப்பாக மாற்றப்படும் கல்.

கடுமையானதாக இருக்கும், நிலத்தில் பூனீரு பூப்பது போல் இது கல்லில் கடலின் நுறையால் பூக்கும், ஆனால் கடல்நுறையும் இல்லை.. இதன் மோல் எந்தக்காலத்திலும் கடல்பாசி படியாது.. அதை தவிர்த்து மற்ற இடங்களில் படியும்..

இதை முறையாக சுத்தி செய்தால் இதையும் அறு சுவைக்கு பயன்படுத்த முடியும்,

கல்லுப்பு என்றால் சமையலுக்கு பயன்படும் உப்பை எடுப்பது இல்லை, கல்லுப்பு நீருக்கு கரையாத உப்பு என்பதை தெளிவாக படிக்க வேண்டும்..

சமையல் உப்பிலும் இதன் தன்மை கிடைக்கும் ஆனால் மிக குறைவாக இருக்கும், அதாவது 100க்கு 10 வீதம் என்று..

படங்களை பார்த்தால் தெரியும்..
























நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, October 2, 2014

சரசுவதி மகா மந்திரம் - இருள் நீங்கட்டும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே,

இன்று விசயதசமி என்று மிக கடுமையான பூசைகளில் இருக்கும் அன்பர்களுக்கு ஓர் மந்திரப்பதிவு..

இது ஓர் அற்புதமான மகா சரசுவதி மந்திரம்.., இன்றில் இருந்து ஆரம்பிக்களாம், கல்வியில் மேம்மையடைய நினைக்கும் ஆண், பெண் இருவரும் உபாசணை செய்யலாம். பல அறிய இரகசியங்கள் படிக்கும் போது நமக்கு தெளிவடைய இம் மந்திரம் மிக உதவியாக இருக்கும்..

சுமார் 15 ஆண்டுகள் நாம் இதை உபாசணை செய்து, இதன் உண்மையான சக்தியை தெரிந்துகொண்டோம்..

இது குருமூலமாக கிடைக்கவேண்டியது என்பதால் எமது குருமாரின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்...

சரசுவதி மகா மந்திரம்

ஓம் மகா சரசுவதி, ஓம் வாடி ஈசுவரியே பரமசக்தியே வா வா, ஓம் நம சக்தி வா, ஓம் கணபதியே வா, ஓம் மந்திர சங்ஙாரியே வா, ஓம் பூவும் வா, திருவும் வா, ஐயும் வா, சவ்வும் வா, கிலியும் வா, புவணாபதியும், புவணேசுவரியும் என் நாவிலும் சிந்தையிலும் முன் நிற்கவே சுவாகா...


இயந்திரம்...

உபாசணை செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் இதன் இயந்திர பூசைகள் தேவையில்லை என்பதால் அதை பின்னர் தேவைப்படுபவருக்கு ஏற்ப கிடைக்கும்..

கிரிகை.

இன்றில் இருந்து தினமும் மாலையில் இதை வடக்கு முகமாக இருந்து எதிரே கலைவாணி இருப்பதாக உவமைப்படுத்தி குரு வணக்கம் செய்து பின் இந்த மகா மந்திரத்தை 64 முறை உபாசணை செய்து விபூதி பூசவும்..
இது விளையாட்டு அல்ல.. யாரிடம் விளையாடினாலும் கலைவாணியிடம் மிக அவதானமாக இருக்க வேண்டும்...

நாவில் இருப்பவள் என்பதால் சற்று காராசாரமான வார்த்தைகள் வர தொடங்கும் ஆனால் அது உங்களை சோதிப்பதற்கு என்று நினைவில் இருந்துங்கள்..

வரம் கிடைக்க முன், அதற்கான தகுதியானவரா என்ற சோதனை எப்போதும் உண்டு..

பாரம்பரிய மந்திரங்கள் பதிவிடுவதில்லை என்று இருந்தேன், இருப்பினும் இன்று இருள் நீங்கிய முழு நாள் என்பதால் உங்களில் சிலரின் இருளாவது விலகட்டும் என்று பதிவிடுகிறேன்..

இதையும் அப்படியே பிரதி செய்து உங்கள் இணையத்தில் போட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம்.. உங்கள் பதிவாகவும் போட்டு சரசுவதியின் விளையாட்டில் சிக்கிக் கொள்ளவேண்டாம்..



















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

மூலிகை ஆய்வு...

வணக்கம் தோழர்களே,


எமது பயனத்தின் போது செயற்திட்ட இடத்தில் இருந்து சுமார் 24 கி மீ. தூரத்தில் இருக்கும் ஓர் பெரிய காடு சென்று சில மூலிகைகள் ஆய்வுகள் மேற்கொண்டோம்... அப்போது நாம் கண்ட சில மூலிகைகள் உங்களுக்கு தொடர்சியாக பதிவிடுகிறேன்..


அத்துடன் பல மாதங்களாக தேடிய ஓர் அற்புத மூலிகையும் கிட்டியது.. அது தொடர்பான விளக்கம் பின்னர் தருகிறேன்..


















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, October 1, 2014

செயற்திட்டம் ஆரம்பம்....

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே...
செயற்திட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...
இன்னும் ஓர் வாரத்தில் நிலப்பரப்புக்கள் சுத்தம் செய்ய வேலையாட்களை நியமித்திருக்கிறேன்.. அதை எமது மாணவர் ஒருவர் அங்கிருந்து மேற்பார்வை செய்வார்.. அதன் பின் எமது கட்டிட வேலைகல் தொடங்க வேண்டும்.. எப்படியாவது இந்த மாத இருதிக்குள் கட்டிட வேலைகள் முடித்து அங்கு செல்லவேண்டும் என்ற நோக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..
கடந்த வருடம் இதை ஆரம்பிக்கலாம் என தொடங்கிய போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்படியே நிறுத்திவைத்திருந்தேன்.. ஆனால் இம்முறை எது எப்படி இருந்தாலும் இதை செய்வது என்ற முடிவுக்கு வந்தாயிற்று..
உங்களில் பலரின் ஒத்துலைப்பு கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் மிக மிக சிலர் மட்டுமே இதுவரை உதவியிருக்கிறீர்கள்.. பலரும் குடும்ப்பப் பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சினை என்று காரணம் காட்டியிருக்கிறீர்கள்.. பரவயில்லை... ”வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்” என்றது போல் நடப்பது நன்மைக்கே என்று செயற்படவேண்டியது தான்..
எமது வாசகர் ஒருவர் எமது செயற்திட்டத்துக்கான இணையத்தை தயார்செய்து வருகிறார்.. விரைவில் தளம் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் மற்றும் வாசகரள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்..












எமது சேவை தனிப்பயன் உடையது அல்ல, இது உங்கள் சேவை உங்கள் செயற்திட்டம்.. அதின் வெற்றி உங்கள் முயற்சியில் தான் இருக்கிறது..
விரும்பிய போது நேரில் வந்து கற்கும் வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படிகிறது.. உங்கள் முயற்சி உங்கள் வெற்றி..
தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படிகிறது.. இதன் செலவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்,, முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்.. உங்கள் உதவியுடன்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்