Tuesday, October 29, 2013

இரசமணி பாகம் 2

அன்பான வாசக தங்கங்களே,

இரசமணி பற்றி முன்னமே நாம் கூறியிருக்கிறேன், அது ஒன்றும் சின்ன விடயம் அல்ல. அது பற்றி ஓர் ஆய்வு கட்டுரையே செய்து என்னிடம் உள்ளது அது 8000 சொற்களை கொண்டது நேரம் வரும்போது விளக்கமாக பதிவிடுவேன்.

பல வலைத்தளங்களில் இரசமணி பற்றி விளக்கங்கள் இருக்கின்றது தானே, அதில் உங்களுக்கு திருப்தி இல்லையா? 

இரசம் கட்ட வோண்டுமானால் உதவி செய்கின்றேன் ஆனால் சாரணைகள் செய்து அதன் பலனை அடைய நானே இன்னும் முயற்ச்சி செய்யவில்லை.

இரசமணி , இலிங்கம் என பல வடிவங்களை செய்து காட்டுவது மிக இலகுவானது ஆனால் அதன் சக்தியை பெறுவது மிகவும் கடினம். இரசமணி கட்டியதன் பலனாக இறந்தவர்களையும் துன்பத்தில் வாடுபவர்களும் தான் அதிகம் நான் பார்திருக்கிறேன்.

தவறாக கட்டிவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். இரச வாதம் என்பது மிகப்பெரிய விஞ்ஞானம் ஆகையால் ஆபத்தும் அதிகமாகவே இருக்கும்.

சிவ சொத்து குல நாசம் என்பது அதனால் தான். என்னை கேட்டால் சர்வ நாசம் என்றே கூறுவேன்.


நனோ தொழில் நுட்பம் கூட ஆபத்தானது இல்லை ஆனால் இது மிகவும் ஆபத்தானது. 

சித்தர் பாடல்களை படித்துவிட்டு செய்ய முயன்று வாழ்வை இழந்துவிட வேண்டாம். 

உண்மையான குருவும் இறைவனின் ஆசியும் இருந்தால் எல்லாம் கிட்டும். காத்திருங்கள் சில காலம் அனைத்தும் சாத்தியமே.

ஒரு வாகட பாடல்

” கொள்ளவே முன்வைத்துத் துருசுச்சுண்ணம்
கொடிபடவே விராலியிலைக் கிட்டால் நீராக
துள்ளவே சூதந்தான் பலமும் நாலு
துடியாக வயக்கரண்டி தன்னிலூற்றி
கள்ளவே துருசிட்ட சாற்றைவிட்டு
கனமாக கொதியிடவே சூதம்கட்டும்
..........................................................................
.......................................................................... ”

இப்பாடல் இரசமணி செய்ய அல்ல இரசம் கட்ட மட்டுமே என்பது ஞாபகம் இருக்கட்டும். அது மட்டும் அல்ல இவருக்கு தெரியாததால் பிதற்றுகிறார் என்று என்னியவர்களுக்காகவும் தான்.


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அடியேனே பல சூடு பட்டிருக்கிறேன்.
மீண்டும் ஓர் சூடு பட ஆசை இல்லை.




















 படத்தை பார்த்தல் என்ன புரிகிறது.

”தென் நாடுடைய சிவனே போற்றி”
 
மிக்க நன்றி.

திரு சிவ ஸ்ரீ மா. கோ. முதலியார்
 

பிள்ளையார் காய் வெட்ட

வணக்கம் மாணவ மணிகளே,

இன்னும் ஓர் காய் வெட்டு பதிவு,

மந்திரம்

ஓம் கட்டறு கட்டறு கணபதி கட்டறு வில்லறு வினையறு வில்ணானறு சொல்லறு சுனையறு சொன்னவன் நாவறு செய்தவர் ஆரானாலும் சிதம்பரத்தின் ஐயன் ஆணை தீங்கு வினை நீங்கு நீங்கு சிவாகா 

ஓம் ஆம் அங்ங உங்ங சிங்ங சிவாயா சிதம்பரத்தின் ஆணை இவர் உச்சியை விடு உதட்டை விடு மார்பை விடு அரையை விடு முந்தானையை விடு பாதத்தை விடு பரமேஸ்வரன் ஆணை பாதத்தை விட்டு விலகு சிவாகா. 

கிரிகை 

பிள்ளையார் மடை குரு மடை வைத்து பிள்ளையார் அட்ஷரத்தில் இருத்தி காய் வெட்டி கிரிகை அனைத்தும் முடிக்கவும். 

அட்ஷரம் தெரியும் தானே.

நன்றி.

உக்கிர வீரசக்தி - எதிரி பட காய் வெட்ட

வணக்கம்,

இன்னும் ஓர் காய் வெட்டு மந்திரம் உங்களுக்கா.

வாசகர்கள் யாரும் சித்த வைத்தியத்தில் நாட்டம் உள்ளவராக தெரியவில்லையே காரணம் என்னவோ?

மந்திரமும் மருந்தும் தெரிந்தால் தான் அது பயன் உள்ளதாக அமையும், தனியாக மந்திரமோ மருந்தோ பலன் தராதது என்பதை மனதில் நிருத்தி படியுங்கள். இறைவனின் ஆசி என்றும் இருக்கும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீங்ங சங்ஙாரா ஓம் நமோ பகவதி சர்வ இந்திராணி அக்கினி என் எதிரி தலையை சங்ஙரி சங்ஙரி இரண கால உக்கிர வீர சக்தி இவர் சத்துருவை சென்றேரி சாடு சாடு உண்ணு உண்ணு முறி முறி தெறி தெறி அறு அறு சிவாகா. 

அட்ஷரம்




















கிரிகை

பிள்ளையர், முருகன், குரு மூன்று மடை வைத்து, பூமியில் அட்ஷரம் கீரி அதில் உரியவரை இருத்தி 6 எலுமிச்சம் காய் வெட்டி தண்ணீர் ஓதி வார்த்து உடுத்து மாற்றி அட்ஷரம் கட்ட சகல பேய் பூத பிசாசு சூனியம் விலகும்.

தண்ணீர் ஓதல், முருகன் அட்ஷரமும் பதிவுகளை படிக்கவும்.

நன்றி.

பேய்களை கோடு கீரி மறிக்க

வணக்கம்.

பேய் விரட்டல் தொடர்பான பதிவுகளில் இதுவும் முக்கியமானது.

குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம், அதற்கான பதிவே இது.


மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.

மந்திரம்

ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன். 
அரி நம சிவாயா நில் சிவாகா. 

கிரிகை

மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும். 

நன்றி.

Monday, October 28, 2013

எதிரிக்கு காய் வெட்ட - மாரணம் கர்மம்

வணக்கம் தோழர்களே,

இதுவும் ஓர் மாரண முறையே. கலியுகத்தில் நல்லது நடப்பதை விட கெடுதியே நடக்கும் என்று இருப்பதால், நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். மந்திரப்பிரயோகம் அதிகரித்துவரும் இக்காலத்தில் எவரையும் இலகுவில் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

தற்பாதுகாப்பு என்பது நமது கையில் இருக்க வேண்டுமே தவிற மற்றவரை நம்பி அவர் நம்மை ஏமாற்றும் வகைக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.

அதற்காகவே இவ்வாறன பதிவுகளை இடுகிறேன்.

இவை அனைத்தும் நீங்கள் தனியாக செய்து பலனடையும் வகையிலேயே பதிவிடுகிறேன்.

மந்திரம்     

ஓம் ஐயும் கிலியும் சிங்ங சிவாயா வா வா ஓம் அம் அம் உங் உங் அர அர அரங்ங அரங்ங என்னை பகைத்த சத்திராதிகளை சங்ஙரி சங்ஙரி அவர் எதிரே சென்று தாக்கு தாக்கு எதிரெறு எதிரெறு உச்சாடு உச்சாடு சிவாகா.

கிரிகை 

வெள்ளிக்கிழமையில் உங்கள் இரவு நேர இறை வழிபாட்டின் போது ஒரு எலுமிச்சம் காய் எடுத்து அதற்கு குங்குமம் பூசி மந்திரம் 108 உரு செய்து காயை இரண்டாக வெட்டி உங்கள் வெளி வாசலில் எறியவும்.

நன்றி


அஷ்டகர்மம் - எதிரி மாரணம்

வணக்கம் மாணவர்களே,

அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம் என்பது நீங்கள் அறிவீர்கள், அப்படியான ஓர் பதிவே இது.

அடிக்கடி உங்களை சத்துருக்கள் தொல்லை செய்கிறார்களா கவலை வேண்டாம், வேரு பூசரியிடமும் போக வேண்டாம், இந்த மந்திரதை பிரயோகம் செய்து உங்களின் எதிரிகளையும் அவர்கள் செய்த ஏவல்கலையும் நீங்களே தீர்த்து சுக வாழ்வை பெற்று மற்றவருக்கு உதவி செய்து இன்பமாக வாழுங்கள். 

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் அங் அங் உருவாக அர கர சிவ சிவ சிவானந்தம் சிவாய நம சிவாயா.

கிரிகை

தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது சத்துரு பெயரை நினைத்து 9 முறை உரு செய்து தண்ணீர் தர்ப்பனம் செய்யவும்.

நன்றி.

கிரக தோஷம் நீங்க தேங்காய் வெட்ட

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

நவக்கிரக தோஷத்தால் இன்று பலரும் படும் பாடு மிகவும் கொடுமையானது. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்களிடம் பணம் பறிக்கும் பூசகர் ஒருபக்கம் ஐயர் ஒருபக்கம் சோதிடர் ஒருபக்கம் என பட்டியல் நீண்டு செல்கிறது. அப்படி பணத்தை இழந்தும் பலனில்லை என்று இனி புலம்பத்தேவையில்லை.

இது ஓர் அனுபவ கையாட்சி முறையாக எனது முன்னோர் நோயாளிகளுக்கு கிரக தோஷத்தால் வந்த பலதரப்பட்ட நோய்களையும் தீர்த்து அவர்களின் குடும்ப கஷ்டங்களை நீக்கி சுக வாழ்வை கொடுத்து ஆசி பெற்றிருக்கின்றனர்.

இது எனது அனுபவமும் தான்.

மந்திரம்.

ஓம் கங் கணபதி கவுரி புத்திராயா நம ஓம் சக்தி வினாஷக தரும புத்திராயா நம ஓம் இவரை பிடித்த  நவக்கிரக தோஷமும் நிவாரணாயா சிவாய நம. 

கிரிகை

பிள்ளையாருக்கு ஒரு மடையும் ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வோர் மடையும் வைத்து, அவல் கடலை வென் பொங்கல் படைத்து தேங்காய் உடைத்து தூப தீபம் காட்டி, உரியவரை முன் நிருத்தி தேங்காய் எடுத்து அதில் கற்பூரம் ஏற்றி அவர் தலையின் மேல் வைத்து 108 உரு செய்து தேங்காய் வெட்டவும். 

மேதாவிகளுக்கு குறிப்பு. 

கற்பூரத்தை தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் தேங்காய் சூட்டில் வெடிப்பதுடன் தீ உரியவரின் தலையில் விழும். ஆரம்பத்திலும் இருதியிலும் பற்ற வைக்கவும்.

நன்றி


நீரிழிவு சிகிச்சை பாகம் 1

வணக்கம் மாணவர்களே,

நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும் அதற்காக மருந்தாக்களும் இங்கு படக்காட்ச்சியாக பதிவிடுகிறேன்.

மயக்க நிலையில் இருந்த நோயாளியை தொடர்ந்து மூன்று நாட்கள் கடின மருந்துகளால் சுய நினைவுக்கு எடுத்து இன்று வேது நீர் தயாரித்து தோசங்களையும் உடல் நஞ்சுகளையும் நீக்கி நாடியை சீர் செய்து நமது மருந்துகளால் முற்றாக உடலை சீர் செய்ய இன்று முதல் ஆரம்பிக்கும் காட்சிகள் இவை. அத்துடன் காட்டில் சென்று சில மூலிகைகளை எடுக்கும் காட்சிகளும் அடங்கும்.

சுய நினைவுக்கு திரும்பிய பின்



























நீரிழிவு நோய்க்கான மருந்துக்கு சரக்கு சூரணம் - குளிகை அரைக்க தயார்

















துரிசு பசு தயிரில் சுத்தி செய்தல்


















மனோசீலை - இஞ்சிசாற்றில் இ சாமம் அரைத்து உளர்த்தல்















மூலிகை ஆய்வு - நீரிழிவு நோய்க்கான சில படக்காட்டிகள் மட்டும்.







நன்றி

Sunday, October 27, 2013

நீரழிவு நோயின் கொடுமை

வணக்கம் தோழர்களே,

சற்று வேலைப்பளு காரணமாக புதிய பதிவுகளை எழுத முடியாது போனது. அத‌ற்கான‌ காரணத்தை இங்கே கானமுடியும். 

நீரழிவு நோயின் கொடுமையினால் சுய நினைவை இழந்த ஒருவருக்கான சிகிச்சையின் நிமித்தம் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போரட்டத்தின் பின்னர் அவரை சுய நினைவுக்கு கொண்டுவந்து அவருக்கான மருந்துகளை தயாரிக்கும் வேலையில் சற்று ஓய்வு இன்று கிடைத்தது.

கடந்த சில வருடங்களாக நீரழிவு நோயினாள் பாதிக்கப்பட்டு தனது கால் பெரு விரலை இலந்த இந்த தாயாருக்கு தற்போது தனது மற்றய காலையும் இலக்க நேரிடும் என்று அலோபதி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சாதாரன இந்த நீரழிவு எனும் நோயைக்கூட சரி செய்ய முடியாத அலோபதி வைத்தியம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே உகந்தது.

4448 நோய்களை ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு அதற்கான சரியான மருந்துகளையும் எழுதி வைத்திருக்கும் சித்தர்கள் எந்த கல்லூரியில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள். இவர்களை மறந்து திரியும் மனிதர்களை என்ன சொல்வது.

நீரழிவுக்கு நிரந்தர தீர்வு சித்த வைத்தியத்தில் உள்ளது அது எம்மிடமும் உள்ளது என்பது இன்னும் சில வாராங்களில் இந்த வலைப்பதிவில் கானலாம்.

நீரழிவுக்கான மருந்தாக்கள் இங்கு ஆரம்பகட்டமாக காட்டப்பட்டுள்ளது சிகிச்சைகள் வரும் தினங்களில் கானலாம்.



  





















திரிபலா சூரணம் தயாரிக்கும் போது எனது தந்தையாரிடம் இருந்து எனது மகன் கதிர்வேல் முதலியார் கற்றுக் கொள்கின்றார். 












சிறு குறிஞான்












நீர் பிரமி













நெல்லிக்காய் கந்தகம் - இது சக்தி

















 கல் மதம்
















27 சரக்கு வகை















 சீனம்



















துருசு















 கரியபோலம் - மூசாம்பரம்

















 கல் நார்

















இதனுடன் பாதரசம் சேரும் - இது சிவன்

ஒரு மருந்தில் சிவமும் சக்தியும் சேர்ந்தால் அதை குரு மருந்து என்று கூறலாம். அதாவது காரமும் சாரமும் சேர்வது அது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கும்.

பாத ரசம் அனைவருக்கும் தெரியும் என்றதால் படம் இட வில்லை.



மருந்துகளின் சுத்தி முறைகள் அடுத்த பதிவில் கானலாம்.

நன்றி

திரு சிவ ஸ்ரீ மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்


Friday, October 25, 2013

காய் வெட்ட - நூல் கட்ட - தடை வெட்ட - விஸ்னு சக்கரம்

வணக்கம் மாணவர்களே,

பேய் பூத பசாசு சூனியம் செய்வினை என எப்படிப்பட்ட துஷ்ட மந்திரங்களை பயன்படுத்தி தீங்கு செய்திருந்தாலும் அதை விலக்கி நோயாளியை காப்பது ஓர் வைத்தியரின் கடமை அல்லவா. அப்படி ஓர் தேவைக்கு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரப்பிரயோகம் செய்யும் ஆற்றல் வைத்தியருக்கும் மாந்திரீகருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்த மந்திரம் தலையாய மந்திரமாகும்.

விஸ்னு சக்கரம் இது காக்கும் சக்கரம் என்று அனைவரும் தெரிந்ததெ, அதை பயன்படுத்த மந்திரமாக இருந்தால் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.

மந்திரம் 

ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர் கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம் அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன் அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன் உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா ( என்று சொல்லி நூல் கட்டலாம்) 

கரு நாவுடையான் ஆணை  அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா ( என்று சொல்லி காய் வெட்டலாம் - தேங்காய் வெட்டி தடைகளை வெட்டலாம்) 

கிரிகை 

மந்திர சித்தி செய்த பின்னர். 9 முறை உரு செய்து பயன் படுத்தலாம்.

நூல் கட்டல் தொடர்பான முறையை வரும் பதிவில் எதிர் பாருங்கள் 

நன்றி.

வாசகர் கவனத்துக்கு

வணக்கம் தோழர்களே,

எனது வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்துவிட்டு விளக்கம் போதாது என்று எழுத வேண்டாம். 

பதிவுகளை நன்கு ஆராய்ந்த பின்னர் விளக்கம் கேட்டால் உதவியாக இருக்கும். 

பதிவுகளின் தன்மையை பற்றி கருத்து வெளிவருவது குறைவாக இருப்பதன் காரணம் என்னவோ? 

நன்றி. 

Thursday, October 24, 2013

விக்னேஸ்பரர் வாலாயம்

வணக்கம் தோழர்களே,

இதுவும் ஓர் அரிய பதிவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெரும்பாலானவர்கள் வினாயகரையே தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வழிபடுகிறார்கல் என்பதற்கு தெரு எங்கும் இருக்கும் வினாயகர் கோவில்களே சாட்சி.

அப்படி வினாயகரை வழிபடுவபவர்கள் இந்த மந்திரத்தை சித்தி செய்து வினாயகரின் ஆசியை பெறலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வினாயகர் மந்திரம்

ஓம் ஓங் றீங் அங் உங் சிங் கணதேவாய நம சகல துரித பூத வாதைகளும் நசி மசி சுவாகா.

மூல மந்திரம்

ஓம் நமோ பகவதி ஐயும் கிலியும் சவ்வும் கணபதி வசி வசி சுவாகா.


அட்ஷரம்














 கிரிகை

தினமும் காலையில் வெத்திலையில் விபூதி பரப்பி அதில் அட்ஷரம் கீரி உரு 108 செய்து ( மூல மந்திரமும் சேர்த்து ) அதை நெற்றியிலும் பூசி சிறிது வாயில் போடவும். இப்படி மண்டலம் செய்யவும்.

அஷ்ட கர்ம பிரயோகத்துக்கு மிகவும் உதவி செய்வார்.

நன்றி.

அகோரம் தனிக்க - பரசிராமர் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.

முதலில் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டால் தனது குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.

மந்திரம்

ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா   

 
கிரிகை

சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை.

ஆனால் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டல் பின்னர் இதை பயன் படுத்தவும். இது என் மீது ஆணை.

நன்றி. 

அகோரம் தனிக்க - வினாயகர் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

முன்பு கூறியது மாரி அம்மன் துனை கொண்டு அகோரம் தனிக்க அல்லவா இது வினாயகர் துனை கொண்டு தனிப்பது.

அகோரம் தனிப்பது என்றால் இலகுவான விடயம் என்று என்னி அவசரப்பட்டு உங்கள் திறமையை காட்டி பேர் கெட்டு போகவேண்டாம்.

இது ஓர் தனிக்கலை. மந்திரங்கள் கோடான கோடி இருப்பது போல் தேவதைகளும் இருக்கிறது அல்லவா அப்படியனால் அனைத்து தேவதைகளும் ஒரே மந்திரத்துக்கு அடங்காது என்ற நினைவு உங்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.

வரும் பதிவுகளில் முக்கியமான தனிப்பு முறைகளை பதிவிடுகிறேன் சரியாக சித்தி செய்த பின் உங்கள் சாகசம் தொடரட்டும்.  

மந்திரம்

ஓம் சரவணப்பொய்கையில் சண்முகன் தோன்றிய சத்தம் கேட்டு சதாசிவன் சிந்தை மகிழ்ந்திருக்க சூரன் விட்ட நெருப்பை உன் துதிக்கையால் அமிழ்த்தினால் போலே தனியப்பா தனி ஆதி விக்னேஸ்வரனாணை சர்வாங்குசம் அடங்க தனி தனி சுவாகா. 

கிரிகை

முதற் பதிவை பார்க்க.

நன்றி.

அகோரம் தனிக்க - மாரி அம்மன் மந்திரம்

வணக்கம் அன்பர்களே,

இதுவும் ஓர் அவசியமான பதிவாகவே இருக்கும்.

அகோரம் தனிக்க என்றால்...

சாமி வந்து ஆடுகிறவர்களை நீங்கள் பார்திருப்பீர்கள் இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாந்திரீகர் தனது தேவைக்காக ஒருவர் உடல் மேல் குறிப்பிட்ட தேவதை அழைத்து குறி கேட்பது.

மற்றது ஆலய வழிபாடு செய்யும் போது அல்லது சில விசேட பூசை நேரங்களில் சிலர் உடலில் சாமி வந்து ஆடுவார்கள், இப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களின் ஆவேசத்தை தனியச்செய்து அவர்களை சாந்தபடுத்தி மீண்டும் அவராக மாற்றுவதே இது.

மந்திரம் 

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் அகோரமாரி அகோரம் தனி அவ்வும் தனி சவ்வும் தனி ஆதி சர்வ சக்தி அங்குசம் அடங்க தனி முத்துக்கண் மோகாம்பரி அம்மை ஆணை தனி சுவாகா. 


கிரிகை

மந்திரம் சித்தி செய்த பின்னர் தேவை ஏற்படும் போது நமது வலது கையை சாமி ஆடுபவரின் தலையில் வைத்து சற்று அழுத்தி மந்திரத்தை 3 முறை கூற தனிவார். 

மந்திர சித்தி பற்றி முன்னமே கூறியுள்ளேன்.

நன்றி 

Tuesday, October 22, 2013

சபை வசியம் மற்றும் எனது மின் அஞ்சல்

வணக்கம்.

சற்று வேலை காரணமாக பெரிய பதிவுகளை தர முடியவில்லை இருப்பினும் உங்கள் எதிர்பார்ப்பு வீன் போகாது.

பல வாசகர்கள் எனது மின் அஞ்சல் முகவரியை கேட்பதால் அது muthaly@gmail.com  இங்கு தருகிறேன். ஆனால் உடனடியாக பதில்களை எதிர்பார்த்து அஞ்சல் அனுப்ப வேண்டாம். 

சபை வசியம் என்பது நீங்கள் யாதேனும் கூட்டங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்கள் உங்களின் வசமாக பேச வைப்பதற்காக செய்வதாகும். 

மந்திரம்

ஓம் நமோ பகவதி அரி ஆயி தேவி சிங்ங மோகினி தேவ மோகினி நார முனி சிவ சக்தி என் முகம் பொண் முகம் கண்டவர் எல்லாம் என்வசமாகவே சுவாகா.

கிரிகை

ஒரே நிறமான பசுவும் கன்றும் போட்ட சாணியை எடுத்து எரித்து சாம்பலாக்கி சவ்வாது சேர்த்து பதனம் பன்னவும். 

இதில் 108 உரு செய்து பூசிப்போக அனைவரும் வசியமாகி பேசுவார்கள்.

நன்றி.

பேய் விரட்டல் ஓர் பார்வை

வணக்கம் தோழர்களே,

பேய் விரட்டல் பற்றி பல விதமான கருத்துக்கள் இருக்கிறது அதில் எனது 20 வருட அனுபவத்தையும் கருத்தினையுமே இங்கு பதிவிடுகிறேன்.

முதலில் பேய் என்பது என்ன என்ற தெளிவான விபரம் தெரிந்தால் மட்டுமே அதை பற்றி பேச வேண்டும். ஒருவருக்கு நண்பராக இருக்கும் நபர் மற்றவருக்கு எதிரியாக இருக்கலாம் அல்லவா ! அதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் அவர் தேவைக்காக வாலாயம் மற்றும் வசியம் செய்யும் தேவதைகள் மற்றவருக்கு பேயாக தெரியலாம், ஆகவே பேய் பற்றி பேசமுதல் நீங்கள் வணங்குவது மட்டுமோ அல்லது ஆலய வழிபாடு இல்லாத தேவதைகளோ பேய் என்ற முடிவுக்கு வந்துவிட கூடாது.    

இதற்கு மாராக தனியாக பேய் என சில கலைகளும் இருக்கின்றன அவற்றில் வண்ணாரப்பேய்கள் ஊத்தைக்குடி பேய்கள் கொல்லி வாய் பேய், குறளிப்பேய்களும் என பல பிரிவுகள் இருக்கின்றன.

இவை தவிர  தேவதைகளின் மாறுபட்ட செயட்பாடும் அவற்றின் தன்மைகளையும் வைத்து அவற்றில் பல மனிதருக்கு தரும் தொல்லைகலாலும் அவற்றையும் பேய் என கருதும் நிலையும் இருக்கிறது.
 

அஷ்ட கர்ம பிரயோகத்தில் 5 வித கலைகள் மனிதருக்கு தீங்கு விளைவிற்க கூடியவையாகவே இருக்கின்றன. அதனால் பேய் விரட்டல் என்பது சட்டென முடிவெடுத்து செய்வதோ அல்லது ஒரு மந்திரத்தால் முடிவதோ அல்ல. அதில் நிறைய பகுதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒரே பதிவில் தருவது கடினமானது இருப்பினும் சில பொதுவான முறைகளும் இருக்கின்றன அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்.

பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியம் இவை யாவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவையே ஆகையால் முதல் பதிவு ஒன்றில் இது தொடர்பான ஓர் அரிய மந்திரத்தை பதிவிட்டுள்ளேன் அதை படியுங்கள் அனைத்துவிதமான பேய்களும் அதற்கு கட்டும்.


சில குறிப்பிட்ட பூசை முறைகள் இதற்காக இருக்கிறது அதை தெரிந்து கொண்டால் அனைத்து வகை பேய்களையும் விரட்டலாம். ஆனால் அது உங்களது இஷ்ட தேவதையாக இருந்தாள் எப்படி அடித்து விரட்டுவது. அப்படி விரட்டினால் அது உங்களிடமும் வராது அல்லவா.

உதாரணமாக காளி உங்கள் வாலை தெய்வம் என்று வைத்துக்கொள்வோம், இப்போது ஒருவருக்கு காளியை வைத்து சூனியம் அல்லது செய்வினை செய்யப்பட்டுள்ளது என்றால், அவரின் மேல் பார்வையாக உள்ள காளியை விரட்டுவது உங்களின் வாலையை விரட்டுவதும் ஒன்றாகும் அல்லவா.

காளி சூனியத்துக்கு உதவுமா என்று மட்டும் கேட்காதீர்கள் அப்படி கேட்டால் நீங்கள் பேய் விரட்ட தகுதியற்றவர் என்றும் கற்கவேண்டியது அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம். 

சிந்தியுங்கள் மற்ற ஓர் பதிவில் மேலும் விளக்கமாக பேசுவோம்.

நன்றி


Monday, October 21, 2013

துற்கை அல்லது ஈஸ்வரி வாலாயம்

வணக்கம் தோழர்களே.

மீண்டும் ஓர் வாலை மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.

திரிபுர சக்தி வாலை மந்திரம். இது துற்கையை குறிக்கும் அல்லாள் காளியை குறிக்காது என்று உனரவும்.

துற்கை என்பதும் காளி எபதும் மாந்திரீக கட்டத்துல் வெவ்வேறு சக்திகளே. குறிப்பாக இருக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் வவ்வும் அம்மே அம்மே ஆயி ஆயி ஈஸ்வரியே நான் இரவும் பகலும் உருக உருக திருமுகம் என்முகமாகவே சுவாகா.


அட்ஷரம்























கிரிகை

வாலாயம் செய்ய என்ற பதிவை பார்க்கவும்.

நன்றி.

வாலாயமும் வசியமும்

வணக்கம் அன்பர்களே.

மாந்திரீகம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை நிச்சயமாக எனது அரிவுக்கு எட்டியவரை விளக்கம் தார முயச்சிக்கிறேன். ஆனால் புதிய பதிவுகளை தினமும் டைப் செய்து பதிவிடவே நேரம் போதுமானதாக இருக்கிறது என்பதால் உங்கள் சந்தேகங்கள் தீர சற்று தாமதமாகலாம் ஆனால் நிச்சயமாக பதில் கிடைக்கும்.

வாலாயம் என்பது வேரு வசியம் என்பது வேரு...

உதாரணமாக பார்போம் தந்தை தாய் தங்களின் கடமைகளை குழந்தைகட்கு கண்டிப்பாக செய்வார்கள். செய்யவே வேண்டும் என்ற கடமையும் கண்டிப்பும் இருக்கிறது அல்லவா, ஆனால் சித்தப்பா சித்தி அல்லது மாமா மாமி க்கு அது கண்டிப்பு இல்லை தானே ஆனால் உங்களிடம் ஏதேனும் பலனிருந்தாள் அவர்கள் தேவைக்கேற்ப செயற்படுவர், அதுவே நாங்களும் ஓர் காரியம் தேவையானால் அதை யாரிடம் கேட்கவேண்டும் என்று சிந்தித்து தானே செயல்படுகிறோம்.

இந்த வித்தியாசம் உலகில் எங்கும் எதிலும் கானலாம்.

குறிப்பு

மடை வைத்தல் என்றால் வெத்திலை கொட்டைப்பாக்கு கதலி வாழைப்பழம் இவற்றை முறைப்படியாக வைத்து பூசை செய்வதாகும்.

அடுத்துவரும் பதிவொன்றில் மாந்திரீக விடயங்களை காட்சியாக தருகிறேன் சற்று காத்திருங்கள்.

நன்றி.

குழந்தை பேரு - பென் மலடு இல்லவே இல்லை

வணக்கம் தோழர்களே

அம்மை நோயினால் குழந்தை இல்லை என்ற கவலை வேண்டாம். அதற்கும் மருந்து இருக்கிறது ஆனால் அதற்கான செய்முறைகளை நான் சொல்லி நீங்கள் செய்வது என்பது கடினமாக இருக்கும். அத்துடன் சரியாக எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சினை என்று பார்த்த பின்னரே சரியான மருந்து கூறமுடியும். பென்களை பொருத்தவரை 6 நிலைகளில் குறைகள் இருக்க வாய்பு இருக்கிறது. அதுமட்டும் இல்லை உங்கள் கனவரின் உடல் நிலையிலும் இதற்கு தொடர்பு இருக்கிறது அல்லவா ஆகயால் சரியான ஓர் மருந்தை கூருவதானால் அதற்கு பலதரப்பட்ட கேல்விகளை கேட்கவேண்டும். வெளிப்படையான தலத்தில் அதை கேட்பது சரியாக இருக்காது அல்லவா.

உன்மையை சொல்ல வேண்டுமானால் பென் மலடு என்று ஓர் விடயம் அல்ல அதை என்னால் நிரூபிக்க முடியும். ருதுவான பென் சூதகம் வருவரையிலும் கர்ப்பம் தரிக்கும் ஆற்றல் பெற்றவலே. ஆனால் ஆண் மலடு உண்டு, அதற்கு மருந்து செய்வது மிகவும் கடினம் இருப்பினும் முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்து.

என்னிடம் இதுவரையிலும் வந்தவர்கள் சிலரே, அவர்களில் ஆண் மலடு யாரும் இருக்காததால் எனது வேலை இலகுவாகவே முடிந்தது. அனைவரும் நன்பர்கள் அனைவருக்கும் குழந்தைப்பேரு கிட்டியது இறைவனின் அருளால்.

குழந்தை இன்மை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் என்னை மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டால் அதற்கான மருந்துகளை நீங்கள் முயற்சித்துபார்க ஏற்றவரையில் என்னால் இயன்ற வரை உதவி செய்கின்றேன்.

இங்கு பொதுவான ஓர் மருந்தை அனைவரின் நலன் கருதி பதிவிடுகிறேன். இதை பென்கள் தொடர்பில் குழந்தை இன்மை பிரச்சினை என உருதியாக தொரிந்தால் முயச்சித்து பாருங்கள் ஆரம்பகட்டமாக இது இருக்கட்டும்.

இதனால் மட்டுமே குழந்தை பேரு உண்டானவர்கள் இருக்குறார்கள்.  


மருந்து

நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து அதில் பாகல் இலை சாரு மூன்று துளி விட்டு மாதவிடாய் ஆரம்பமான தினம் தொடக்கம் 7 நாள் இப்படி காலையில் குடிக்கவும்.

கவனிப்பு

தொடர்ச்சியாக இதை செய்யவேண்டும் ஒரு நாள் தவரினும் பலனில்லை. அப்படியே 40 நாட்கள் கனவனுடன்  சேரக்கூடாது (போகம் செய்ய தடை).

பத்தியம்

நாட்பது நாள் உப்பு புளி கசப்பு முற்றாக நீக்கவும்.

உணவு சேர்க்கை

பெரும் சீரகம்
அசமதாகம் (ஓமம்)
உள்ளி
மிளகு
பெருங்காயம்


இவை சற்று அதிகமாக சமையலில் சேர்க்கவும்.

இது ஓர் அனுபவ ரீதியான எனது முன்னோர்களின் வாகட மருந்து. இதற்கு நல்ல குணம் உண்டு.

இவ்வளவு இலகுவானதா குழந்தை கிடைப்பது என்று என்னிவிட வேண்டாம், இது ஓர் அரம்ப நிலை மருந்தே என்பதையும் மருந்தின் மீது நம்பிக்கையும் இருந்தால் கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி

திரு சிவஸ்ரீ. மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்

கவனிப்பு வேண்டும்

வணக்கம் தோழர்களே.

கடந்த இரண்டு நாட்கள் கடுமையான வேலை காரணமாக புதிய பதிவுகளை இட முடியாது போனது.

இன்று இன்னும் ஓர் அரிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.

” எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் கான்பதரிது ”


என்ற கூற்றுக்கேட்ப, எவ் வலைத்தளத்திலும் இருக்கும் தகவல்களையும் அப்படியே நம்பிவிடாது அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

இது எனது வலைத்தத்திள் இருக்கும் தகவல்களையும் சேர்த்தே என்பது உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.

பல வலைத்தளங்களில் மாந்திரீகம் என்ற பேரிலும் வைத்தியக்குறிப்பு என்ற பேரிலும் சம்பந்தம் அற்ற தவரான தகவல்கள் தான் இருக்கின்றன. என்பது மிக வேதனைக்குறிய விடயமாகும்.

இன்னும் சிலர் சித்தர் பாடல்களை விரிவாக்கம் செய்கின்றோம் என்ற பேரில் அதன் பரிபாசையில் சிக்கி தவரான கருத்துக்களை எழுதுகின்றனர்.

இன்னும் சிலர் வழலை குருமருந்து ரசமணி முப்பூ ரசவாதம் என்ற பேரில் பாதி செய்முறையை காட்டி மீதிக்கு தங்களை தொடர்பு கொள்ள சொல்கிறார்கள்.

இப்படி பல குழப்பங்கள் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் நன்மைக்கே.

நன்றி.

Saturday, October 19, 2013

மூலிகை காட்சி

வணக்கம் தோழர்களே,

எனது மானவர்களுடன் கடந்த வாரம் மூலிகை ஆய்விற்காக சென்ற போது எடுத்த புகைப்படங்கள் சில உங்களுக்காக.

அத்துடன் பேதிக்குளிகைக்காக நேர்வாளம் சுத்தியின் போது எடுத்த சில காட்சிகளும் சேர்த்துள்ளேன்.

நேர்வாளம் சுத்தி செய்தல்





















செருப்படி மூலிகை

















கொடியார் கூந்தல் அல்லது முதியார் கூந்தல்



தண்ணீர் விட்டான் அல்லது சதாவேரி
















இம்பூரல்















நன்னாரி
















கருந்துளசி















நஞ்சருப்பான்
















இவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

Friday, October 18, 2013

புவனேஸ்வரி மந்திரம் - வாலாயம் செய்யலாம்

வணக்கம் தோழர்களே,

வாலாயம் செய்யும் தெய்வ வரிசையில் அடுத்து வருவது புவனேஸ்வரி மந்திரம். அதாவது சித்தர்கள் முதல் அகோரிகள் வரை பிரசித்தி பெற்ற இம் மந்திரத்தை முறைப்படி செய்யின் அட்டமாசித்திகளும் இலகுவில் கை கூடும்.

மந்திரம் 

ஓம் நமோ மாதங்கி ஈசுபரி ஸ்ரீயும் கிறீயும் சர்வ லோக வசீகரி கிலியும் சர்வ ராச வசீகரி கிலியும் சர்வ துட்ட மிருக வசீகரி புவனேஸ்வரியே சுவாகா. 

 அட்ஷரம்
















கிரிகை

சந்தன கல்லில் சந்தனத்தால் கீரி அதி இருக்கும் சந்தனத்தை தினமும் பொட்டிடவும். 

வாலாயம் செய்தல் பதிவை படிக்கவும். 

நன்றி.