Tuesday, October 15, 2013

சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம்

வணக்கம்,

மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.

நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.

மந்திரம்

ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா.

கிரிகை

உரு 43 மேல் 

நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்.

ஒரு செடியின் துளிர்களாக இருக்க வேண்டும்.

மிகவும் இலகுவான முறை அல்லவா. நம்பி முயன்று பாருங்கள்.

நன்றி

1 comment:

  1. ஐயா
    சாபம் நீக்க மேலே இருக்கும்
    மந்திரத்தை ஓதுவதா
    அண்பு கூர்ந்து விலக்கம் அலியுங்கள்

    ReplyDelete