Friday, August 30, 2013

சித்த வைத்தியம் கற்க விரும்புவருக்காக.

இது எனது முன்னோர்களின் அங்காதிபாதத்தில் இருந்து உங்களின் கவனத்திற்கு..

மேலும் தகவல் அறிய விரும்பியவர்கள் பதிவுகளை கேளுங்கள்.














நன்றி
சிவஸ்ரீ. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர் - கணி பொறியியலாலர்

Friday, August 16, 2013

இஷ்ட தேவதையை வாலாயம் செய்தல்.

ஒவ்வொறு மாந்திரீகருக்கும் வைத்தியருக்கும் அவர் தம் இஷ்ட தேவதை இருக்கும். அதை வழிபட்டே அவரவர் காரியங்களை செய்வர்.

வாலாயம் என்பது ஒரு தேவதையை நம் வசப்படுத்தி அதன் மூலம் நமது காரியங்களை (மாந்திரீக வைத்திய) சித்தி அடயச்செய்வதுவேயாகும். (நன்மை செய்யின் நன்மை கிடைக்கும்)

ஒவ்வொரு சக்திக்கும் தனிப்பிரயோக மந்திரமும் தந்திரமும் உண்டு அதனை குறிப்பிட்ட கால அளவு முறைப்படி செய்துமுடிப்பின் அதன் பலனை அடையமுடியும். வாலை ஒன்றோ அல்லது பலவோ தேவைக்கேற்ப இருக்கலாம்.

ஒரு வாலை சக்க்தியை தெரிவு செய்யும் போது நமது உடல், உள்ளம், இராசிச் சக்கரம், பட்ச்சி, நாம் இருக்கும் சூழல் அனைத்திலும் கவனம் செலுத்தவேண்டும், அத்தோடு குருவிடம் ஆசி பெற்று அதை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இங்கு ஒரு வாலை மந்திரமும் முறையும் தந்துள்ளேன், பிறதேவதைகளின் வாலாயம் தேவைப்படின் தயக்கமின்றி என்னிடம் கேட்கலாம்.

உங்களுக்கு என்று ஓர் தனி இடம் தேவை அது குடிசையாகவோ அல்லது வீடாகவோ இருக்கலாம் அனால் அங்கு உங்களை தவிர யாரும் இருக்ககூடாது. அப்படி தயார் செய்த இடத்தை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். நகர்புரம் அற்று ஓர் அமைதியான சூழலை தெரிவுசெய்து கொள்ளுங்கள். குடிசையாக இருப்பின் மிக நன்று. அங்கு வாசனைத்திரவியங்களின் வாடைகளும், நறும் மலர்களும், ஊதுபத்தி வாசமும் நிறைந்திருக்க வேண்டும்.

முத்துமாரி அம்மன் வாலை


ஓம் ஆதிமாரி ஆனந்தமாரி முக்கோணத்தில் முந்தியிருந்து முப்புரத்தை தகணம் செய்தவளே ஈசரிடத்தில் இடப்பாகம் பிரியாதவளே அடியேன் நினைத்த இடத்தில் வந்து வாக்கருலுவேன் என்று வரம் தந்த உக்கிரகால சிதம்பர பஞ்சாட்சர சக்தி அகாரம் வா உகாரம் வா மகாரம் வா ஆதி சக்தி ஆணை என்முன் வா வா சுவாகா.

கிரிகை.

பூரணை தினத்தில் அதிகாலையில் கடமைகளை முடித்து விட்டு சுத்தமான ஓர் இடத்தில் கிழக்கு முகமாக மஞ்சள் துணியை நிலத்தில் விரித்து அதன்மேல் தலைவாழை இலை போட்டு அதன்மேல் வெள்ளை பச்சை அரிசி ஒரு படி கொட்டி ஒரு சான் விட்டம் வரக்கூடிய வட்டமாக பரவி அதன்மேல் மஞ்சள்தூல் கலந்த நீர் சற்று தெளித்து பின் அதன்மேல் சிறிய பூரணகும்பம் வைத்து (மாவிலை கும்பம்) அதற்கு சிகப்பு பட்டு சாத்தி, செந்தாமரை மலர் வைத்து அலங்கரிக்கவும், கும்பத்தின் வலது பக்கத்தில் வாழையிலையில் மஞ்சளாள் வினாயகர் செய்து அருகம்புல் குத்தி மலர் வைத்து அலங்கரிக்கவும், இடது பக்கம் குருவை மனதில் நினைத்துக்கோண்டு ஒரு தாமரை மலர் வைக்கவும். படயலாக சக்கரை அமுது செய்து படைத்து பழங்கள் வைத்து தூப தீபம் காட்டி மனதை ஒருனிலைப்படுத்தி கும்பத்தின் முன்பாக சிகப்பு பட்டு விரித்து அதன்மேல் தியான முறையில் அமர்ந்து மந்திரத்தை 108 உருக்கொடுக்கவும் இப்படி காலை மாலை படயலை மட்டும் மாற்றி அடுத்துவரும் அமாவாசை வரை செய்யவும். படயல் மட்டுமே உங்கள் உணவு. அமாவாசை இரவு 1008 உரு ஜெபித்து பூஜை முடிந்ததும் அவ்விடத்தில் உறங்கவும். பூஜையின் பலன் அன்று இரவு உங்களுக்கு தெரியும்.

வாலை இயந்திரம். 

 

























செப்பு தகட்டில் இதை வரைந்து பன்னீரால் கழுவி கும்பத்துள் போட்டு கும்பம் வைக்கவும். பூஜைகள் முடிந்தபின் இதை கூட்டில் போட்டு இடுப்பில் கட்டிக்கொள்ள நீங்கள் எங்கு சென்றாளும் இது உங்களை காப்பற்றி வெற்றிதரும்.


குறிப்பு. 


இந்த காலங்களில் மது, மாது, மாமிசம் உன்பதையும் வெளியிட பிரயாணங்களையும் தவிர்க்கவும். நீங்களே உணவு சமைத்து உண்பது மிக அவசியம்.

உடலையும் உணர்வையும் கட்டுப்படுத்த முடியாதவருக்கு எதுவும் கைகூடாது.


நன்றி

முதலில் சித்திபெற வேண்டியது

மாந்திரீகமோ அல்லது சித்தவைத்தியமோ கற்க விரும்புவோர் முதலில் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.

மனதில் எவ்வித கலக்கமும் இருக்கக்கூடாது அமைதியான சூழலையும் இறைவன் மீதில் நம்பிக்கையும் எந்த சந்தர்ப்பதிலும் உணர்ச்சிவசப்படாமலும் கோபத்தை கட்டுப்படுத்தி மனதை ஒருனிலை படுத்த தெரிந்திருக்கவேண்டும்.

இந்தக்கலையை மறைமுகமாகவும் குருகுல கல்வி முறையிலும் சித்தர்கள் முதல் நம் முன்னோர்கள் வைத்திருப்பதன் காரணம், இதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும், இன்று இக்கலையை தவறாக கற்று அழிந்தவரே அதிகம்.

”குரு இல்லா வித்தை பாழ்” என்பதன் காரணம் இதுதான்.


சித்த வைத்தியமும் தமிழ் மாந்திரீகமும் இரண்டு பெரும் பிரிவுகள் ஆனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. அதனால்தான் முன்னோர்கள் “மணி மந்திர அவுடதம்” என்று பெயர் சூட்டினர், அதிலும் ”மந்திரங்களை” நடுவில் வைத்தனர். குறிப்பாக சொன்னால் சித்தர்களின் வேதியலாகட்டும் மருத்துவமாகட்டும் இவை இரண்டையும் சேர்ப்பது மாந்திரீகமாகும்.     

எத்தனையோ ஆண்டுகலாக சித்த மருத்துவக்கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்கள் (வைதியர்கள்) ஏன் வைத்திய துறையில் பிறகாசிப்பதில்லை? மாந்திரீகமே காரணம், கல்விச்சாலையில் இதை கற்க முடியாது. 

கல்விச்சாலைகள் மூலம் இதை கற்கலாம் என்றிருந்தால் அன்றே நமது முன்னோர்கள் அதை செய்திருப்பார்கள், தமிழை சங்கம் வைத்து வளர்த்த தமிழனுக்கு இது ஒன்ரும் கடினமாக இருந்திருக்காது. இது எனது கருத்து.

ஆகவே, இத்தலதின் மூலம் எனது பாரம்பரிய கல்வியை வெளிப்படையாக மாணவருக்கு தெரிவிப்பதே எனது நோக்கம்.

இனி வரும் பதிவுகளில் மாந்திரீகமும் வைத்தியமும் படிமுறைகலாக விளக்கப்படும்.

இத்துறையில் தேர்ச்சி பெற்றோர்கள் இத்தலத்தில் குறைகள் இருப்பின் அதை எனக்கு தடையின்றி சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


நன்றி

Thursday, August 15, 2013

அன்பின் நண்பர்களுக்கு..

எனது முதற்கண் வணக்கத்துடன் இந்த பதிவினை ஆரம்பிக்கின்றேன்.


பாரம்பரிய சித்த வைத்திய மாந்திரீக வம்சத்தில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த நான் எனது முன்னோர்களிடம் பெற்ற கல்வியையும் அனுபவங்க்ளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.

மாந்திரீக, சித்த வைத்திய, மூலிகைகள், மருந்துகள் தொடர்பான உங்களது சந்தேகங்களை தடையின்றி என்னிடம் கேட்க்கலாம்.

கடவுள் வணக்கம்


மந்திர வைத்திய வாகட வண்மை உரைத்திட
தொந்தி முகனொடு சங்ஙரன் சங்ஙரி வந்துமே
வீரபத்ர காளியும் எந்நேரமும் மக்களுக்கு அருள்செய்குவாம்.



















நன்றி
சிவஸ்ரீ திரு. கோவாணா முதலியார்