Friday, August 16, 2013

முதலில் சித்திபெற வேண்டியது

மாந்திரீகமோ அல்லது சித்தவைத்தியமோ கற்க விரும்புவோர் முதலில் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.

மனதில் எவ்வித கலக்கமும் இருக்கக்கூடாது அமைதியான சூழலையும் இறைவன் மீதில் நம்பிக்கையும் எந்த சந்தர்ப்பதிலும் உணர்ச்சிவசப்படாமலும் கோபத்தை கட்டுப்படுத்தி மனதை ஒருனிலை படுத்த தெரிந்திருக்கவேண்டும்.

இந்தக்கலையை மறைமுகமாகவும் குருகுல கல்வி முறையிலும் சித்தர்கள் முதல் நம் முன்னோர்கள் வைத்திருப்பதன் காரணம், இதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும், இன்று இக்கலையை தவறாக கற்று அழிந்தவரே அதிகம்.

”குரு இல்லா வித்தை பாழ்” என்பதன் காரணம் இதுதான்.


சித்த வைத்தியமும் தமிழ் மாந்திரீகமும் இரண்டு பெரும் பிரிவுகள் ஆனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. அதனால்தான் முன்னோர்கள் “மணி மந்திர அவுடதம்” என்று பெயர் சூட்டினர், அதிலும் ”மந்திரங்களை” நடுவில் வைத்தனர். குறிப்பாக சொன்னால் சித்தர்களின் வேதியலாகட்டும் மருத்துவமாகட்டும் இவை இரண்டையும் சேர்ப்பது மாந்திரீகமாகும்.     

எத்தனையோ ஆண்டுகலாக சித்த மருத்துவக்கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்கள் (வைதியர்கள்) ஏன் வைத்திய துறையில் பிறகாசிப்பதில்லை? மாந்திரீகமே காரணம், கல்விச்சாலையில் இதை கற்க முடியாது. 

கல்விச்சாலைகள் மூலம் இதை கற்கலாம் என்றிருந்தால் அன்றே நமது முன்னோர்கள் அதை செய்திருப்பார்கள், தமிழை சங்கம் வைத்து வளர்த்த தமிழனுக்கு இது ஒன்ரும் கடினமாக இருந்திருக்காது. இது எனது கருத்து.

ஆகவே, இத்தலதின் மூலம் எனது பாரம்பரிய கல்வியை வெளிப்படையாக மாணவருக்கு தெரிவிப்பதே எனது நோக்கம்.

இனி வரும் பதிவுகளில் மாந்திரீகமும் வைத்தியமும் படிமுறைகலாக விளக்கப்படும்.

இத்துறையில் தேர்ச்சி பெற்றோர்கள் இத்தலத்தில் குறைகள் இருப்பின் அதை எனக்கு தடையின்றி சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


நன்றி

4 comments:

  1. vanakkam ayya,
    thangalin intha sevai miga periya vetriyadaiyum so thangal oruvar mattume oru seyal seithal athan vazhi muraigal matrum athan anaithu vithi muraigalaiyum koorugirergal matravargal oru seyalai seithal athu ippadi seiyum endre kooruvargal anal thangal mattume athan anaithu vazhimuraigalaiyum koorukirergal thangalin intha sevai thanalamatrathu thangal intha sevai vetri pera valthukkal

    ReplyDelete
  2. வணக்கம் சிம்பு.
    பதிவுக்கு நன்றி, உங்களைப்போன்றோரின் வோண்டுதலுக்காகவே இத்தலததை ஆரம்பித்துளலேன். உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் பதிலளிக்கிறேன். மற்றும் உங்கள் நன்பர்களை வரச்சொல்லுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  3. தங்களின் இப்பணி சீரும் சிறப்புமாக தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன் சுரேஷ்.

    ReplyDelete
  4. manthirangalai palagum pothu pilaiyaga uchchariththal kedu vilaiyumaa????

    ReplyDelete