Thursday, October 2, 2014

சரசுவதி மகா மந்திரம் - இருள் நீங்கட்டும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே,

இன்று விசயதசமி என்று மிக கடுமையான பூசைகளில் இருக்கும் அன்பர்களுக்கு ஓர் மந்திரப்பதிவு..

இது ஓர் அற்புதமான மகா சரசுவதி மந்திரம்.., இன்றில் இருந்து ஆரம்பிக்களாம், கல்வியில் மேம்மையடைய நினைக்கும் ஆண், பெண் இருவரும் உபாசணை செய்யலாம். பல அறிய இரகசியங்கள் படிக்கும் போது நமக்கு தெளிவடைய இம் மந்திரம் மிக உதவியாக இருக்கும்..

சுமார் 15 ஆண்டுகள் நாம் இதை உபாசணை செய்து, இதன் உண்மையான சக்தியை தெரிந்துகொண்டோம்..

இது குருமூலமாக கிடைக்கவேண்டியது என்பதால் எமது குருமாரின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்...

சரசுவதி மகா மந்திரம்

ஓம் மகா சரசுவதி, ஓம் வாடி ஈசுவரியே பரமசக்தியே வா வா, ஓம் நம சக்தி வா, ஓம் கணபதியே வா, ஓம் மந்திர சங்ஙாரியே வா, ஓம் பூவும் வா, திருவும் வா, ஐயும் வா, சவ்வும் வா, கிலியும் வா, புவணாபதியும், புவணேசுவரியும் என் நாவிலும் சிந்தையிலும் முன் நிற்கவே சுவாகா...


இயந்திரம்...

உபாசணை செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் இதன் இயந்திர பூசைகள் தேவையில்லை என்பதால் அதை பின்னர் தேவைப்படுபவருக்கு ஏற்ப கிடைக்கும்..

கிரிகை.

இன்றில் இருந்து தினமும் மாலையில் இதை வடக்கு முகமாக இருந்து எதிரே கலைவாணி இருப்பதாக உவமைப்படுத்தி குரு வணக்கம் செய்து பின் இந்த மகா மந்திரத்தை 64 முறை உபாசணை செய்து விபூதி பூசவும்..
இது விளையாட்டு அல்ல.. யாரிடம் விளையாடினாலும் கலைவாணியிடம் மிக அவதானமாக இருக்க வேண்டும்...

நாவில் இருப்பவள் என்பதால் சற்று காராசாரமான வார்த்தைகள் வர தொடங்கும் ஆனால் அது உங்களை சோதிப்பதற்கு என்று நினைவில் இருந்துங்கள்..

வரம் கிடைக்க முன், அதற்கான தகுதியானவரா என்ற சோதனை எப்போதும் உண்டு..

பாரம்பரிய மந்திரங்கள் பதிவிடுவதில்லை என்று இருந்தேன், இருப்பினும் இன்று இருள் நீங்கிய முழு நாள் என்பதால் உங்களில் சிலரின் இருளாவது விலகட்டும் என்று பதிவிடுகிறேன்..

இதையும் அப்படியே பிரதி செய்து உங்கள் இணையத்தில் போட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம்.. உங்கள் பதிவாகவும் போட்டு சரசுவதியின் விளையாட்டில் சிக்கிக் கொள்ளவேண்டாம்..



















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment