Friday, October 3, 2014

இரசவாதம்.. கல்லுப்பு

வணக்கம் தோழர்களே,

எமது பயனத்தின் போது கல்லுப்பு பற்றிய ஓர் தேடலுக்காக இந்து சமுத்திரத்தின் ஓர் பகுதியின் நிலப்பரப்புக்கு சென்றிருந்தோம்.

அருமையான கடல், அமைதியாக இருந்தது, குறித்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் புதையல்கள் அளவு கடந்து கிடப்பது தெரிந்தது..

மிக அருமையான மருத்துவப் பொருட்கள் குமிந்து கிடக்கும் ஓர் இடம் அது.. ஆனால் அந்த பிரதேசத்தை ஒட்டிய எந்த மருத்துவருக்கும் இது தொடர்பான எந்த ஆற்றலும் அறிவும் இல்லை..., அவர்களை பொருத்தவரை அங்கு இருப்பது கட்கள் அவ்வளவு தான்..

ஆனால் எமது கண்ணுக்கு தெரிந்தவை புதையல்கள்.., அதில் நாம் சிறப்பான பல விடயங்களை படமாக்கினோம்.. அவை ஒவ்வொன்றாக பதிவாகும் இங்கு..

அதில் ஒன்று இங்கு காட்டப்படுகிறது..

“ வாதியா மென்றுசொல்லி கல்லுப்பைதான்
வடிவாக விட்டுமே மூலிதேடி
சேதியாய் கேட்டுமே வாதம்சுட்டு
சிறப்பித்து திரிவார்கள் உலகவாதி”

“ ஆகுமே கல்லுப்பு திராவகத்தால்
வடைவான வேதையிது அடுத்துப்பாரு
ஏருமே சரக்கெல்லாம் கட்டிப்போகும்
மெளிதான லோகமெல்லாம் தானேநீரும்”

“ கொள்ளவே கல்லுப்பு பலமோபத்து
கூறான வீரமது பலமோபத்து
கொள்ளவே இதுவிரண்டும் கல்வத்திட்டு
விருப்பமாம் சாமமிரண்டு அரைத்துக்கொள்ளு”

இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய கல்லுப்பு இதுவாகும்..

சுக்காண் கல்லு இது இல்லை என்பதை மிக தெளிவாக அவதானிக்க வேண்டும்... இது கடலின் நுறையால் உப்பாக மாற்றப்படும் கல்.

கடுமையானதாக இருக்கும், நிலத்தில் பூனீரு பூப்பது போல் இது கல்லில் கடலின் நுறையால் பூக்கும், ஆனால் கடல்நுறையும் இல்லை.. இதன் மோல் எந்தக்காலத்திலும் கடல்பாசி படியாது.. அதை தவிர்த்து மற்ற இடங்களில் படியும்..

இதை முறையாக சுத்தி செய்தால் இதையும் அறு சுவைக்கு பயன்படுத்த முடியும்,

கல்லுப்பு என்றால் சமையலுக்கு பயன்படும் உப்பை எடுப்பது இல்லை, கல்லுப்பு நீருக்கு கரையாத உப்பு என்பதை தெளிவாக படிக்க வேண்டும்..

சமையல் உப்பிலும் இதன் தன்மை கிடைக்கும் ஆனால் மிக குறைவாக இருக்கும், அதாவது 100க்கு 10 வீதம் என்று..

படங்களை பார்த்தால் தெரியும்..
























நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment