Wednesday, October 1, 2014

செயற்திட்டம் ஆரம்பம்....

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே...
செயற்திட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...
இன்னும் ஓர் வாரத்தில் நிலப்பரப்புக்கள் சுத்தம் செய்ய வேலையாட்களை நியமித்திருக்கிறேன்.. அதை எமது மாணவர் ஒருவர் அங்கிருந்து மேற்பார்வை செய்வார்.. அதன் பின் எமது கட்டிட வேலைகல் தொடங்க வேண்டும்.. எப்படியாவது இந்த மாத இருதிக்குள் கட்டிட வேலைகள் முடித்து அங்கு செல்லவேண்டும் என்ற நோக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..
கடந்த வருடம் இதை ஆரம்பிக்கலாம் என தொடங்கிய போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்படியே நிறுத்திவைத்திருந்தேன்.. ஆனால் இம்முறை எது எப்படி இருந்தாலும் இதை செய்வது என்ற முடிவுக்கு வந்தாயிற்று..
உங்களில் பலரின் ஒத்துலைப்பு கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் மிக மிக சிலர் மட்டுமே இதுவரை உதவியிருக்கிறீர்கள்.. பலரும் குடும்ப்பப் பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சினை என்று காரணம் காட்டியிருக்கிறீர்கள்.. பரவயில்லை... ”வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்” என்றது போல் நடப்பது நன்மைக்கே என்று செயற்படவேண்டியது தான்..
எமது வாசகர் ஒருவர் எமது செயற்திட்டத்துக்கான இணையத்தை தயார்செய்து வருகிறார்.. விரைவில் தளம் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் மற்றும் வாசகரள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்..












எமது சேவை தனிப்பயன் உடையது அல்ல, இது உங்கள் சேவை உங்கள் செயற்திட்டம்.. அதின் வெற்றி உங்கள் முயற்சியில் தான் இருக்கிறது..
விரும்பிய போது நேரில் வந்து கற்கும் வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படிகிறது.. உங்கள் முயற்சி உங்கள் வெற்றி..
தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படிகிறது.. இதன் செலவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்,, முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்.. உங்கள் உதவியுடன்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

2 comments:

  1. Thangalin intha magathana sevaiku ennoda pangalippu kandippaga undu ayya

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete