Tuesday, September 2, 2014

முப்பு என்றால் என்ன?

வணக்கம் தோழர்களே,

இன்று முக நூல் பார்க்க சற்று தாமதாகிவிட்டது, ஆனால் பார்த்தால் திடுக்கிடும் தகவள் ஒன்று காத்திருந்தது.. அது நம்ம தம்பி எழுதிய கருத்து..

பின்வருமாறு..

“ R Prabu Mec மருபடியும் அதே ஆனவ பேச்சி !

குறிப்பு :

1. முப்பு என்றால் என்ன?
2.முப்பில் அடங்கிய மூன்று உப்புக்கள் யாவை ?
3.முப்பை கட்டும் முறை என்ன ?
4.முப்பில் அடங்கிய தெய்வங்களின் பெயர் என்ன ?
5.முப்பு சித்த மருத்துவத்தில் எதில் அதிக உபயோகம் ஆகும்?
6.முப்பு சேர்க்கப்படா மருந்தின் நிலை என்னவென்று தெரியுமா ?
7.உங்கழுக்கு ரசவாதம் அத்துப்படியா ?
8.பாதரசத்தையும், தங்கத்தையும், செம்பையும் சாகடித்து கையில் சாம்பலாக எடுத்துகாட்ட முடியுமா?
9.வாழான் கொட்டை சுத்தி செய்யும் முறை எவ்வாறு?
10.குருனா எப்படி இருப்பாங்கனு தெரியுமா ?

நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "

நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!

அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “

இதைத் தான் “ வாயைக் கொடுத்து எதையோ கெடுக்கிற” என்பார்கள்.. தம்பி R Prabu Mec ஓடுவதற்கு ஆதாரங்கள் கேட்கிறார் அதை கொடுத்து ஓடவிடலாமா...

முதலில் எமது பதிவுகளை எத்தனை காலமாக பார்கிறீர்கள் தம்பி, எமது பிலாக் (blogs) பற்றி தெரியுமா, அந்தப் பக்கம் போன அனுபவம் உண்டா..!

நீங்கள் இங்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பல காலங்களின் முன்னரே பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.. இங்கு முகணூலில் காலக்கோட்டில் கீழ் நோக்கிப் போனால் அதன் சாரம் பதிவாகி இருக்கும்.

ஒன்றையும் அடியும் முடியும் இல்லாம பார்த்தால் இப்படித்தான் பிதற்றவேண்டி இருக்கும்..

சரி, முப்பு பற்றி எங்காவது நாம் ” இவை எமக்குத் தான் தெரியும், எம்மை விட்டால் ஆட்கள் இதற்கில்லை, நாம் இரசவாத வித்தகர், தங்கம் செய்வோம், வெள்ளி செய்வோம், ரசம் கட்டுவோம்” என்று கூறியிருக்கிறோமா..!

நாம் கூறாத விடயத்தை நீங்கள் கூவிக் கூறினால் அது உண்மையாகுமா..!

இத்தனை கேள்விகள் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் ஏதாவது சில விடயமாவது உங்களுக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சியாக ஏன் இது இருக்கக் கூடாது..

அதையும் தாண்டி நீங்கள் எமது மாணவரா,..! உங்களுக்கு இரசவாத இரகசியங்களை சொல்லுவதற்கு.. வேண்டுமானால் எமது மாணவராக சேர்ந்து எமக்கு சேவைகள் செய்யுங்கள் உங்கள் தொண்டு உண்மையானது என்றால் ஒரு காலகட்டத்தில் இந்த இரகசியங்கள் சொல்லித் தருகிறேன்..

இருப்பினும்.. “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” என்ற வாக்குக்கமைய.. இந்த விளக்கம் தருகிறேன்,,. இங்கு எவருக்காவது (எமது வாசகர்கள்) முப்பு பற்றி ஏதாவது ஞானம் இருந்தால் அது தொடர்பான தேடலில் இருந்தது உண்மையானால், நாம் இங்கு கூறும் விடயம் உங்கள் அறிவை ஒரு திசைக்கு சுற்றிவிடும். மேலும் முப்பு பற்றி இதுவரை ஆய்வு செய்த (சித்தர்கள் தவிர்த்து) இரசவாதிகள் காணாத பேசாத எழுதாத விடயம் பற்றி இப்போது புரியும்..

பரிபாசை என்பது எப்படி இருக்கும் என்று இந்த ஆய்வு உங்கள் அறிவை தூண்டட்டும்..

முப்பு என்றால் என்ன ..! ஓடுவதற்கு தயாராகுங்கள் தம்பி...

உ + ம் + ப் + உ + ப் = முப்பு ...

புரியவில்லையா.... உங்கள் அறிவு அவ்வளவுதான்,,,

எத்தனை எழுத்துக்கள் சேர்ந்தது முப்பு என்று சொல்லுங்கள்.. ! ஐந்து ... அவற்றில் உயிர்கள் எத்தனை மெய்கள் எத்தனை...!

இரண்டு உயிரும் மூன்று மெய்யும் சேர்ந்தது இந்த முப்பு.. இதுவும் புரியவில்லையா..உங்கள் அறிவு அவ்வளவுதான்..!

ஏன் இரண்டு உயிர் மூன்று மெய்... குரு எப்படி இருப்பார் என்று கேட்டீர் அல்லவா... படியும் பார்த்துப் படியும்...

ஆகாயம், பூமி ( நிலம்), காற்று, தீ, நீர்... இவை எது என்று தெரியுமா... பஞ்சபூதம் என்பார்கள்... இதற்கும் உயிர், மெய் இவைகளுக்கும் என்ன தொடர்பு புரிகிறதா...இல்லையா...உங்கள் அறிவு அவ்வளவுதான்...

ஆகாயமும் நிலமும் உயிராக கொண்டு காற்று, தீ, நீர் இவை மூன்றும் மெய்யாகக் கொண்டு உருவானதே பிறப்பு... இந்த இரண்டு உயிருக்கும் நடுவில் தான் மெய்யாகிய உற்பத்தி இருக்கிறது..

இதைத் தான் பஞ்சபூதம் என்பது.. இந்த பஞ்ச பூதங்களை ஒன்றாக சேர்த்த ஒன்றே முப்பு என்பது...

பஞ்சபூதம் தான் பிரபஞ்ச சக்தி என்பதை காட்டுவதற்காகவே முதற்கடவுள் என்ற சிவனை பஞ்சாட்சரத்தால் அழைக்கிறோம்..

நமசிவய என்று.. இதை பாருங்கள் இதிலும் எந்த உயிர் எழுத்தும் தனியாக இல்லை.. மெய்யும் தனியாக இல்லை.. உயிர்மெய்யாகவே அமைக்கப் பட்டிருக்கும்.. இதைத் தான் ”காரண பஞ்சாட்சரம்” என்பது.(இதுவும் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்).. சிவசக்தி என்பார்கள்... அர்த்தனாரீசம் என்பார்கள் காரணம் பஞ்சாட்சரம் சமமாக பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஐந்து உயிரும் ஐந்து மெய்யும் இருக்கும்... தனியாக அது செயற்படுவதில்லை.. அதனால் தான் சிவலிங்கள் சித்தர்களால் வழிபடப்பட்டவையாக இருந்தது..

இப்படி இந்த பஞ்சபூத சக்தியை பிரித்து தனியாக கையாண்டால் இந்த பிறவியின் இரகசியத்தை அறியலாம் என்ற விடயம் சித்தர்களின் ஆய்வாக அமைந்த்து ஏற்பட்டதுவே இந்த முப்பு..

முப்புவில் ஐந்து பூதங்களும் அடங்கி இருக்கும். பஞ்சபூதத்தில் இரண்டு உயிரும் மூன்று மெய்யும் இருக்கும் உண்மையை அறிந்தவர்கள், இதன் சமனிலை மாறுவதை கண்டனர்.. ஏதோ ஒன்று இங்கு அதிகமாக இருக்கிறது அதை சரிசெய்தால் நாமும் சிவமே என்ற உண்மையை பெற்றனர். அதாவது அனைத்தும் சமமக இருந்தால் ஒன்றும் அழியாது என்பதை உணர்ந்தனர்.

ஆனால் இந்த ஐம்பூதங்களும் ஒன்றாக இருந்தால் தான் படைத்தல் நடக்கும் என்பதால் இதை தனித்தனியே தேடிப் பயன் இல்லை.. ஆகாயத்தை எப்படி எடுப்பது என்று முதல் உயிரிலேயே சிக்கல் ஏற்பட்டது அதன் விளைவாகவே அவர்கள் பஞ்சபூதங்களும் சேர்ந்து கிடைக்க வேண்டிய விடயம் எது என தேடினர், அது கிடைத்தால் அதை வைத்து எதையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற தத்துவத்தை அடைந்தார்கள்.

ஐந்தொழில்கள் இறைவன் செய்வதானால் அவனிடன் ஐந்தும் சேர்ந்த ஒன்று இருக்கிறது அதை வைத்தே அவன் இதைச் செய்கிறான் அதை அவன் இங்கும் தந்திருக்கிறான் அதை கண்டுபிடித்தால் அவனும் சிவனே என்று நம்பினார்கள்.. எங்கோ இருந்து கொண்டு ஐந்தொழிலை இங்கே செய்ய முடியாது என்றும், அது இங்கு தான் மறைக்கப் பட்டிருகிறது என்றும் உண்மையை கண்டார்கள். அதன் வெளிப்பாடாக அவர்களின் தேடல் ஆரம்பமாகியது.. அந்த பயனத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பாடல்களாக மாறின,.. இறைவனின் சக்தி இங்கு அனைவருக்கும் கிடைத்தால் அவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதை அவர்களுடன் இருந்தவர்கள் செய்த விடயங்களே அவர்களுக்கு சாட்சியாயின, அதன் காரணமாக இரைவன் எப்படி பஞ்சபூதங்களை இங்கு ஒரே சக்தியாக மறைத்து வைத்திருக்கிறானோ அதே முறையில் மொழியை பரிபாசைகளாக அமைத்தார்கள்.

ஏகன் அனேகன் என்றார்கள்..அதாவது ஒருவன் ஆனால் அவன் பவலன்.. ஐம்பூதங்களாய் விரியக்கூடியவன் என்றார்கள்..

” ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க”

வேகம் கெடுப்பது என்றால் இறப்பதற்கான காலத்தை தாண்டுவது என்று பொருள்... திருவாசகத்துக்கு உரை எழுதிய ஆய்வாளர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று நினைத்ததன் பலன் இங்கு வேறு விதாமாய் போய்விட்டது..

பிறப்பருக்கும் என்றால் இறந்தால் தானே இனி பிறப்பதற்கு..

புறத்தார்கு என்றால் ஏகனை காணாதவனுக்கு என்று அர்த்தம்,,, அவன் இறப்பது உண்மை..

கரங்குவித்தால் தான் அமிர்தம் வாங்க முடியும்,..

சிரம்குவிவார் என்றால் பனிவுடன் இருப்பது என்று பொருள்,, குருவிடம் பனிந்தால் அமிர்த்தம் கிடைக்கும்,,,

இதற்கிடையில் அனைத்திலும் வெல்க... வெற்றி பெற்றால் சிவமாக மாறலாம்...என்றார்..

இப்படி பல இரகசிய வாக்கியங்கள் பாடல்கள் மூலம் இந்த முப்பு கூறப்பட்டிருக்கிறது..

முப்பு என்றால் பஞ்சபூதம் என்று அர்த்தம்... அவை ஒன்றாக சேர்ந்த பொருள் முப்பு..

“ அண்டமதான அக்கினி உப்பை
கண்டறியார்கள் காசினி மூடர்கள்
பிண்டம் அதனில் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாத்திரம் பார்த்தே..”

இது உங்களை போல தம்பி...

“ கூர்வசனம் தவறாத குருவைக் கண்டு
குணமாக அவர்பதத்தில் பணிந்துகொண்டு
நேர்வசனம் நிசவசனம் ஆகப் பெற்று
நின்றதனால் சகலசித்தும் நேரதாகும்”

இது எம்மைப் போல ...

ஆர்வசனம் சொன்னாலும் கேட்டுக்கொண்டு
அலைவார்கள் உலகமதில் அசட்டுவாதி

இது உங்களைப் போல///

பேர்வசனப் பெருமையினால் பேரண்டத்தை
பேனியே பெற்றவனே சித்தனாமே...

இது யாரைப் போல.. வாசகர்கள் சொல்லுங்கள்...

வாயைக் கொடுக்கும் முன் யாரிடம் கொடுக்கிறோம் என்று கொடுக்காவிட்டால் இப்படித் தான் ஆகும்,,...

வடலூர் இராமலிங்கம் (வள்ளலார்) என்ன பெரிய ஞானியா... அருட்பா என்ன இரகசியமா,,.. திருவள்ளுவரின் ஞான வெட்டியானும், அகத்தியரின் பெருணூல் காவியமும் இல்லை என்றால் அவரின் அருட்பாவில் ஒன்றும் இருக்காது... அங்கு இருப்பதை வேறு வரிசையில் பிரதிபன்னிட்டு பெரிசா பேச வந்துட்டாங்க..

படிக்காத முட்டாலுக்குத் தான் இராமலிங்கம் குருவாக இருக்கமுடியும்..

உங்கள் விடயத்துக்கு வருவோம்.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தேவை என்றால் எம்மிடம் மாணவராக வந்து பனிசெய்யுங்கள்.. சிரம் குவியுங்கள் பின்னர் பார்க்கலாம் உங்களுக்கு அது புரிகிறதா என்று..

உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு எந்த அறிவும் முப்பு பற்றி இல்லை என்பது ...

முப்பை கட்டுவதில்லை.. கட்டியிருப்பது தான் முப்பு.. இங்கு யாராலும் முப்பை கட்ட முடியாது, முப்பை செய்யவும் முடியாது, அது சித்தர்களால் கூட முடியாது.. முப்பு என்பது ஒன்று அது இங்கே கட்டப் பட்டிருக்கிறது, அதை அவிழ்ப்பதே முப்புவின் இரகசியம்.. பஞ்சபூதங்கள் சேர்ந்த நிலை அல்லவா முப்பு அப்படி இருக்க அதை எப்படி கட்டுவது, அதை தனித் தனியாக பிரிக்க வேண்டும் அப்பனே...

இரசவாதம் அத்துப் படிதான்... என்ன செய்ய வேண்டும், தங்கம் வேண்டுமா, வெள்ளி வேண்டுமா, அல்லது கற்பம் வேண்டுமா... ஒன்றும் கவலை இல்லை... ரூபாய் ஒரு கோடி எடுத்துக் கொண்டு எம்மை சந்தியுங்கள் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் கண்முன்னால் செய்து காட்டுகிறேன்...எதை சாகடிக்கவேண்டும் உங்களையும் சேர்த்து சாகடித்து சாம்பலாக்கி காட்டிகிறேன்.. இரசவாதம் செய்ய செலவு இருப்பதாவது தெரியுமா,. அல்லது அதுவும் ஆகாயத்தில் இருந்து விழும் என்று யாராவது சொன்னார்களா...

சித்த மருத்துவத்துக்கும் எமக்கும் என்ன தொடர்பு என்று தேடிப்பாருங்கள் அப்போது விளங்கும் முப்புக்கும் இருக்கும் தொடர்பு..

அடி முட்டால் நீ என்பதற்கு இந்த கேள்வி பொருத்தம்.. வாழான் கொட்டையை எப்படி சுத்தி செய்வது...?

சாதாரனமான ஓர் பேதிக் குளிகை செய்ய தெரியாமலா மருத்துவர்கள் இருப்பார்கள்.. ஒரு வேலை உனது ஊரில் அப்படியாக இருக்கலாம்.. அல்லது உனது குரு மார்கள் அப்படி இருக்கலாம், முப்புவைப் பற்றி பேசும் போது வாழான் கொட்டைப் பற்றி கேட்டிருக்கும் போதே உமது அறிவு நன்றாக புரிகிறது..

எமது பிலாக்கில் போய் பாரும்... தம்பியாரே...

முப்புவுகும் தெய்வத்துக்கும் என்னையா தொடர்பு.. அது பஞ்சபூதங்கள் என்ற சக்தியின் வெளிப்பாடு, நீங்கள் பஞ்சபூதங்களை தெய்வமாக கருதி அதற்கு பெயர்கள் வைத்தால் அதற்கு நாம் பொருப்பாக முடியுமா.. நாம் ஏகனை மட்டும் பார்க்கும் வம்சத்தில் வந்தவர்கள், அவர்களை குருவாக பெற்றவர் ஆகவே எமது தெய்வம் முப்பில் ந ம சி வ ய என்பது மட்டுமே..

குரு எப்படி இருப்பார் என்று தெரியுமா... முட்டால் தனமான கேள்வியை கேட்கும் மாணவனுக்கும் பதில் கூறுத தெரிந்தவராக இருப்பார்.

” நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "

ஏண்டா தம்பி, எது சரியான பதில் என்று எப்படிடா நீ சொல்லுவாய்... அப்படி சொல்வதானல் அதை நீயே இங்கு சொல்ல வேண்டியது தானே... பிறகு ஏண்டா என்னிடம் கேட்கிறாய்... வள்ளலாரை பற்றி பேச என்னால் முடியுமா என கேட்கும் நீ,, எப்படி என்னைப் பற்றி கேட்க முடியும்.. முட்டால் பயலே...

” நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!”

உனக்கு தெரிஞ்சா நீ அதை சொல்ல வேண்டியது தானே,, ஏன் எனது தளத்தில் சுற்றித் திறிகிறாய்.. மற்றவனுக்கு புரியாத விடயம் உனக்கு புரிஞ்சா நீ இப்ப எங்க வேலை செய்கிறாய்,, அதையா செய்வாய்... முட்டால் பயலே..

அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “

இப்ப நாம் சொன்னது உனது மரமண்டைக்கு புரிஞ்சிருக்கும் என நினைக்கிறேன்... இல்லாட்டியும் பரவாயில்லை.. நீ நாம் சொல்றது புரிஞ்சவன் என்றால் உமக்கு இங்கு வேலை கிடையாது,, உமது தளத்தில் வேலையைப் பாரும்.

கேள்வி கேட்பதில் நீ நாகேஸ் என்றால் பதில் கூறுவதில் நாம் சிவாஜி...

சிங்கம் சிங்கிலாத் தான் வரும், பன்னிதான் கூட்டமா வரும்..

ஒரு கேள்வி.. உனது தாய் தந்தை, அம்மா அப்பா, பெயர்களை கூறும் பார்க்கலாம்..!

“ வாறான சனங்களுக்கும் ஐந்துபூதம்
மருவியதோ தேவதைக்கும் ஐந்துபூதம்
தாறான அண்டம்எல்லாம் ஐந்துபூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்துபூதம்
குரும்பரே ஐந்தினால் எல்லாம்ஆச்சு
நீறான வேடமிட்டு உபதேசித்த
நிலையெல்லாம் ஐந்தெழுத்தின் நிலையுமாச்சே..”

” தெளிவான மண்ணதுவும் நீரில்சேரும்
சேர்ந்துஎழுந்த சலமதுவும் தீயிற்சேரும்
ஒளியான தீச்சென்று வாயுவிற்சேரும்
ஓடியந்த வாயுவதும் வெளியிற்சேரும்
களியாகி செடமாகி செத்தபின்பு
கசடரே நரகசொர்க்கம் ஆவதென்கே
தெளிவான வாயுவொன்றே விந்திற்சேரும்
நேராக நாலும் அங்கே நீக்கிப் போச்சே.”

இங்கு ஐம்பூதங்கள் எவ்வாறு செயலாற்றுகிறது என்று தெளிவாகவே இருக்கிறது.

ஐம்பூதத்தில் ஒன்றை மட்டும் புரிந்துவிட்டால் சமச்சீர் எது என புரியும். அதுவே முப்புவின் இரகசியம். சாகாவரம்.. இது அறிவாழ் மட்டுமே கிடைக்கும், அதனால் தான் நாம் உங்களுக்கு சொல்வது தெளிவான அறிவே ஞானம், அதுவே கடவுள் என்று.. முட்டாப் பசங்கலா...

” நூல்கிடைப்பது யாருக்கு விட்டகுறையோருக்கு
நுணுக்கமற்ற சாத்திரங்கள் கருக்காணாது
நூல்கிடைத்தும் கருகாணோம் என்றுஏங்கி
நோய்கொண்டு மனமுடைந்து நொந்தோர்கோடி
நூல்கிடைத்தால் என்னுடைய நிகண்டைப்பாரு
நுணுக்கமுற்ற கருக்களெல்லாம் வெளியாய்போகும்
நூல்கிடைப்பது அரிதல்லவென்னி கண்டுகிட்டார்
நுகராமல் சாத்திரத்தை ஒளித்திட்டாரே.”

நுணுக்கமாய் படுக்கவேண்டும்.. வள்ளலார் சொன்னாலும் சரி அவர் அப்பா சொன்னாலும் சரி, நாம் சொன்னாலும் சரி...

“ சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்” இது பெரிய இரகசியம் போலும், என்னவோ வள்ளலார் தான் இதை சொன்னார் போலும் பேசும் முட்டாப் பசங்களுக்கு இது.

“ போகாத விந்துவினால் பிறக்குங்கோடி
புகழான வித்ததினால் மரமோகோடி
சாகாத காலிது தானறிவாய் மக்காள்
சமுசயங்கள் எண்ணாதே சனனமில்லை
வேகாத தலையறிந்தால் எல்லாம் போச்சு
வெட்டவெளியான மனம் பிறக்குமோடா
பாகாத திரோதகையின் மயக்கமானால்
பரிவான நாதவிந்து பரிசமாமே.”

இப்படி அருட்பாவில் பிரதி செய்யப்பட்டது தான் இருக்கு.. அப்பரம் என்னடா வள்ளலார்,, சும்மா இராமலிங்கம் தான்....

அறிவு என்பது ஞானம் அதுவே கடவுள்.. இங்கு நாம் ஆய்வுகள் செய்யாமல் வரவில்லை, துனிச்சலாக பேசுகிறோம் என்றால் ஆதாரங்கள் காட்டமுடியாமல் இல்லை.

எமது வயதுக்கும் எமது தோற்றத்துக்கும் எமது அறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அனைத்தும் நாம்தான்.

25 முதல் 30 வருட ஆய்வுகள், தெளிவான ஆய்வுகள், கடவுள் சொன்னாலும் நம்பாத ஆய்வுகள். எமது குரு பரம்பரை வித்தியாசமானது. நாம் கூத்தடிக்கும் கும்பலுடன் திரிந்தவர் அல்ல.. கலவும் கற்று மற என்பது போல் கும்பலாக திரிந்து கலவை கற்றவர் நாம், இப்போது மறந்துவிட்டோம்.

யாரிடம் சாட்சிகள் கேட்கிறீர்... இல்லாதவனிடம் கேளுங்கள். இங்கு அது குவிந்து கிடக்கிறது காரணம் நாம் சிரம் குவிபவர்..

அந்த பரமனை விட்டு எவனுக்கும் சிரம் குவியாது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவன் இருக்கும் போது, எமக்கு அறிவுக்கு என்ன பஞ்சம்.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.

என்ன கவலை..

யாரிடம் கேற்கிறாய் கேள்வி, என்னிடம் தீட்சை பெற்றாயா, மாணவனாக வந்தாயா, சேவை செய்தாயா.. மாமனா, மச்சானா,,, முட்டாப் பயலே..

இதற்கு மேல் உங்களுக்கு இங்கு வேலை கிடையாது தம்பி.

நாம் எப்படி பேசுவோம், எப்படி பழகுவோம் என்றும் எமது மாணவர்களுக்கு தெரியும் ஓரளவு.

முடிந்தால் அறிவை தேடுங்கள் கடவுள் உங்களைத் தேடுவான்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..

2 comments:

  1. super reply...hope he understands

    ReplyDelete
  2. ஒரு கேள்விக்கு இத்தனை ரகசியங்கள் அனாயசமாக வெளி வருகிறது
    என்றால் அப்பப்பா..... அதிசயம்தான், ஆனாலும் எங்களுக்கு நல்ல ஞானம் கிடைத்தது, நன்றி அய்யா.

    ReplyDelete