Wednesday, September 10, 2014

பரிபாசை

வணக்கம் தோழர்களே,,

இங்கு பலருக்கும் நாம் பல முறை தெரிவித்திருக்கிறோம், இங்கு பதியப்படும் விடயங்கள் எதுவும் சாட்சிகள் இல்லாமல் பதியப்படுவதில்லை என்று, அதே போல் ஒவ்வொறு பதிவிலும் அதற்கான சாட்சிகள் சித்தர்களின் இலக்கியங்களில் இருந்து பாடலாக தந்திருக்கிறோம்..

பரிபாசை புரியாத காரணத்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிவது போல் அல்லது விளக்க உரைகளை படித்து அதன் படி பேசுவதானால் அல்லது பின்பற்றுவதானால் தாறாளமாக பின்பற்றலாம். ஆனால் தவறானவற்றை பின்பற்றி நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை..

திருமந்திரத்தில் அணைத்துவிடயமும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாலர்கள், அதற்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்கள் பல முனைவர்கள்.

ஒரு விடயத்துக்கு விளக்க உரை எழுதுவதானால் அதன் விளக்கம் நன்றாக ஆசிரியருக்கு புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. அப்படி திருமந்திர விளக்கம் புரிந்திருந்தால் அதற்கு விளக்க உரை எழுதியவர் முதல் அதை படித்தவர் வரை யாரும் திருமூலரின் ஆயுளில் நான்கில் ஒரு பங்கு கூட வாழவில்லை.... ஏன்.. உங்களுக்கு திருமந்திரத்தின் தத்துவம் புரிந்துதானே அதற்கு விளக்க உரை எழுதினீர்கள், அதில் உங்கள் ஆயுளை நீடித்து பெரு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து விடயமும் இருக்கிறது, அப்படி அதில் இருக்கும் உபாயம் ஏன் உங்களுக்கு பலன்தரவில்லை..
ஏன் நீண்ட நாள் வாழவில்லை, ஏன் நோயற்ற வாழ்கை கிடைக்கவில்லை..

புரிதல் என்பது ஒவ்வெறுவருக்கும் தனித்துவமானது அதில் தவறு இல்லை, ஆனால் புரிதலின் பலன்கிடைக்கவேண்டும் அல்லவா..

ஆயிரம் ஞானிகள் ஆயிரம் முறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் காலத்தை கடந்து வாழ்ந்த பெருமை சித்தர்களுக்கு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் பேர் ஆயிரம் வழியை கூறினார்கள் ஆனால் அவர்கள் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்த வரலாறு இல்லையே, சித்தர்களுக்கு இருக்கும் வேறுபாடு அதில் தானே மறைந்திருக்கிறது, பதிணெண் சித்தர்களும் ஒரே வழியை மட்டுமே கூறுகிறார்கள், அது மறை மொழியாக உலாசுகிறது இங்கு.

ஒரு விடயத்தை ஆராய முட்பட்டால் அதை அடியில் இருந்து தேடவேண்டும். அதற்கு பெயர்தானே அறிவு. அதனால் தான் அடியை தேடியவன் முடியை கண்டான் என்றார்கள். சித்தர்பாடல் என்றால் பரிபாசை மறைப்பு என்று தெரிந்தபின்னும் அதன் தன்மையை ஆராயாமல் அப்படியே எடுப்பது எந்த பலனும் தரப்போவதில்லை என்பதே எமது கூற்று.. அதனால் தான் சிந்தியுங்கள் என்று உங்களை சொல்வது..

ஓர் விடயத்தை இது தான் என ஏற்றபின் அதன் உண்மையை உணர, ஏற்க மனது தடை செய்வது இயல்பே, அதை மீறி தேடினால் அதுவே அறிவு..

உதாரணமாக பூமி தட்டையானது என்று கூறப்பட்டு எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நம்பப் பட்டு வந்தது, ஆனால் அதில் நம்பிக்கை அற்ற நிலையின் தேடலினால் தானே அது பொய் என நிறூபனமானது. இப்படி காலத்தால் பல விடயங்கள் அப்படியே ஏற்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவை சரியானதா என ஆராயவே நமக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

சித்தர்பாடல்கள் (இலக்கியங்கள்) பாரம்பரியமானவை வம்சாவழியாக பாதுகாத்து வரப்பட்ட பொக்கிசங்கள், அதை மறைவாகவே வைக்கும் படி சித்தர்களே கூறியதன் விளைவாக அவை மறைவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து வந்தன. காலத்தின் தேவை அவை இப்போது வெளிவரத்துவங்கி 100 ஆண்டுகள் இருக்கும்.. வெளி வராதவை இன்னும் பல உண்டு.

மறைப்பதற்கு காரணம் இல்லை எனில் அதை அவர்கள் மறைக்க சொல்ல வேண்டிய தேவையும் இல்லை, அப்படி அதில் இருக்கும் உண்மைகள் புரிவதற்கு இலகுவானதாக இருந்திருந்தால் அதை பாதுகாத்து வந்த வம்சாவழிகளும் சித்தர்களாக மாறியிருப்பர்.

இதைத்தான் சிந்திக்க சொல்வது நாம் உங்களை..

காவி கட்டிக் கொண்டு சொல்வது எதுவானாலும் அது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் சித்தர்களுக்கும் இல்லை.. ஆகவே அவர்கள் அறுதியிட்டு கூறிய விடயம் எது என ஆராயவேண்டும், பதிணெண் சித்தர்கள் வரிசை தொடராத காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இன்று சாமியர்கள் வரிசைகள் தொடருகிறதே..

பதிணெண் சித்தர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என ஆராய வேண்டும், அப்போது தான் அவர்களின் வரிசை தொடராத காரணம் புரியும்.. அப்படி ஆராயத் தொடங்கினால் கிடைப்பது ஒன்றே.. அதை மீறிய எவரும் சித்தர்களாக கருதப்படவில்லை.

சித்தர்களின் வாழ்வியலைப் பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்கள் கூறும் உண்மைகள் என்ன என்ற ஆய்வுகளையும் செய்ய வேண்டும்,, அவர்கள் கூறுவதுவும் அதுவே..

நாம் இங்கு எமது கொள்கைகள் என்று எதையும் யாரையும் பின்பற்ற கூறுவதில்லை, சித்தர்களின் இலக்கிய அறிவின் பின்னனியில் இருக்கும் இரகசியம் என்ன என்ற ஆய்வுகள் செய்து அதன் தெளிவுகளை நீங்களும் ஆராயுங்கள் என்று சொல்லுகிறோம்.

மறைப்பாக வைக்கும் படி சித்தர்கள் அவர்களின் நூல்களை சொல்லுகிறார்கள் என்றால், அதன் உண்மையை மறைக்க எத்தனை விதமாக அவர்கள் பேசி இருக்க முடியும்.. நாம் ஆராயவேண்டியதும் புரிய வேண்டியதும் பதிணெண் சித்தர்களின் ஒற்றுமை எதில் இருக்கிறது என்பதை.. சித்தர்கள் விஞ்ஞானிகள் என்று பேசுவதோடு நிறுத்தக் கூடாது ஓர் விஞ்ஞானி எதை எப்படி செய்வான் என்ற சிந்தனையும் வேண்டும், சாட்சிகள் இல்லாமல் உணர்வாக அறிவது விஞ்ஞானத்தின் நோக்கம் அல்ல, சித்தர்களின் நோக்கமும் அல்ல. சித்தி பெற்றார்கள் என்றால் எதில் என்று தெரிய வேண்டும் ஆராய வேண்டும்.

கடவுளை நாம் தேடுவது எதற்காக என்ற தெளிவான அறிவு இருந்தால் இந்த ஆய்வுகள் இலகுவாக இருக்கும்.. அல்லது கடினமே..

ஆசையை துறந்து கடவுளை நாட வேண்டும் என்கிறார்கள்.. ஆசையை வரிசைப் படுத்தினால் அதில் பெரியது சிறியது என பிரிக்கலாம். இங்கு பெரிய சக்தி என்பது கடவுள் அதை காணவேண்டும் என்பது தான் மிக பெரிய ஆசை.. ஆனால் ஆசைகள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.. இந்த கூற்று சரியானது அல்ல என்றால்.. என்னை குறைகூற வரிசையாக வருகிறீர்கள்.. சிற்றின்பம் பேரின்பம் என வகைப்படுத்தி பேசுகிறார்கள்.. இரண்டிலும் இன்பம் தானே இருக்கிறது.. அதில் என்ன சிறிது பெரிது.. பசிக்கும் போது உணவு சுவையற்றது.. அதன் சுவை நமது பசியின் வேகத்தைப் பொருத்து பேசப்படும்.. மொத்தத்தில் பசியின் நிலையை பொருத்தே சுவையின் அளவும்.

சைவம் என்பது என்ன என்று ஆராய்வது இல்லை, ஆனால் சைவர்கள் என்பது.. கேட்டால் சமயம் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் பல விடயங்களை, எத்தனை விடயத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்..தமிழர் என்பது,, இங்கு எத்தனை பேரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேர் வைத்திருக்கிறீகள், தமிழர் என்பது,, உங்கள் கலாச்சார ஆடைகலையா அணிகிறீர்கள் ( நாமும் தான்).. ஆலயத்துக்கு செல்லும் போது கூட சில விசேட நாட்கள் என்றால் மட்டும் தானே.. முன்னோர்கள் சொன்ன விடயங்கள் அனைத்தையும் இங்கு யாரும் பின்பற்றுவதில்லை, அவரவர் வசதிகளுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம்.

கடவுளைப் பற்றி பேசுவதானால் கூட அப்படியே.. இன்று இருக்கும் ஆலயங்களின் பெயர்களை பாருங்கள் அமைப்பை பாருங்கள்.. முன்னோர்களின் ஆகம விதிக்கு அமைப்பதாக இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் ஆலயங்களை இடித்து மூடவேண்டும்..

நம்பிக்கை என்ற பேரில் எதையும் செய்வது அவரவர் விருப்பம், எமது ஆய்வுகளின் தெளிவுகளை பேசுவதும் எமது விருப்பம்.. உண்மையை ஆராய விரும்பம் இருந்தால் ஆராயுங்கள்.. இல்லை நாங்கள் உணர்வதே கடவுள் என்றால் மகிழ்சியாக கடைப்பிடியுங்கள்..

புலால் உணவு என்பது எதை வைத்து பிரிக்கப்படுகிறது என்றால் அது தொடர்பாக எந்த தெளிவும் இங்கு யாரும் கூறுவதில்லை, கேட்டால் தாவரம் அல்லாதது என்பார்கள்.. அடியும் முடியும் தெரியாமல் பேசுவது பூசைக்கு செல்லாது..

” சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை,
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி,
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு,
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே.”

விளக்கம்.. சைவர்கள் என்று சொல்லும் வாக்கியம் கேட்டிருக்கிறாராம், ஆனால் சைவர்களை கண்டதில்லையாம். இறைச்சி புலால் சாப்பிடுவதில்லை என்று கூறுவார்கலாம், அவரவருக்கு ஏற்ப காரணம் சொல்லி பிதற்றி திரிவார்கலாம், தினமும் கொலைசெய்து புலால் தின்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கலாம்.. ( மகிழ்சியடைய வேண்டாம்)

” கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா,
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி,
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா,
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் பட்டிமாடே.”

விளக்கம்.. பலபல சாதிகள் கூறி அதிலும் பிராமணர் என்ற சாதியாம், சைவத்தை மாற்றிப் பேசி ஆகமம் என்பார்கள் மகத்துவம் இருக்கு என்பார்கள், கண்டபடி வேதம் பற்றி பேசி உலகில் அனேகம் பேர் பிழைக்கிறார்கலாம், ஆறுதலம் யோக நிஷ்டைகள்(உச்சிமுதல் பாதம்வரை சக்கரம் என்பது) சிறப்பாக செய்பவர்கள் பட்டியில் கட்டிய மாடுகலாம்.

” மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா,
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்,
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி,
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே,

விளக்கம் .. மாட்டுக் கூட்ட மனிதர்கள் உலகத்தில் சாதி கெட்ட சைவர்கலாம், கோடான கோடிப் பேர் சைவர் என்று சொல்லி கேட்டிருக்கிறாராம், மாமிசத்தை தின்பவன் பாதிப் பேர், நெய்குடிக்கிறவன் பாதிப்பேர், சுத்தமான தயிர் சைவமாடா.. ஆனால் அது சைவம் என்று நம்புவாங்கலாம்.


”நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்தர்களுஞ் சொல்லவில்லை,
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை,
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா,
தும்பியுடன் பிரம்மகுல சாத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே.”

விளக்கம்.. நம்புவதற்கு சைவம் என்று ஒன்றும் இல்லையாம், நாதாக்களும் (சான்றோர்கள்) சித்தர்களும் சைவம் என்று ஒன்று சொல்லவும் இல்லையாம், வம்பான விடயம் அது என்று மறைத்தார் சைவத்தை பற்றி பேசாமல் விட்டார்கள், சுவையான புலால் தின்னாதவன் இங்கு எவனும் இல்லையாம், ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிடுவானாம் சூத்திரன், குடும்பி கட்டின பிராமணர்கள் (வேதம் படித்தவர்கள்) தூசு துப்பரவாக நெய்யும் மோரும் சாப்பிடுவாங்களாம்.

” குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்,
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை,
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்,
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே.”

விளக்கம்.. பால் தயிர் மோர் நெய் சாப்பிடுவாங்கலாம் ஆனால் இறைச்சியை நீக்கிட்டாங்கலாம், நடிப்பாக சைவம் என்று சொல்லல் ஆகுமோ, நாதாக்கள் இதை கைமறைப்பாய் காட்டவில்லையாம், எல்லா சாதிக்காரனும் புலால் சுவையாக சாப்பிடுவானாம், மாமிசம் என்பது அடிப்படை மட்டுமாம், ஆனால் நெய் என்பது என்ன மேல்மிதற்குது அடுத்த பாடலில்.

” நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று,
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல,
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ,
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே.”

விளக்கம்.. நெய் என்பது கொஞ்சம் இல்லை, எட்டுப்பங்கு நெய் சேர்ந்தால் தான் ஒரு பங்கு இறைச்சி கிடைக்குமாம், அடிப்படையாக கிடைக்கும் மாமிசத்தை (இறைச்சியை) தின்பவன் சைவனாம், சுத்தமான நெய் தின்பவன் சைவன் அல்லவாம், மாமிசத்தில் நெய் இல்லையாம், இரத்தமானது சுண்டி (இறுகி வற்றி) அது பாலாகி பாலில் இருந்து வந்த நெய்தான் இறைச்சியைக் காட்டிலும் கொடியது.

”அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு,
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு,
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ,
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே.”

விளக்கம்.. அதிகமாம் காய்கறியில் புழுக்கல் உண்டாம், இலைகளில் புழுவும் உண்டாம், அதிகமாக தண்ணீரில் புழுக்கள் உண்டாம், கண்ணால் காணாத எச்சிலும் மலமும் தண்ணீரில் உண்டாம், சுத்தம் என்பது எதில் உண்டு.. சுகமுண்டா சைவத்தில் அதிகம் உண்டா, இங்கு பொய்யான சைவர்கள் தவிர்த்து உன்மையான சைவர்கள் இல்லை என்கிறார்..

” கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு,
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்,
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்,
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே.”

விளக்கம்.. உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் சீரழிந்து சைவம் கெட்டு, எழிலான பிறவியாம் இந்த சைவர்கள் என்று நம்புறார்கலாம், தொட்ட பொருள் எல்லாம் சைவம் இல்லையாம், இங்க இருக்கும் எல்லாரும் புலால் தின்பவர்தானாம், நீதிமுறையாக அவரின் குரு காலங்கி நாதர் சாட்சியுடன் கூறிய நூலாம் இது.

புலால் பற்றிய சந்தேகம் இருப்பவர்கள் பதிணெண் சித்தர்களை நாடி அவர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இது காலங்கி நாதர் சொன்ன விடயம்.. நாம் சொன்ன விடயம் அல்ல அர்பர்களே..

உங்கள் சீவகாருண்யம் இந்த புலால் உணவை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.. இங்கு புலால் அல்லாத விடயமே ஒன்றும் இல்லாத போது எங்கிறுந்து வந்தது இந்த சீவகாருண்யம்.

”கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை”

இங்கு ஒருவரும் நிரந்தரம் அல்ல..

“உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு,
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல,
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்,
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே.”

குட்டி விளக்கம்.. பெரிசா படிச்சு கரைகண்ட வித்துவான் போல பேசி சித்தர்கள் போல இருப்பாங்கலாம்.. இவங்களைப்பார்த்து தேவரும் முனிவரும் சிந்திக்கைறமாதிரி இருக்குமாம்..

“பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே”

குட்டி விளக்கம்… கதைகட்டுறதுல வின்னர்கலாம்.. பொய் எல்லாத்தையும் உண்மைபோல் சொல்லுவாங்கலாம்…

“ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை”

தத்துவங்களையும் தியான மார்க்கங்களையும் உறுதியானது என்று சான்றோர்கள் சொல்லவே இல்லையாம்..

” உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே”

குட்டி விளக்கம்.. இவர்கள் இங்கு கூறும் கதைகள் எல்லம் பொய்யாம்.. அவர் உலகை சுற்றி பார்த்து உண்மையை அறிந்தாராம்.

இந்த விளக்கங்கள் ஓரள்வுக்கு புரியும் என நினைக்கிறேன்,,

சித்தர்கள் பாடல்களை படித்தால் மட்டும் போதாது, அதன் நுணுக்கங்கள் தெளிவாக ஆராய வேண்டும்.. ஒரு சில புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு அதன் உரைநடையை படித்து பதில் பேசக் கூடாது..

” விட்டகுறை இல்லாட்டால் தொட்டாலும் வாராது,
தொட்டகுறை இல்லாட்டால் சுட்டாலும் வாராது”

இது சித்தர்களின் வாக்கு.. அவர்களை புரிதல், அவர்களின் அறிவை ஆராய்தல் என்பது இலகுவானதாக இருக்காது.. காலத்தால் பழகிய விடயங்கள் நம்மை மாற்றத்துக்கு கொண்டு செல்ல விடாதுதான்,, ஆனால் அதை மீறி உழைக்க வேண்டும், தேட வேண்டும்.. அப்போது தான் எது இன்பம் என்பது புரியும்..

சித்தர்கள் இலக்கியத்தில் அவர்கள் அறுதியிட்டு கூறும் விடயம் என ஒன்றும், அறுதியில்லாத விடயங்கள் பலவும் உண்டு. அவற்றை தேடி ஆராய்ந்தால் காலத்தை வெல்வது இலகுவாக இருக்கும், எது அவர்கள் கூறும் ஒன்றான விடயம் என்பதுவும் புரியும்..

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

இதற்கு விளக்கம் முன்னரே நாம் பேசியிருக்கிறோம் ஆனால் இதை ஒரு தோழர் இன்று எமக்கு பலியிடலுக்கு எதிரான பாடலாக இதை காட்டியிருக்கிறார்..

இதில் வாசியும் வேண்டாம் வாயுவும் வேண்டா, மந்திரமும் வேண்டாம் என கூறும் அகத்தியர் எதை வேண்டுமென கூறவில்லை என்று சிந்திக்கவே நாம் சொல்கிறோம்..

பலியிடல் வேண்டாம் என சொல்லுவதற்கு இதை காட்டும் நீங்கள், ஏன் ஆலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும் இதை சொல்லி நிறுத்தலாமே.. ஆலயங்களில் இருக்கும் குருக்கள் மார்கள் மனது செம்மையாகாதவர்கள் என்றால் ஏன் அவர்களிடம் போய் அர்சணை செய்ய சொல்கிறீர்கள்.. புரியாமல் பேசினால் இப்படித்தான்…

மனம் என்றால் பொய் என்று அல்லவா அர்த்தம்.. காரணம் அப்படி ஒன்றும் உடலில் இல்லை..மனம் என்பது அறிவின் மறு பெயர், அறிவு செம்மையானால் என்று படித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்..

பரிபாசை என்பது சித்தர்களின் உண்மையை மறைக்கும் சொல், ஆகவே அவை எப்படி இருக்கும் என்று ஆராய வேண்டும் அல்லது உண்மையான குரு மூலம் கற்க வேண்டும்.. கைலாயம் என்றால் இமய மலையை பேசும் உலகத்தாருக்கு பரிபாசை புரிதல் கடினமே.. மேரு என்றால் சிறி சக்கரம் வைத்து பூசை செய்பவர்களுக்கு பரிபாசை புரிதல் கடினமே… தியானம் என்றால் சம்மனம் கட்டி கண்களை மூடி வாய் முனுமுனுக்கும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

”நட்டல் கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” என்று கடவுள் உள்ளுக்கு இருக்கிறார் என்று பேசும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

ஆலயங்களில் மூல விக்கிரகமாக கல்லைத் தான் வைக்கிறார்கள்.. அது எந்த பெரிய பணக்காரன் கட்டிய ஆலயமாக இருந்தாலும் சரி.. ஏன் தங்கத்தில் வைப்பதில்லை.. சிந்திக்க மறந்த கூட்டம்… எதை அபிசேகம் செய்து குடித்தாலும் மூல விக்கிரகத்தின் அபிசேகம் மட்டும் அதிக விசேடமாக கருதுவது ஏன்..

கடவுள் கல்லினுள் தான் இருக்கிறான் ஆனால் கல்லாக இல்லை… கடவுள் இருக்கும் கல்லை காண்பது கடினமே..

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பாட்டி, ஆனால் இங்கு கற்கையே பிச்சை எடுக்கத் தானே…

ஆயிரம் வழிகளை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றில் மட்டுமே ஒத்துப் போகிறார்கள் அது எது என்பதை புரிந்தால்.. அவர்கள் கூறிய கடவுள் யார் என்ற உண்மை தெரிய ஆரம்பிக்கும்..

ஆயிரம் வழிகள் இருப்பதாக கூறுவது பரிபாசையின் வெளிப்பாடு.. ஒன்றை அப்படியே கூறிவிட்டால் நடப்பது எதுவாக இருக்கும் என்ற சிறு சிந்தனை கூட இல்லாதவர்களையா நாம் சித்தர்கள் என்று கூறப்போகிறோம், அல்லது அவர்கள் கூறியதை ஒப்புக்கொண்டிருப்போமா.. காலத்தை தாண்டி பேசப்படுபவர்கள் அவர்கள் தானே..

கடந்த சில நூறாண்டுகளில் வந்த மகான்கள் அவதார புருசர்கள் யோகிகள் என கருதப்படும் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்துகாட்டவில்லை, அவர்கள் சராசரி மனித வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள்.. குறிப்பிட்ட காலத்தை தாண்டி அவர்களால் பயனிக்கவே முடியவில்லை, மூப்பெய்தி இறந்தார்கள்.. அவர்கள் மிக நல்ல எண்ணம் படைத்தவர்களாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவியவராக இருக்கட்டும், சமுதாயத்தை நல்வழி படுத்த முயன்றவராக இருக்கட்டும், ஆனால் அவர்கள் சித்தர்கள் அல்ல, பாடல் பாடுபவன் எல்லாம் சித்தன் அல்ல.. ஆயிரம் வழிகளை காட்டுபவன் எல்லாம் சித்தனும் அல்ல. அவர்கள் முயற்சி செய்தார்கள் கடவுள் என்ற ஒன்றை அடையவேண்டும் என்று, அதற்கு அவர்கள் ஒவ்வொறு முயற்சியும் செய்தார்கள், முயற்சியில் வென்றார்களா என்பது தான் கேள்வி.. வென்றிருந்தால் அவர்கள் காலத்தை கடந்து சாதனை செய்திருக்கலாம்.. நாட்டின் நிலையை மாற்றியிருக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றது சிந்தனையை அமைதியை தரக் கூடிய சில பயிற்சிகள் மட்டுமே.. அதை தாண்டி அவர்கள் செய்த சாதனைகள் என்ன என்று யாராலும் பட்டியல் இட முடியுமா.. அந்த சாதனைகளுக்கும் கடவுளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா..

அன்பே சிவம் என்பார்கள், அன்பை வரைமுறைப்படித்திப் பாருங்கள்.. நீங்கள் செய்த வேலைக்கு சரியான கூலிதராத முதலாலியிடம் உங்களுக்கு இருப்பது அன்பா.. உங்கள் அன்பை அட்டவனைப்படுத்திப் பாருங்கள்.. எத்தனை சிவம் அதில் இருக்கிறது என்று..

உலகம் மாயையின் வடிவம் என்கிறீர்கள், மாயை என்பது தானே பரிபாசை.. அதை சரியாக புரிந்தால்….. நீங்கள் பிறந்த காரணம் தெரியவரும்…

உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம்,.. எமது தளத்தில் நாம் பதிக்கிறோம்.. உங்களை பின்பற்றச் சொல்லி நாம் கூறவில்லை.. முடிந்தால் ஆய்வு செய்யுங்கள்.. உண்மையை தேடுங்கள்.. உண்மையை தேடும் வாசகர்களுக்கு இது புரிந்தால் போதும்..

மாற்றம் என்ற சொல்லை விட மற்ற எல்லாம் மாறும்..

“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
புகைப்படம்: வணக்கம் தோழர்களே,, 

இங்கு பலருக்கும் நாம் பல முறை தெரிவித்திருக்கிறோம், இங்கு பதியப்படும் விடயங்கள் எதுவும் சாட்சிகள் இல்லாமல் பதியப்படுவதில்லை என்று, அதே போல் ஒவ்வொறு பதிவிலும் அதற்கான சாட்சிகள் சித்தர்களின் இலக்கியங்களில் இருந்து பாடலாக தந்திருக்கிறோம்.. 

பரிபாசை புரியாத காரணத்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிவது போல் அல்லது விளக்க உரைகளை படித்து அதன் படி பேசுவதானால் அல்லது பின்பற்றுவதானால் தாறாளமாக பின்பற்றலாம். ஆனால் தவறானவற்றை பின்பற்றி நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை.. 

திருமந்திரத்தில் அணைத்துவிடயமும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாலர்கள், அதற்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்கள் பல முனைவர்கள்.

ஒரு விடயத்துக்கு விளக்க உரை எழுதுவதானால் அதன் விளக்கம் நன்றாக ஆசிரியருக்கு புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. அப்படி திருமந்திர விளக்கம் புரிந்திருந்தால் அதற்கு விளக்க உரை எழுதியவர் முதல் அதை படித்தவர் வரை யாரும் திருமூலரின் ஆயுளில் நான்கில் ஒரு பங்கு கூட வாழவில்லை.... ஏன்.. உங்களுக்கு திருமந்திரத்தின் தத்துவம் புரிந்துதானே அதற்கு விளக்க உரை எழுதினீர்கள், அதில் உங்கள் ஆயுளை நீடித்து பெரு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து விடயமும் இருக்கிறது, அப்படி அதில் இருக்கும் உபாயம் ஏன் உங்களுக்கு பலன்தரவில்லை..
ஏன் நீண்ட நாள் வாழவில்லை, ஏன் நோயற்ற வாழ்கை கிடைக்கவில்லை.. 

புரிதல் என்பது ஒவ்வெறுவருக்கும் தனித்துவமானது அதில் தவறு இல்லை, ஆனால் புரிதலின் பலன்கிடைக்கவேண்டும் அல்லவா.. 

ஆயிரம் ஞானிகள் ஆயிரம் முறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் காலத்தை கடந்து வாழ்ந்த பெருமை சித்தர்களுக்கு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

ஆயிரம் பேர் ஆயிரம் வழியை கூறினார்கள் ஆனால் அவர்கள் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்த வரலாறு இல்லையே, சித்தர்களுக்கு இருக்கும் வேறுபாடு அதில் தானே மறைந்திருக்கிறது, பதிணெண் சித்தர்களும் ஒரே வழியை மட்டுமே கூறுகிறார்கள், அது மறை மொழியாக உலாசுகிறது இங்கு. 

ஒரு விடயத்தை ஆராய முட்பட்டால் அதை அடியில் இருந்து தேடவேண்டும். அதற்கு பெயர்தானே அறிவு. அதனால் தான் அடியை தேடியவன் முடியை கண்டான் என்றார்கள். சித்தர்பாடல் என்றால் பரிபாசை மறைப்பு என்று தெரிந்தபின்னும் அதன் தன்மையை ஆராயாமல் அப்படியே எடுப்பது எந்த பலனும் தரப்போவதில்லை என்பதே எமது கூற்று.. அதனால் தான் சிந்தியுங்கள் என்று உங்களை சொல்வது.. 

ஓர் விடயத்தை இது தான் என ஏற்றபின் அதன் உண்மையை உணர, ஏற்க மனது தடை செய்வது இயல்பே, அதை மீறி தேடினால் அதுவே அறிவு.. 

உதாரணமாக பூமி தட்டையானது என்று கூறப்பட்டு எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நம்பப் பட்டு வந்தது, ஆனால் அதில் நம்பிக்கை அற்ற நிலையின் தேடலினால் தானே அது பொய் என நிறூபனமானது. இப்படி காலத்தால் பல விடயங்கள் அப்படியே ஏற்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவை சரியானதா என ஆராயவே நமக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது. 

சித்தர்பாடல்கள் (இலக்கியங்கள்) பாரம்பரியமானவை வம்சாவழியாக பாதுகாத்து வரப்பட்ட பொக்கிசங்கள், அதை மறைவாகவே வைக்கும் படி சித்தர்களே கூறியதன் விளைவாக அவை மறைவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து வந்தன. காலத்தின் தேவை அவை இப்போது வெளிவரத்துவங்கி 100 ஆண்டுகள் இருக்கும்.. வெளி வராதவை இன்னும் பல உண்டு. 

மறைப்பதற்கு காரணம் இல்லை எனில் அதை அவர்கள் மறைக்க சொல்ல வேண்டிய தேவையும் இல்லை, அப்படி அதில் இருக்கும் உண்மைகள் புரிவதற்கு இலகுவானதாக இருந்திருந்தால் அதை பாதுகாத்து வந்த வம்சாவழிகளும் சித்தர்களாக மாறியிருப்பர். 

இதைத்தான் சிந்திக்க சொல்வது நாம் உங்களை.. 

காவி கட்டிக் கொண்டு சொல்வது எதுவானாலும் அது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் சித்தர்களுக்கும் இல்லை.. ஆகவே அவர்கள் அறுதியிட்டு கூறிய விடயம் எது என ஆராயவேண்டும், பதிணெண் சித்தர்கள் வரிசை தொடராத காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இன்று சாமியர்கள் வரிசைகள் தொடருகிறதே.. 

பதிணெண் சித்தர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என ஆராய வேண்டும், அப்போது தான் அவர்களின் வரிசை தொடராத காரணம் புரியும்.. அப்படி ஆராயத் தொடங்கினால் கிடைப்பது ஒன்றே.. அதை மீறிய எவரும் சித்தர்களாக கருதப்படவில்லை. 

சித்தர்களின் வாழ்வியலைப் பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்கள் கூறும் உண்மைகள் என்ன என்ற ஆய்வுகளையும் செய்ய வேண்டும்,, அவர்கள் கூறுவதுவும் அதுவே.. 

நாம் இங்கு எமது கொள்கைகள் என்று எதையும் யாரையும் பின்பற்ற கூறுவதில்லை, சித்தர்களின் இலக்கிய அறிவின் பின்னனியில் இருக்கும் இரகசியம் என்ன என்ற ஆய்வுகள் செய்து அதன் தெளிவுகளை நீங்களும் ஆராயுங்கள் என்று சொல்லுகிறோம். 

மறைப்பாக வைக்கும் படி சித்தர்கள் அவர்களின் நூல்களை சொல்லுகிறார்கள் என்றால், அதன் உண்மையை மறைக்க எத்தனை விதமாக அவர்கள் பேசி இருக்க முடியும்.. நாம் ஆராயவேண்டியதும் புரிய வேண்டியதும் பதிணெண் சித்தர்களின் ஒற்றுமை எதில் இருக்கிறது என்பதை.. சித்தர்கள் விஞ்ஞானிகள் என்று பேசுவதோடு நிறுத்தக் கூடாது ஓர் விஞ்ஞானி எதை எப்படி செய்வான் என்ற சிந்தனையும் வேண்டும், சாட்சிகள் இல்லாமல் உணர்வாக அறிவது விஞ்ஞானத்தின் நோக்கம் அல்ல, சித்தர்களின் நோக்கமும் அல்ல. சித்தி பெற்றார்கள் என்றால் எதில் என்று தெரிய வேண்டும் ஆராய வேண்டும்.  

கடவுளை நாம் தேடுவது எதற்காக என்ற தெளிவான அறிவு இருந்தால் இந்த ஆய்வுகள் இலகுவாக இருக்கும்.. அல்லது கடினமே..

ஆசையை துறந்து கடவுளை நாட வேண்டும் என்கிறார்கள்.. ஆசையை வரிசைப் படுத்தினால் அதில் பெரியது சிறியது என பிரிக்கலாம். இங்கு பெரிய சக்தி என்பது கடவுள் அதை காணவேண்டும் என்பது தான் மிக பெரிய ஆசை.. ஆனால் ஆசைகள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.. இந்த கூற்று சரியானது அல்ல என்றால்.. என்னை குறைகூற வரிசையாக வருகிறீர்கள்.. சிற்றின்பம் பேரின்பம் என வகைப்படுத்தி பேசுகிறார்கள்.. இரண்டிலும் இன்பம் தானே இருக்கிறது.. அதில் என்ன சிறிது பெரிது.. பசிக்கும் போது உணவு சுவையற்றது.. அதன் சுவை நமது பசியின் வேகத்தைப் பொருத்து பேசப்படும்..  மொத்தத்தில் பசியின் நிலையை பொருத்தே சுவையின் அளவும். 

சைவம் என்பது என்ன என்று ஆராய்வது இல்லை, ஆனால் சைவர்கள் என்பது.. கேட்டால் சமயம் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் பல விடயங்களை, எத்தனை விடயத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்..தமிழர் என்பது,, இங்கு எத்தனை பேரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேர் வைத்திருக்கிறீகள், தமிழர் என்பது,, உங்கள் கலாச்சார ஆடைகலையா அணிகிறீர்கள் ( நாமும் தான்).. ஆலயத்துக்கு செல்லும் போது கூட சில விசேட நாட்கள் என்றால் மட்டும் தானே.. முன்னோர்கள் சொன்ன விடயங்கள் அனைத்தையும் இங்கு யாரும் பின்பற்றுவதில்லை, அவரவர் வசதிகளுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம். 

கடவுளைப் பற்றி பேசுவதானால் கூட அப்படியே.. இன்று இருக்கும் ஆலயங்களின் பெயர்களை பாருங்கள் அமைப்பை பாருங்கள்.. முன்னோர்களின் ஆகம விதிக்கு அமைப்பதாக இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் ஆலயங்களை இடித்து மூடவேண்டும்.. 

நம்பிக்கை என்ற பேரில் எதையும் செய்வது அவரவர் விருப்பம், எமது ஆய்வுகளின் தெளிவுகளை பேசுவதும் எமது விருப்பம்.. உண்மையை ஆராய விரும்பம் இருந்தால் ஆராயுங்கள்.. இல்லை நாங்கள் உணர்வதே கடவுள் என்றால் மகிழ்சியாக கடைப்பிடியுங்கள்.. 

புலால் உணவு என்பது எதை வைத்து பிரிக்கப்படுகிறது என்றால் அது தொடர்பாக எந்த தெளிவும் இங்கு யாரும் கூறுவதில்லை, கேட்டால் தாவரம் அல்லாதது என்பார்கள்.. அடியும் முடியும் தெரியாமல் பேசுவது பூசைக்கு செல்லாது.. 

” சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை,
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி,
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு,
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே.”

விளக்கம்.. சைவர்கள் என்று சொல்லும் வாக்கியம் கேட்டிருக்கிறாராம், ஆனால் சைவர்களை கண்டதில்லையாம். இறைச்சி புலால் சாப்பிடுவதில்லை என்று கூறுவார்கலாம், அவரவருக்கு ஏற்ப காரணம் சொல்லி பிதற்றி திரிவார்கலாம், தினமும் கொலைசெய்து புலால் தின்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கலாம்.. ( மகிழ்சியடைய வேண்டாம்)

” கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா,
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி,
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா,
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் பட்டிமாடே.”

விளக்கம்.. பலபல சாதிகள் கூறி அதிலும் பிராமணர் என்ற சாதியாம், சைவத்தை மாற்றிப் பேசி ஆகமம் என்பார்கள் மகத்துவம் இருக்கு என்பார்கள், கண்டபடி வேதம் பற்றி பேசி உலகில் அனேகம் பேர் பிழைக்கிறார்கலாம், ஆறுதலம் யோக நிஷ்டைகள்(உச்சிமுதல் பாதம்வரை சக்கரம் என்பது) சிறப்பாக செய்பவர்கள் பட்டியில் கட்டிய மாடுகலாம்.

” மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா,
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்,
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி,
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே,

விளக்கம் .. மாட்டுக் கூட்ட மனிதர்கள் உலகத்தில் சாதி கெட்ட சைவர்கலாம், கோடான கோடிப் பேர் சைவர் என்று சொல்லி கேட்டிருக்கிறாராம், மாமிசத்தை தின்பவன் பாதிப் பேர், நெய்குடிக்கிறவன் பாதிப்பேர், சுத்தமான தயிர் சைவமாடா.. ஆனால் அது சைவம் என்று நம்புவாங்கலாம்.

 
”நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்தர்களுஞ் சொல்லவில்லை,
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை,
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா,
தும்பியுடன் பிரம்மகுல சாத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே.”

விளக்கம்.. நம்புவதற்கு சைவம் என்று ஒன்றும் இல்லையாம், நாதாக்களும் (சான்றோர்கள்) சித்தர்களும் சைவம் என்று ஒன்று சொல்லவும் இல்லையாம், வம்பான விடயம் அது என்று மறைத்தார் சைவத்தை பற்றி பேசாமல் விட்டார்கள், சுவையான புலால் தின்னாதவன் இங்கு எவனும் இல்லையாம், ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிடுவானாம் சூத்திரன், குடும்பி கட்டின பிராமணர்கள் (வேதம் படித்தவர்கள்) தூசு துப்பரவாக நெய்யும் மோரும் சாப்பிடுவாங்களாம்.

” குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்,
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை,
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்,
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே.”

விளக்கம்.. பால் தயிர் மோர் நெய் சாப்பிடுவாங்கலாம் ஆனால் இறைச்சியை நீக்கிட்டாங்கலாம், நடிப்பாக சைவம் என்று சொல்லல் ஆகுமோ, நாதாக்கள் இதை கைமறைப்பாய் காட்டவில்லையாம், எல்லா சாதிக்காரனும் புலால் சுவையாக சாப்பிடுவானாம், மாமிசம் என்பது அடிப்படை மட்டுமாம், ஆனால் நெய் என்பது என்ன மேல்மிதற்குது அடுத்த பாடலில்.

” நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று,
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல,
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ,
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே.”

விளக்கம்.. நெய் என்பது கொஞ்சம் இல்லை, எட்டுப்பங்கு நெய் சேர்ந்தால் தான் ஒரு பங்கு இறைச்சி கிடைக்குமாம், அடிப்படையாக கிடைக்கும் மாமிசத்தை (இறைச்சியை) தின்பவன் சைவனாம், சுத்தமான நெய் தின்பவன் சைவன் அல்லவாம், மாமிசத்தில் நெய் இல்லையாம், இரத்தமானது சுண்டி (இறுகி வற்றி) அது பாலாகி பாலில் இருந்து வந்த நெய்தான் இறைச்சியைக் காட்டிலும் கொடியது.

”அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு,
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு,
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ,
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே.”

விளக்கம்.. அதிகமாம் காய்கறியில் புழுக்கல் உண்டாம், இலைகளில் புழுவும் உண்டாம், அதிகமாக தண்ணீரில் புழுக்கள் உண்டாம், கண்ணால் காணாத எச்சிலும் மலமும் தண்ணீரில் உண்டாம், சுத்தம் என்பது எதில் உண்டு.. சுகமுண்டா சைவத்தில் அதிகம் உண்டா, இங்கு பொய்யான சைவர்கள் தவிர்த்து உன்மையான சைவர்கள் இல்லை என்கிறார்..

” கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு,
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்,
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்,
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே.”

விளக்கம்.. உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் சீரழிந்து சைவம் கெட்டு, எழிலான பிறவியாம் இந்த சைவர்கள் என்று  நம்புறார்கலாம், தொட்ட பொருள் எல்லாம் சைவம் இல்லையாம், இங்க இருக்கும் எல்லாரும் புலால் தின்பவர்தானாம், நீதிமுறையாக அவரின் குரு காலங்கி நாதர் சாட்சியுடன் கூறிய நூலாம் இது. 

புலால் பற்றிய சந்தேகம் இருப்பவர்கள் பதிணெண் சித்தர்களை நாடி அவர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 

இது காலங்கி நாதர் சொன்ன விடயம்..  நாம் சொன்ன விடயம் அல்ல அர்பர்களே.. 

உங்கள் சீவகாருண்யம் இந்த புலால் உணவை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.. இங்கு புலால் அல்லாத விடயமே ஒன்றும் இல்லாத போது எங்கிறுந்து வந்தது இந்த சீவகாருண்யம். 

”கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை”

இங்கு ஒருவரும் நிரந்தரம் அல்ல.. 

“உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு,
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல,
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்,
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே.”

குட்டி விளக்கம்.. பெரிசா படிச்சு கரைகண்ட வித்துவான் போல பேசி சித்தர்கள் போல இருப்பாங்கலாம்.. இவங்களைப்பார்த்து தேவரும் முனிவரும் சிந்திக்கைறமாதிரி இருக்குமாம்.. 

“பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே”

குட்டி விளக்கம்… கதைகட்டுறதுல வின்னர்கலாம்.. பொய் எல்லாத்தையும் உண்மைபோல் சொல்லுவாங்கலாம்… 

“ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை” 

தத்துவங்களையும் தியான மார்க்கங்களையும் உறுதியானது என்று சான்றோர்கள் சொல்லவே இல்லையாம்..

” உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே”

குட்டி விளக்கம்.. இவர்கள் இங்கு கூறும் கதைகள் எல்லம் பொய்யாம்.. அவர் உலகை சுற்றி பார்த்து உண்மையை அறிந்தாராம். 

இந்த விளக்கங்கள் ஓரள்வுக்கு புரியும் என நினைக்கிறேன்,,

சித்தர்கள் பாடல்களை படித்தால் மட்டும் போதாது, அதன் நுணுக்கங்கள் தெளிவாக ஆராய வேண்டும்.. ஒரு சில புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு அதன் உரைநடையை படித்து பதில் பேசக் கூடாது..

” விட்டகுறை இல்லாட்டால் தொட்டாலும் வாராது, 
தொட்டகுறை இல்லாட்டால் சுட்டாலும் வாராது” 

இது சித்தர்களின் வாக்கு.. அவர்களை புரிதல், அவர்களின் அறிவை ஆராய்தல் என்பது இலகுவானதாக இருக்காது.. காலத்தால் பழகிய விடயங்கள் நம்மை மாற்றத்துக்கு கொண்டு செல்ல விடாதுதான்,, ஆனால் அதை மீறி உழைக்க வேண்டும், தேட வேண்டும்.. அப்போது தான் எது இன்பம் என்பது புரியும்.. 

சித்தர்கள் இலக்கியத்தில் அவர்கள் அறுதியிட்டு கூறும் விடயம் என ஒன்றும், அறுதியில்லாத விடயங்கள் பலவும் உண்டு. அவற்றை தேடி ஆராய்ந்தால் காலத்தை வெல்வது இலகுவாக இருக்கும், எது அவர்கள் கூறும் ஒன்றான விடயம் என்பதுவும் புரியும்.. 

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

இதற்கு விளக்கம் முன்னரே நாம் பேசியிருக்கிறோம் ஆனால் இதை ஒரு தோழர் இன்று எமக்கு பலியிடலுக்கு எதிரான பாடலாக இதை காட்டியிருக்கிறார்.. 

இதில் வாசியும் வேண்டாம் வாயுவும் வேண்டா, மந்திரமும் வேண்டாம் என கூறும் அகத்தியர் எதை வேண்டுமென கூறவில்லை என்று சிந்திக்கவே நாம் சொல்கிறோம்.. 

பலியிடல் வேண்டாம் என சொல்லுவதற்கு இதை காட்டும் நீங்கள், ஏன் ஆலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும் இதை சொல்லி நிறுத்தலாமே.. ஆலயங்களில் இருக்கும் குருக்கள் மார்கள் மனது செம்மையாகாதவர்கள் என்றால் ஏன் அவர்களிடம் போய் அர்சணை செய்ய சொல்கிறீர்கள்.. புரியாமல் பேசினால் இப்படித்தான்… 

மனம் என்றால் பொய் என்று அல்லவா அர்த்தம்.. காரணம் அப்படி ஒன்றும் உடலில் இல்லை..மனம் என்பது அறிவின் மறு பெயர்,  அறிவு செம்மையானால் என்று படித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்.. 

பரிபாசை என்பது சித்தர்களின் உண்மையை மறைக்கும் சொல், ஆகவே அவை எப்படி இருக்கும் என்று ஆராய வேண்டும் அல்லது உண்மையான குரு மூலம் கற்க வேண்டும்.. கைலாயம் என்றால் இமய மலையை பேசும் உலகத்தாருக்கு பரிபாசை புரிதல் கடினமே.. மேரு என்றால் சிறி சக்கரம் வைத்து பூசை செய்பவர்களுக்கு பரிபாசை புரிதல் கடினமே… தியானம் என்றால் சம்மனம் கட்டி கண்களை மூடி வாய் முனுமுனுக்கும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே.. 

”நட்டல் கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” என்று கடவுள் உள்ளுக்கு இருக்கிறார் என்று பேசும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

ஆலயங்களில் மூல விக்கிரகமாக கல்லைத் தான் வைக்கிறார்கள்.. அது எந்த பெரிய பணக்காரன் கட்டிய ஆலயமாக இருந்தாலும் சரி.. ஏன் தங்கத்தில் வைப்பதில்லை.. சிந்திக்க மறந்த கூட்டம்… எதை அபிசேகம் செய்து குடித்தாலும் மூல விக்கிரகத்தின் அபிசேகம் மட்டும் அதிக விசேடமாக கருதுவது ஏன்.. 

கடவுள் கல்லினுள் தான் இருக்கிறான் ஆனால் கல்லாக இல்லை… கடவுள் இருக்கும் கல்லை காண்பது கடினமே..

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பாட்டி, ஆனால் இங்கு கற்கையே பிச்சை எடுக்கத் தானே… 

ஆயிரம் வழிகளை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றில் மட்டுமே ஒத்துப் போகிறார்கள் அது எது என்பதை புரிந்தால்.. அவர்கள் கூறிய கடவுள் யார் என்ற உண்மை தெரிய ஆரம்பிக்கும்.. 

ஆயிரம் வழிகள் இருப்பதாக கூறுவது பரிபாசையின் வெளிப்பாடு.. ஒன்றை அப்படியே கூறிவிட்டால் நடப்பது எதுவாக இருக்கும் என்ற சிறு சிந்தனை கூட இல்லாதவர்களையா நாம் சித்தர்கள் என்று கூறப்போகிறோம், அல்லது அவர்கள் கூறியதை ஒப்புக்கொண்டிருப்போமா.. காலத்தை தாண்டி பேசப்படுபவர்கள் அவர்கள் தானே.. 

கடந்த சில நூறாண்டுகளில் வந்த மகான்கள் அவதார புருசர்கள் யோகிகள் என கருதப்படும் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்துகாட்டவில்லை, அவர்கள் சராசரி மனித வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள்.. குறிப்பிட்ட காலத்தை தாண்டி அவர்களால் பயனிக்கவே முடியவில்லை, மூப்பெய்தி இறந்தார்கள்.. அவர்கள் மிக நல்ல எண்ணம் படைத்தவர்களாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவியவராக இருக்கட்டும், சமுதாயத்தை நல்வழி படுத்த முயன்றவராக இருக்கட்டும், ஆனால் அவர்கள் சித்தர்கள் அல்ல, பாடல் பாடுபவன் எல்லாம் சித்தன் அல்ல.. ஆயிரம் வழிகளை காட்டுபவன் எல்லாம் சித்தனும் அல்ல. அவர்கள் முயற்சி செய்தார்கள் கடவுள் என்ற ஒன்றை அடையவேண்டும் என்று, அதற்கு அவர்கள் ஒவ்வொறு முயற்சியும் செய்தார்கள், முயற்சியில் வென்றார்களா என்பது தான் கேள்வி.. வென்றிருந்தால் அவர்கள் காலத்தை கடந்து சாதனை செய்திருக்கலாம்.. நாட்டின் நிலையை மாற்றியிருக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றது சிந்தனையை அமைதியை தரக் கூடிய சில பயிற்சிகள் மட்டுமே.. அதை தாண்டி அவர்கள் செய்த சாதனைகள் என்ன என்று யாராலும் பட்டியல் இட முடியுமா.. அந்த சாதனைகளுக்கும் கடவுளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா.. 

அன்பே சிவம் என்பார்கள், அன்பை வரைமுறைப்படித்திப் பாருங்கள்.. நீங்கள் செய்த வேலைக்கு சரியான கூலிதராத முதலாலியிடம் உங்களுக்கு இருப்பது அன்பா.. உங்கள் அன்பை அட்டவனைப்படுத்திப் பாருங்கள்.. எத்தனை சிவம் அதில் இருக்கிறது என்று.. 

உலகம் மாயையின் வடிவம் என்கிறீர்கள், மாயை என்பது தானே பரிபாசை.. அதை சரியாக புரிந்தால்….. நீங்கள் பிறந்த காரணம் தெரியவரும்…

உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம்,.. எமது தளத்தில் நாம் பதிக்கிறோம்.. உங்களை பின்பற்றச் சொல்லி நாம் கூறவில்லை.. முடிந்தால் ஆய்வு செய்யுங்கள்.. உண்மையை தேடுங்கள்.. உண்மையை தேடும் வாசகர்களுக்கு இது புரிந்தால் போதும்.. 

மாற்றம் என்ற சொல்லை விட மற்ற எல்லாம் மாறும்..

“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment