Wednesday, September 24, 2014

ஊரை ஏமாற்றும் புதிய கூட்டம்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே..

காலையில் ஓர் மின்னஞ்சல் நம்மை வயிறு குழுங்க சிரிக்க வைத்தது... கடிதத்தில் குறித்த ஒரு நபரைப்பற்றி கேட்டிருந்தார் ஒருவர்..

அதாவது குறித்த ஆசாமி நண்பர் வாசியோகப்பயிற்சி கற்பிக்கும் ஒரு சித்தராம்.. அவரின் ஆற்றல் பற்றியும் வாசி பற்றியும் எம்மிடம் கேட்டார் மின்னஞ்சல் மூலமாக ஒரு நபர்..

அதன் பின் நாம் குறித்த சித்தரின் முகநூலை அலசினோம்.. சிறிப்பு தாங்க முடியல.... அவர்களின் தளத்தில் இருக்கும் சில கட்டளைகள்.. இது குறித்த சித்தர் கூறுவதாம்...

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள் அனைவரும் வெளியிடங்களில் சாப்பிடநேர்ந்தால் மிதமான உணவு தயிர்சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மீறினால் உடல் உபாதைகள் ஏற்படும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள், அனைவரும் மருந்து சாப்பிட கூடாது, வலிநிவாரணி உபயோகிக்க கூடாது
கை வைத்தியம் கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.”

“ வாசியோகப் பயிற்சியாளர்கள்,
பக்தர்கள் அனைவரும்
இரத்ததானம், உடல் உறுப்பும் தானம்,
செய்ய கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். ”

“ வாசியோக பயிற்சியில் புதிதாக சேரும் பயிற்சியாளர்கள் உடல் எடை கூடி வயிறு பெருத்து காண்பார்கள் இதற்கு காரணம் உடலில் உள்ள மலம்தான் .
உடலில் வயிறு பெருத்து இருப்பதற்கு காரணம் (கழிவு)மலம்தான் கழிவுகள் சேர்ந்து வயிறு பெருக்கிறது, பயிற்சி செய்ய செய்ய கழிவுகள் வெளியேறும் உடம்பில் எலும்போடு ஒட்டியதோல் போல் இருக்கும் .
இதில் தவறும் போது உன் எண்ணப்படி குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். “

“ வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் டீ சாப்பிட வேண்டும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் சரியாக 11 மணி , 11.30 மணிக்குள் தினமும் கொய்யாப் பழம் அல்லது நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.
கொய்யா பழம் (சிறிது என்றால் 2(இரண்டு) பெரியது என்றால் 1(ஒன்று) மட்டும்) சாப்பிட வேண்டும்.
1: ஒரு நாள் கொய்யா பழம் மறுநாள் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்
2:கொய்யா, நெல்லிக்காய் சாப்பிடும் போது டீ சாப்பிடக் கூடாது
அனைத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும், குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.“

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், பக்தர்கள், அனைவரும் அதிகாலை புதினா, மல்லி, சாப்பிடவுடன் 15 நிமிடம் கழித்து பால் அல்லது டீ சாப்பிட வேண்டும், காப்பி வாழ்நாள் முழுவதும் சாப்பிட கூடாது.“

” குருகுலத்தில் பயிற்சிக்கு வரும் பயிற்சியாளர்கள், சேவையாளர்கள், பக்தர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட கூடாது
1: இடுப்பு வலிக்கு பெல்ட் போட கூடாது
2:கழுத்து வலிக்கு பெல்ட் போட கூடாது
3:சக்கரை நோய்க்கு ஊசி போட கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்..“

****** எனக்கு மிக பிடித்த வியாபார உத்தி..****

“ வாசியோகப் பயிற்சிக்கு வருவோர் கணவன் மனைவியாக (குடும்ப சகிதமாக) வரவேண்டும்.

வாசியோகம் என்பது இல்லறத்தை நல்லறமாக்குவது ஆகும்

இதில் ஒருவர் மட்டும் பயிற்சி செய்தால் பலன்கள் காலதாமதமாகும்.”

” அதிகாலை எழுந்தவுடன் கால்களை மடக்கி அமர்ந்து குறித்த சித்தரின் (ஆசாமி) மந்திரத்தை (உதடு அசையாமல் முப்பது முறை) உச்சரிக்க வேண்டும்”
------------------------------------------------------------------

ஊரை ஏமாற்ற புதிய கூட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..

இந்த ஆசாமியை ஆரம்பத்திலேயா நிறுத்தவில்லை என்றால் உங்கள் சமூகம் மீண்டும் ஒரு புதிய சமயத்தை ஏற்க வேண்டி இருக்கும்..

வாசி என்றால் மூக்கால் காத்தை இழுக்கும் மடப்பயளுக்கு.. உடலில் ஒன்பது ஓட்டைகள் இருப்பது தெரியாது..

மூக்கையும் வாயையும் அடைக்கும் முட்டாள் மூலத்தையும் யோனியையும் எதனால் அடைப்பானோ... ஒரு வேலை தும்பு கொடுப்பார்களாக்கும் குரு குலத்தில்.. முட்டாப் பசங்க.. 



எப்படா திருந்துவீங்க..


1 comment:

  1. ஓம் சிவசிவ ஓம்
    உண்மைதான். இன்று எல்லா ஆசாமிகளும், தம்மை சுவாமிஜி, குருஜி, மற்றும் சித்தர் என்று கூறுகின்றனர். நாம் அதற்க்கு தகுதியா என்று அவர்கள் சிந்திப்பது இலை. கரணம், நம் மக்களை இந்த மாதிரி ஏமாற்றுவது எளிது என்பது அவர்களுக்கும் தெரியும்....நானும் ....

    ReplyDelete