Thursday, September 18, 2014

ஆகாய வயிரவர்

வணக்கம் தோழர்களே,

தொடர்சியான சில மந்திர பதிவுகளை படிக்கும் வகையில் நாம் வேத கால மந்திரங்கள் உங்களுக்கு தருகிறோம்.. அத்துடன் போலியான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் சமூகத்துக்கு முடிந்த வரை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாம் இந்த பதிவுகளை பகிர்வதன் மூலம் உண்மைகள் அவர்களுக்கு தெரியவரும் என்பதை மனதில் நிறுத்தி... அதற்கமைய தகவல்களை பகிருங்கள்..

நீங்கள் மட்டும் பலனடையவேண்டும் என்று மற்றவரை போல் தன்னலத்துடன் இல்லாமல் செயற்படுங்கள்..

வயிரவர் பற்றிய விடயங்கள் மந்திரங்கள் பற்றிய அடுத்த பதிவு இது..

ஆகாய வயிரவன் தந்திர நூலில் இருந்து இந்த பதிவு..

ஆகாய வயிரவர் மூல மந்திரம் இது.. குறித்த நூலின் படி..

“ ஓம் நமோ விஜய வயிரவாய ப்ரலயாந்ததாய மகா வயிரவாயா ஸ்ர்வ விக்ந நிவாரணாய சக்தி தராய சக்ரபாணாயே வடமூல நிஷண்ணாய அகில கண நாயகாயா ஆபதுத்தாரணாய ஆகர்ஷய ஆகர்ஷய ஆவேஷாய மோஹய மோஹய ப்ராமய ப்ராமயா பாஷய பாஷய சீக்ரம் பாஷய ஹ்ராம ஹ்ரீம் த்ரிபுரதாண்டவாய பாஷய ஸ்வாஹா:||”

இது மிக அற்புதமான மந்திரம் என சிலர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் நாம் உபயோகிப்பதில்லை.. வடமொழியில் அவ்வளவு பற்றுதல் இல்லாத காரணமும், அளவுக்கு மேலாகவே தமிழ் மந்திரங்கள் குவிந்து கிடப்பதாலும், சித்தர்களின் உண்மைகள் நன்கே தெளிவாக புரிந்ததனாலும், எமது மந்திரப் பிரயோகம் எல்லாம்... தமிழை அடிப்படையாக கொண்டது..

இதற்கு பதில் ஆகாய வயிரவர் என்ற ஆதி வயிரவனை நாம் அழைக்கும் மந்திரம் தமிழில் இப்படி இருக்கும்...

” ஓம் சிறியும் கிலியும் என நின்ற திரிசூல வயிரவா ஐயும் கிலியும் என நின்ற அட்டவயிரவா ஆகாய வயிரவ சக்தி வயிரவா சங்கார வயிரவா........................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
என் முன் நிற்கவே சிவாகா...

நீங்கள் எந்த மொழியில் வயிரவனை வணங்கினாலும், அவரின் செயல் இருளை அழித்து ஒளியை தருவது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்..

உண்மை ஞானம் தேடி அவரை அழைக்கலாம், ஆனால் பண ஞானம் தேடி அழைக்கவேண்டாம்,, இருப்பது இல்லாமல் போகும்..

இவ்வாறு தமிழில் மந்திரங்கள் தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது அதனால் நாம் வேதம் வடமொழிக்கு சொந்தம் என கூறமுடியாது..

குறிப்பு,.. கருத்துக்கள் பதியுங்கள்... அப்படியே பதிவையும் பகிருங்கள்... உண்மையானவை மக்களை சென்றடைய காரணமாக இருங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment