Saturday, September 6, 2014

ஈசனாரும் முருகவேலும்

வணக்கம் தோழர்களே,

வேதங்கள் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான மொழி பற்றி பேசியாகவேண்டும்..

ஆதியில் இருந்தே தமிழுக்கு இருக்கும் இலக்கண இலக்கிய இயல்புகள் சமசுகிருதத்துக்கு இருந்ததில்லை, தனக்கென முழுமையான அட்சரவடிவங்கள் கூட இல்லாத மொழி அது. ஒளி வடிவமாக கூட அதில் அனைத்து சத்தங்களும் எழுப்ப முடியாத ஓர் மொழியாகவே இது இருகிறது.

தமிழ் மொழியோ முழுமையான ஓர் மொழியாக இருக்கிறது தனக்கென முழுமையான அட்சரங்கள் இலக்கங்கள் இலக்கண அமைப்பு என முழு ஒளி அமைப்பைக் கொண்டது.

முன்னரே நாம் கூறியது போல், முதற் கடவுள் என வேதம் கூறும் சிவன், அவரே வேதம் தந்தார் என்றும் கூறுகிறது. சமசுகிருதம் எனும் மொழியில் வேதம் அருளப்பட்டதாக இருந்தால் இன்று அந்த மொழியின் நிலை என்ன.. வேத நாயகன் இன்னும் அவரது பிடியில் தானே நாட்டை வைத்திருக்கிறார். ஆனால் அவர் வேதம் அருளிய மொழிக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி இல்லையா உங்கள் யாரிடமும்..

அவ்வாறு வேதங்களை சமசுகிருதத்தில் அருளியவர் ஏன் அந்த மொழியை காக்கவில்லை. சிவனை பற்றிய விடயங்கள் சைவம் தொடர்பான தத்துவங்கள் அதிகமாக பேசப்பட்டிருக்கும் மொழி எது..!

தமிழுக்கு சங்கம் வைத்தை அவர் ஏன் சமசுகிருதத்தை சங்கம் வைத்து காக்கவில்லை..! வருத்தப்படாத சமசுகிருத சங்கம் ஒன்றை அவர் அமைத்திருக்கலாம்.. ஆனால் அதை அவர் செய்ததாக காணவில்லை.

ஈசனாரும் முருகவேலும் கட்டிக்காத்த தமிழ் சங்கம் போல்,, என்பார்கள் இலக்கியங்களில்.. தமிழைக் காக்கவேண்டிய காரணம் சிவனாருக்கு ஏன்...அதில் அப்படிஎன்ன இருக்கிறது.. அதில் தான் அனைத்தும் இருக்கிறது.

இப்போது விடயத்துக்கு வருவோம்.. வேதங்கள் தமிழில் என்றால் இப்போது எங்கே போனது என்ற கேள்வி வந்திருக்கு..!

ஒரு சமூகம் இருக்கிறது அது மிக நவீனமாக அபிவிருத்தியடைந்த சமூகம் ( நாடு), நீங்கள் முதன் முறையாய் இந்த சமூகத்துக்குள் வருகிறீர்கள் காரனம் நீங்கள் வேறு சமூகம், புதிய சமூகங்களை தேடி அளைகிறீர்கள் அப்போது நீங்கள் கண்ட சமூகம் இது. இதில் அனைத்தும் இருக்கிறது மிக செழிப்பாக அமைந்த சமூகம், மொழி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் சிறந்த சமூகம்...

உங்கள் சமூகமோ இன்னும் சிந்திக்காத அளவு இந்த சமூகம் இருக்கிறது.. காரணத்தை தேடினால் இவர்கள் கடவுள் என்ற ஓர் விடயத்தை சக்தியை மிக தெளிவாக அமைத்திருக்கிறார்கள் அதனால் அவர்களின் மக்கள் பின்பற்றி வாழ்கையை சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற விளக்கம் உங்களுக்கு கிடைக்கிறது..

உங்கள் சமூகத்தை நீங்கள் இவ்வாறு செழிப்பாக அமைக்க வேண்டும் அதற்கு உங்களுக்கு இங்கு இருக்கும் இரகசியங்கள் (கடவுள்) என்ற விடயம் வேண்டும் அது உங்கள் மக்களுக்கு உரித்தாக வேண்டும்.. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்..

சரியான ஓர் திருடன் தனது திருட்டுக்கான சாட்சிகளை வைக்க மாட்டான் அல்லவா...

சமூகங்களுக்கு இடையிலான போர்கள் மூண்டன, இங்கு இருக்கும் விடயங்கள் அது தொடர்பான விடயங்கள் அழிக்கப்பட்டன... அவை பின்னர் தங்கள் மொழியுடன் கலக்கப்பட்டது.. புதிய சமூகத்துக்கு இது வந்த இடம் வேறாக சித்தரிக்கப் பட்டது.. இதற்கு எதிரான சாட்சிகள் அழிக்கப்பட்டன..

உதாரணம்.. இன்று இலங்கை ஓர் சிங்கள நாடு என்று பரைச்சாற்றும் சிங்களவர், நாகர் என்பது ஓர் மனித இனம் அல்ல என்றும், இயக்கர்கள் அவர்கள் என்றும் இராவணன் ஓர் சிங்கள் மன்னன் என்றும் கூறுகிறார்கள் ஏன், எவ்வாறு..

இதற்கு எதிரான சாட்சிகள் எங்கு போயின..

தென் ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகம் அதில் இருந்த இலங்கயின் புராதன நூலகம் இலங்கையில் யாழ்பானம் எனும் ஊரில் இருந்தது.. அது போர் என்ற பேரில் அழிக்கப்பட்டது..

உலக வரலாறுகளை எடுத்துப் படியுங்கள் உலகப் போர்கள் கூறும் உண்மைகளை.. போரில் வென்றால் முதலில் நூலகங்கள் தான் அழிக்கப்படும். காரணம் என்ன.. இருக்கும் சமூகம் அழிக்கப்பட்டு புது சமூகம் வந்தவர்களின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான்... இல்லாவிட்டால் உங்களை எப்படி கட்டி ஆட்சி செய்வது.. அவர்கள் வந்து போன சுவடுகள் இருக்க வேண்டும் அல்லவா..

ஆங்கிலேயர் நாடுகளை போர்களில் வென்று ஆட்சியில் வந்திருக்கவில்லை என்றால் கிருஸ்தவத்தின் நிலையை சிந்தியுங்கள்..

போர்களில் அழிக்கப்பட்ட நூல்களை விட்டு எஞ்சிக் கிடைப்பவை தான் இன்று நாம் பார்க்கும் தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்கள்..

வேதங்கள் மொழிவடிவாக அருளப்பட்டதாக கூறப்படவில்லை,, அது வேதத்தில் கூட இல்லை... அது கற்பிக்கப்பட்டது செவி வழியாக.. என்கிறது காலக்கோடு... அப்படி இருக்கும் போது அது சமசுகிருதத்தில் தான் வந்தது என்று யாரும் கூறமுடியாது அதே போல் தமிழையும் கூறமுடியாது...

ஆனால் மொழிவடிவம் பெற்ற பின்னர் அதை பேசும் போது தான் ஆராய வேண்டும்.. நாம் கேட்ப்பது ஒன்றே ... முழுமையான மொழிவடிவம் தமிழில் இருக்கும் போது ஏன் சமசுகிருதம் பயன்படுத்தப் பட்டது,..! தமிழ் சங்கம் வளர்த்த ஈசனார் ஏன் தமிழில் வேதம் எழுதும் படி கூறவில்லை..

தமிழை வளர்த்த அவரே ஏன் தமிழுக்கு துரோகம் செய்தார்..

நாயன்மார்கள் காலத்தில் பிந்தியவர்கள் ஆனால் அகத்தியர் காலத்தில் முந்தியவர் ஏன் வேதம் தமிழில் செய்ய வில்லை..

இப்படி பல விடயங்கள் காலத்தை தாண்டிய உண்மையாக இருக்கிறது அவற்றை தேடிப் பிடிப்பது என்பது இலகுவானது அல்ல.. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை..

தமிழரின் மிக பெரிய பலகீனம் ஒன்றே.. அது எவன் கெட்டாலும் சரி நம் குடும்பம் நல்லா இருந்தா போதும் இது இன்று வந்த விடயம் அல்ல.. அதனால் தான் நம்மிடம் இருக்கும் அறிவை மற்றவருக்கு கொடுப்பதில்லை.. அது எப்படி மற்றவனை ஏமாற்றுவது தொடர்பான அறிவாக இருந்தாலும் சரி..

இலங்கையில் இருந்த நூலகத்தை தமிழன் நினைத்தால் காத்திருக்கலாம்.. ஆனால் அவனோ சாதிகலாள் பிரிக்கப்பட்டவன் தன்னை விட மற்ற சாதிக்காரன் முன் வரக்கூடாது என்று நினைப்பவன், அவனது அறிவு புத்தகமாக இருந்த்து அது வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று மறைத்து வைப்பது தமிழன் பழக்கம்... இதை விடுத்து நூல்களை முன்னரே பிரதிகள் செய்திருக்கலாம் அவற்றை நாடு முலுவதும் இருக்கும் அனைத்து தமிழ் நூலகத்திலும் சேர்த்திருக்கலாம் ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.. காரணம் மற்றவன் படித்தால் நமக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற நிலைதான்..

இப்படி தமிழன் மட்டுமே நினைப்பதனால் தான் இன்றும் ஆயிரக்கணக்கான நூல்கள் ஏடுகளாகவே கிடக்கிறது.. புதிய புத்தகங்கள் எழுதுவதை விட்டும் அவற்றை பதிப்பதை விட்டும் இருப்பதை பதிவிட்டால் போதும் தமிழ் சிறப்பாக வளரும். 






நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

1 comment:

  1. விழிப்பான பல விடயங்கள் பதிவிட்டுள்ளீர்கள்.. நன்று..

    ReplyDelete