Tuesday, September 16, 2014

யாகம் யார் செய்வது...

வணக்கம் தோழர்களே,

இன்றைய பதிவு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன்,... வேதம் ஓதும் அன்பர்களுக்கு கூட இதன் தன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

தொழில் செய்யும் போது இரகசியங்கள் வெளியிடக்கூடாது... எல்லாம் ஊரை ஏமாற்றி பிழைப்பு தேடும் கூட்டத்தின் வேலைகள்.. உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது..

இன்று நம் அரசியல் பிரமுகர்களும், சாமியார்களிடமும் இல்லாத பணமும் செல்வாக்குமா... ஆனால் அவர்களால் நாம் குறிப்பிட்ட அதிக பலன்களை தரும் மகா யாகங்கள் செய்ய முடியாது.... காரணம் இது தான்,,,

அவர்களின் மனைவிகள் அனுமதிக்கவேண்டும் அல்லவா.. இல்லை என்றால் இன்றும் நாம் இந்த யாகங்கள் பற்றி தெரிந்திருக்கலாம்..

உணமையை மறைத்து இன்று கணபதி யாகம், லட்சுகி யாகம் என குட்டி யாகங்கள்,,, எந்த பலனும் இல்லாத பிழைப்புக்காக செய்யும் (வேதம் ஓதும்) யாகங்கள் மட்டும் நடைபெருகிறது..

வேதங்களின் படி பிரமச்சரியம் காக்கும் எவனும் ஓம குண்டத்துக்கு பக்கதில் கூட செல்ல முடியாது.. ஓர் சிறு துரும்பு கூட அக்கினியில் போடமுடியாது..

இன்று காவியை கட்டிக் கொண்டு உங்கள் சாமியார்கள் செய்யாத யாகங்கள் இல்லை.. அதை மேடை போட்டு செய்கிறார்கள் அதற்கு பணம் கொடுத்து நீங்கள் பார்கிறீர்கள்,..

யாகத்தின் முதல் விதி..

யாகம் செய்பவன் ஒருவனாக இருக்கவேண்டும், கூட்டம் கூடி செலவு செய்து யாகம் செய்ய முடியாது,, அத்துடன் யாகத்துக்கு வரும் அணைத்து மானிடர்களுக்கும் அவன் கானிக்கை கொடுக்க வேண்டும், அப்படியே வந்தவர்களை வணங்கி அவர்களிடம் ஆசிகள் வாங்குதல் வேண்டும்..

இன்று உங்கள் சாமியார்கள் செய்வது என்ன,..! அவர்கள் ஓமம் செய்து உங்களுக்கு அருள் தருகிறார்கள்.. யாகம் செய்வதற்கு மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அதை அவர்கள் செய்து, உங்களுக்கு அவர்கள் ஆசி தருகிறார்கள்..

இதை பின்பற்றும் நீங்கள் அறிவாழிகள்... நீங்களே பீர்த்திக் கொள்ளவேண்டியது தான்..

இன்று நடக்கும் யாகங்கள் எதுவும் உண்மையான யாகங்கள் இல்லை... உருத்திர யாகம்.. செய்கிறார்கள்.. அதின் செய்கை, அது ஏன் செய்வது என்று வேதம் ஓதும் வித்துவான்களுக்கு கூட தெரிவதில்லை..

வேதம் படித்த வித்துவான்களே செய்ய முடியாத யாகங்கள்,.. இன்று உங்கள் சாமியார்கள் செய்வது மிக அற்புதம்..

சாதாரன.... காயத்திரி (சாவித்திரி) சுலோகத்தின் விளக்கம் கூட புரியாதா...சாமியார்கள் எல்லாம்... உங்கள் வழிகாட்டிகள்..

பெண்கள் சாமியாரை சுற்றுவதை விட்டு.. கனவனை சுற்றுங்கள்.. ஆண்கள் உங்கள் மனைவியை சுற்றுங்கள்... அது தான் சிறந்த யாகம்..

இன்று மேடை போட்டு பேசும் இந்த சாமியார்கள், மற்றும் குரு மார், மாஸ்டர் மார்... இவர்களை நம்பி உங்கள் பணத்தை செலவு செய்யாது... நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுங்கள்.. சாகும் வரை உங்கள் உடலாவது மகிழ்சியாக இருக்கட்டும்..

நாம் முன்னமே எச்சரித்தோம்.. மீண்டும் வருவோம் என்று.. மீண்டும் எச்சரிக்கிறோம்...

கூட்டம் கூட்டி ஊரை ஏமாற்றுவதை விட்டு.. உழைத்து சாப்பிடுங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment