Saturday, September 6, 2014

தென்னாடுடைய சிவனும் கைலாயமும்

வணக்கம் தோழர்களே,

தென்னாடுடைய சிவனும் கைலாயமும் ஒன்று தான் என்றும் சிலர், இவை இரண்டும் வேறு என சிலரும் கூறியிருக்கிறீர்கள்..

பல ஆய்வுகள் உங்கள் மனதில் தோன்றிய படி எழுதியமைக்கு நன்றிகள்...

”குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”

இதற்கும் தென்நாடுடைய சிவனுக்கும் தொடர்பு இருக்குமா.. !

அல்லது குன்றுகள் பல சேர்ந்த இமயத்தில் குமரன் ஏன் இல்லை என்ற சந்தேகம் வரவேண்டுமா இல்லையா..!

மொத்தத்தில் குன்றுக்கும் கடவுள் என்று நாம் பேசும் ஒரு சக்திக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது தெரிகிறதா..!

உலகத்தில் எங்கு குன்றுகள் இருந்தாலும் அதில் குமரன் இருக்க வேண்டும் அல்லவா.. ! அப்படியானால் ..! இப்படியாகுமோ..! எப்படியிருக்கும்..!

விடைகளை சொல்லுபவன் ஆசான் (குரு) இல்லை,,, விடைகளை தேடும் வழிகளை சொல்லுபவனே ஆசான், இதை முதலில் தெரிந்து பேசுங்கள்..

எதற்கெடுத்தாலும் இவர் விடை சொல்லாது விடுகிறார் என்று நினைப்பதை விட்டு விடைக்கான தேடலை தந்திருக்கிறார் என்று பாருங்கள் எமது பதிவுகளின் உண்மை உங்களுக்கு புரியும்..

எமக்கு அனைத்தும் தெரியும் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை அப்படி யாரவது நினைத்தால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என நீங்கள் நினைப்பதாக அர்த்தம். அகவே சிந்திக்க வேண்டும் என்பதே நாம் உங்களுக்கு இங்கு கூறுவது, அதற்கு சாட்சிகள் தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுவது.. நாம் காட்டுவது தவறானால்.., சரியானதை நீங்கள் காட்ட வெண்டும் அதற்கு சாட்சிகள் ஆதாரங்கள் என பலவும் தரப்பட வேண்டும்...

உதாரனமாக முப்பு பற்றி நாம் பேசும் போது அதில் இருக்கும் தத்துவத்தை தமிழில் சித்தர்கள் எப்படி மறைத்திருக்கிறார்கள் என்றும், பஞ்சாட்சரம் என்பது எந்த சொரூபம் என்றும் இங்கு மிக எழிமையாக ஆதாரத்துடன் காட்டியிருக்கிறோம்.. அது போல் நீங்களும் காட்ட வேண்டும்.. புராணம் இதிகாசம் என்ற பூச்சாண்டி கதைகள் இங்கு வேண்டாம்,,,

நாம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசுகிறோம், விஞ்ஞானம் பேசுகிறோம்,, ஆதாரங்கள் அவற்றில் இருக்க வேண்டும்..

பார்க்கலாம் உங்கள் அடுத்த ஆய்வுகளை...

குன்றில் இருப்பவன்,,, தென்னாடுடைய சிவன் என்கிறேன், அதனால் தான் கைலாயம் அவனது வீடு என்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் சிவன் குமரன் அவனில்லை..

குறிப்பு... குமரன் அழகாக இருப்பான் அப்பன் அசிங்கமாக இருப்பான்... அசிங்கத்தில் இருந்து தான் அழகு கிடைக்கும் நமது சினிமா நடிகைகள் போல,,,

தாமரை வளர்வது சேற்றில் என்றார்கள்...

சிந்தியுங்கள்.. ஆசிரியராக எனது சேவையை செய்ய்கிறேன்,, மாணவனாக முடிந்தால் படியுங்கள்... நிச்சயம் பரீட்சை உண்டு..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment