Tuesday, September 16, 2014

வேதங்களும் யாகங்களும்.. புலால் சீவகாருண்யம்..

வணக்கம் தோழர்களே,

வாசகர் ஒருவர் எம்மிடம் நீண்ட வாதம் ஒன்றை செய்தார், அதாவது புலால் உண்ணுதல் கூடாது என்றும் அப்படி உண்பவன் பேய்க்கு ஒப்பானவன் என்றும், கூறினார்...

எப்போதும் போல நாம் சில கேள்விகள் கேட்டோம், அதற்கு பதில்கள் இல்லை. ஆனால் உண்ணக்கூடாது என்று அதற்கான சாட்சிகள் பல,, சாமியார்களின் புத்தகங்களில் இருந்து பதிப்பிட்டார்.. அதில் திருமுறைகள், கீதை, என பல புராணங்கள், வரலாறுகள் காட்டினார்... அதில் அவரின் அறிவின் தேடலின் வெளிப்பாடான ஓர் கேள்வி இது..

” மகிமை உள்ள பசுவை ரட்சித்து அதன் பாலை கறந்து உண்ண வேண்டும் அல்லாது அதை வதைத்து உண்ணுவது நியாயமோ? அந்த பாலை ரத்தத்தில் இருந்து வந்ததால் அது புலால் என்றால், பசுவை கொன்று உண்ணும் ஊனை போல அதன் மல மூத்திரங்களையும் உண்ணாமல் நீக்குதல் ஏனோ? பசுவின் ஊனும் புலால், பசுவின் பாலும் புலால், அதன் மல மூத்திரமும் புலால் தானே. தள்ளுவன தள்ளலும், கொள்ளுவன கொள்ளலும் பகுத்தறிவாம். உய்த்து உணர்க”

அடியாரின் அறிவு எப்படி என்று பாருங்கள்.. ஓர் சிறு விடயம் சைவத்தில் இருப்பது கூட தெரியாமல் ஆராய்சி செய்ய ஆரம்பித்து, எம்முடன் வாதத்துக்கும் வந்துவிட்டார்..

பஞ்ச கவ்வியம், என்றால் என்ன என்று தெரியாதவன் எல்லாம் இங்கு சமயம் பற்றி பேசுவது ஆச்சரியம் இல்லை, அவமானம்..

நாம் எப்போதும் கூறுவது போல் அடியும் இல்லாமல் முடியும் இல்லாமல் பேசுவதை விடுத்து ஆராய்ந்து படியுங்கள்..

இதற்கு மேல் உங்கள் புலால் உண்ணாமையையும், சீவகாருண்யத்தையும், அதை சொன்ன உங்கள் சாமியார்களையும் வதம் செய்யாமல் இருக்க முடியாது.. முட்டாப் பசங்களே... சாமியார் பக்த்தர்களே.. கேளுங்கள்..

சமயத்தின் அடி தளத்தில் இருந்து உங்கள் வாதங்களை தவடு பொடியாக்கலாம்.. வேதம் இல்லை என்றால் நீங்களும் இல்லை சமயமும் இல்லை..

யசுர் வேதம் என்பது எதைப் பற்றி பேசுகிறது தெரியுமா... முட்டால் சாமியார்களே, முட்டால் குருமார்களே... உயிர் பலி கொடுக்கும் யாகங்கள் பற்றிய் தொகுப்பு... அதில் 30க்கு மேல் கடுமையான சக்திகளை தரக்கூடிய யாகங்கள் பற்றி விவரிக்கப்படுகிறது, அத்தனையும் உங்கள் கடவுளை மகிழ்விக்க செய்யும் யாகங்கள்.. உயிர் பலிகள்..

வேதம் கடவுள் தந்தது என்று மார்பு தட்டி பேசும் அதே முட்டால் பசங்க... இதை படியுங்கள்...

”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” ஆகவே இங்கு வேதம் கூறும் அசுவமேத யாகம் பற்றி பார்க்கலாம்..

அரசன் தனது பட்டத்து ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவான். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போர் செய்து வெற்றியின் பின்னர், அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். இப்படி இந்த யாகத்தை செய்பவன் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுவான்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் பெண் குதிரையை பார்த்து ஆண் குதிரையின் புணர்சி உறுப்பு நீண்டிருக்கும்.

அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரசனின் ராணி (மனைவி)... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.( அங்கு பல விடயம் நடக்கும்) இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதை படிக்க ஒரு மாதிரித்தான் இருக்கும் ஆனால், அசுவமேத யாக ஸ்லோகம் இருப்பது அப்படித்தான்.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...”

இராணி குதிரையுடன் விளையாடும் முறை இது.//

இரவு இப்படி நடந்த பின்னர், நாளை அந்த ஆண் குதிரையை கொன்று அக்கினியில் போட்டு சாம்பலாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.

சமயத்தை மட்டும் பேசினால் போதாது, சமயம் அன்பை போதிக்கிறது என்றால் இங்கு நடப்பது எப்படியான அன்பு...

பசு என்பதற்கு சமசுகிருதத்தில் நான்கு கால் விலங்கு என்று அர்த்தம், இன்று கறவை மாடு என்று ஆகிவிட்டது..

பசு எனும் விலங்கை கறவை மாட்டை போட்டு செய்யும் யாகங்களும் உண்டு.

இராமாயணம் இராமன் பற்றி பேசி மார்பு தட்டும் பலரும் இராமர் எப்படி பிறந்தார் என்பதை பார்க்கலாமா..

அறுபதாயிரத்து மூன்று மனைவிகளை கொண்ட தசரதனுக்கு குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக ருசிய சிருங்கர் முனிவர் வந்தார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். வால்மீகி இராமாயணத்தில் இருந்து..

” Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives. “

விளக்கம்...

தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் (பிராமணர்கள்) இராணி மார்களை புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் இராணிகள் கெற்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்......,

கம்பர், வால்மீகியின் இராமாயணத்தை பிரதி செய்யும் போது (மொழிமாற்றம் செய்யும் போது) கதையை பிரட்டி பேசிவிட்டார்.. கம்பருக்கு ஏன் இந்த பொல்லாத வேலை.. புலவன் பொய் சொல்லுவான் என்பது சரியாகிவிட்டது பார்த்தீர்களா..

” யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கெற்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

இராமாயணம் வால்மீகியால் வட மெழியில் எழுதப்பட்டது, அதை பிற்காலத்தில் தனது புகழ்சிக்காக மொழிபெயர்த்த கம்பர் செய்த கூத்து, இராமாயணத்தை வேறு திசைக்கு கொண்டுபோய்விட்டது..

எதையும் அதன் அடியில் இருந்து தேட வேண்டும்,, அப்போது தான் அதன் முடி கிடைக்கும்..

அதனால் தான் அடி முடி தேடிய கதை இருக்கிறது .. இதை பல முறை நாம் இங்கு கூறிவிட்டோம்..

இப்படி மட்டுமா.. மகா பாரதம் உண்மையின் தத்துவம்... அதையும் பார்க்கலாம்.. தருமன்,, அவன் தரும தேவதையின் மைந்தன் என்று பேசுகிறீர்கள்...

” குருச்சேத்திரப் போருக்குப் பின் தருமன் “சக்கரவர்த்தி” பட்டத்திற்காக அசுவமேத யாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அருச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று யாகம் நடத்தி சக்கரவர்த்தியானான்”

தருமன் செய்த தருமம்... குதிரையை பலியிடுவது மட்டும் அல்ல,, அவன் இரானியை குதிரையுடன் படு.............. செய்திருக்கிறார்ன்,, காரணம் அசுவ மேத யாகத்தின் விதிமுறை அது.

ஒன்றையும் முழுமையாக படிப்பதில்லை.. வந்துட்டாங்க பேசி விளையாட... முட்டாப் பசங்க...

மேலும்...

“ சாதவாகன அரசர்களில் மூன்றாவது மன்னரான முதல் சாதகர்ணி தனது ஆட்சி எல்லைப்பகுதியை தக்காணத்தின் வடக்குப்பகுதியில் நிலை நிறுத்தியதோடு அல்லாமல் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். இதற்காக இரண்டு அசுவமேத யாகம் நடத்தியதாக அறியப்படுகிறது”

உங்கள் அறிவு கெட்ட அறிவை வேறு இடத்தில் வைத்துக் கொள்(ல்)ங்கள்... இங்கு விளையாட வேண்டாம்... நுணிப்புல்லை மேய்ந்த ஆடுகள், காடு இப்படித்தான் இருக்கும் என்று கூறியது போல்... உங்கள் சாமியார்களை அவர்களின் முகங்களை அவர்களின் கோமனத்தால் மூடச் சொல்லுங்கள்...

” சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.”

திருமணம் செய்வது பற்றி வேதம் என்ன கூறுகிறது என்று தெரியுமா.. அல்லது வேதம் ஓதும் அந்தனர் சொல்லும் மொழிதான் புரிகிறதா.

“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... ”

மாட்டை வெட்டித்தான் திருமணம் செய்ய வேண்டும்...

கிரிகொரஹ யாகம் சொல்வதை பாருங்கள்..

இந்த யாகத்துக்கு வர மர அணில் இறைச்சி, குரங்கு இறைச்சி உற்பட 3 வகையான இறைச்சியும், 3 சிரட்டை இரத்தமும் இரு வகையான பூக்களும் தேவைப்படுகின்றது.

என்ன முட்டாப் பசங்களே... கற்றது கையளவு என்பது ஞாபகத்தில் எமக்கு இருக்கிறது... உங்களுக்கு எப்படி...

இதையும் தாண்டி மனித உயிரை பலி கொடுக்கும் யாகம் யார் செய்த்து என்று பார்த்தால் உங்கள் சாமியார்களையும் உங்கள் குருமாரையும் வெட்டி போட்டு உங்கள் யாகத்தை செய்ய் வேண்டும்.

சமயம் என்ற பேரில் நீங்க செய்தது என்ன இப்போது செய்வது என்ன.. ஆனால் நாம் மாற்றிப் பேசுகிறோம்,.. என்று எம்மிடம் சொல்லுகிறீர்கள்..

சந்தியத்துக்காக வாழ்ந்தவன் அரிச்சந்திரன் என்றுதான் உங்களுக்கு தெரியும். அவனின் சத்தியம் என்ன என்று பார்க்களாம்..

அரிச்சந்திரன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று ” நர மேத யாகம்” செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் சீவகாருண்யத்தையும், புலால் உண்னாமையையும்.. எவன் சொல்கிறானோ... அவன் சைவத்துக்கு எதிரியானவன் என்கிறது வேத மந்திரங்கள்...

சமயம் செய்த கடவுள் சொன்னது பொய்,,, கடவுள் இருக்கிறார் என்று பூச்சாண்டி காட்டும் உங்கள் சாமியார்கள் உண்மை... என்னங்கடா உங்க அறிவு...

உங்கள் சாமியார்களின் சுயலாபத்துக்காக பேசிய விடயங்கள் உங்கள் முட்டால் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.. அது பகுத்தறின் ஞானத்தில் இருப்பவனுக்கு தூசியிலும் சிறியதே...

முட்டால் பசங்க என்று நாம் கூறியது யாரை என்று முட்டால் பசங்களுக்கு புரிந்தால் சரி...

இனியாவது கடவுள் என்ற பேரில் சாமியார்களிடம் கைகட்டி தலை குனிந்து நிற்காமல்,,, உங்கல் உடலை காக்கும் உண்மையான வழிகளை தேடுங்கள்..

மேடைகளில் சாமியார்கள் பேசினால் அவர்களிடன் கேள்விகள் கேளுங்கள். பூம்பூம் மாடுகள் போல் தலையாட்டாமல் சிந்தியுங்கள்..

எமது பதிவுகள் பலரும் பிரதி செய்து வியாபாரம் செய்வதாகவும் பல தகவல்கள் சாட்சிகளுடன் எமக்கு கிடைத்தவண்ணம் இருக்கிறது. நிறுத்திக் கொள்ளுங்கள்..

விரைவில் முக நூல் தனிப்பயனாக்கப்படும். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அழைக்கப்படுவர்...

” முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment