Sunday, August 31, 2014

ஜீவகாருண்யம்,,,,

வணக்கம் தோழர்களே,

இந்த வள்ளலார் என்ற ஒருவரை பின்பற்றும் அன்பர்களின் போதனைகள் தாங்க முடியல சாமி...

அருட்பெரும்ஜோதி, தனிப் பெரும் கருனை.. இது என்னடா கோதாரி வந்திருக்கு... பலரும் ஆகா ஓகோ என்றாங்க...!

ஜீவ காருண்யம் என்றால் என்ன என்று வள்ளலாருக்கே தெரியாது போல...

ஒரு சிறு கேள்வி... ஜீவகாருண்யம் பற்றி..

உயிரற்ற ஒரு பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, அது எதுவாக இருந்தாலும் அதில் அணுக்கல் இருக்கும் உண்மை தெரியாதா.. அந்த ஆணுக்களைத் தானே உயிர் என்பது, எதுவாக அது இருந்தாலும் அணுமாற்றத்தின் மூலமே அதன் தன்மை மாறுபடுகிறது அல்லவா.. சரி அப்படி இல்லை என்றால் பாசியில் (அல்கா) இருந்து தானே தாவரங்கள் வகைப்படுத்தப்படுகிறது, அவை உயிர் உள்ளதனால் தானே வளர்கிறது.. அவற்றின் வளர்ச்சிக்கு அதன் அணுமாற்றம் தானே காரணம். இவர் ஜீவகாருண்யம் என்றால் எதை சொல்கிறார்.. இங்கு சைவம் அசைவம் என்ற வேறுபாட்டுடன் எந்த உயிரும் படைக்கப் படவில்லை, அனைத்தும் ஒன்றாகவே படைக்கப் பட்டிருப்பது கூட தெரியாத ஞானி..

பருத்தியின் பஞ்சு தான் உடையாக இருக்கிறது என்றால்.. பருத்தி இங்கு நீங்கள் உடை தயாரிப்பதற்காக படைக்கப்படவில்லையே.. அப்படி இல்லை என்றால் மற்றவையும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று தானே கூறவேண்டும்..

இந்த பட்டுப் பூச்சியின் கூடு ஜீவகாருண்யம் இல்லையா..! உடலை மறைக்க உங்கள் மனைவிகள் உடுத்தும் துனி... அது எங்கிருந்து வந்தது... பட்டுப் பூச்சியிடம் இருந்து... பட்டுப் பூச்சி வெளிவிடும் பஞ்சு அதன் முட்டையை காக்கவும் குஞ்சுகளை காக்கவும் தானே..அப்படி பட்டுப் பூச்சியைக் கொன்று உடலை மறைக்க துனி போட்டிருக்கும் நீங்கள் ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறீர்கள்..

அவர் சொன்னது உண்மை என்று எந்த அறிவாழியும் ஏற்க மாட்டான்.

ஏண்டா அப்பா.. சிந்தித்து பார்க்கும் அறிவு மொத்தமா போயிட்டா உங்களுக்கு...

அது போகட்டும்... இதைப் பாருங்கள்
ஒரு தளத்தில் இருந்து எடுத்தது வள்ளலாரின் வாரிசுகளாம்

“Most important NOTE to Members of Suddha Sanmarga ;-

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-”
-----------------------
சமயம் மதம் இவற்றை விட்டவர்கள் தான் சன்மார்கமாம்... சிரிப்பாயில்லை..

அவரே சொல்கிறார் யாரையும் வணங்காதே என்று,, இவனுங்க அவரையே படமா போட்டு ஆனில மாட்டி பூப் போட்டு கும்பிடுறானுங்க.. என்னடா உங்க கொள்கை..

”இதோ அவரே வெளியிட்ட 12.04.1871 அறிக்கையில் தன் மார்க்க கடவுளை வெளிப்படுத்துகிறார்.”

“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”

இவரின் கூற்றுப்படி மற்றவர்களின் அறிவில் கிடைத்தவை எல்லாம் கதைகலாம்,, இவரின் அறிவில் வந்தவை மட்டும் உண்மையாம்.. முழுப் பூசனியை சோற்றில் மறைக்கிறது இது தான்.. பார்த்துக் கோங்க...

எந்த சமய மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது சுத்த சன்மார்க்கத்துக்கு.. அப்பிடின்னா.. இவனுங்க எப்படி கல்யானம் பன்னி பிள்ளை பெர்றானுங்க... அதும் ஜோதியாய் வருமோ...

மதம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தம்.. கலாச்சாரத்தை விட்டு விடு என்றால் உடுப்பே போடக்கூடாதே... ஏண்டாப்பா உங்களுக்கு வீடுகளே தேவையில்லையே.. அதுவும் கலாச்சாரம் தானே..

அதுவும் போகட்டும் உங்களுக்கு பெயர்களே இருக்கக் கூடாதே... நீங்கள் எழுதும் மொழிகள் அனைத்தும் ஒரு கலாச்சாரத்தின் அங்கம் அல்லவா...

நீங்கள் மதம் என்று எதை கூறிகிறீர்கள் சமயம் என்று எதை கூறுகிறீர்கள் என்று விளக்கமாக உங்கள் சன்மார்க்க குருவிடம் முதலில் கேளுங்கள்..

சன்மார்கத்தில் இருப்பவன் எவனும் வக்கீலாக இருக்க கூடாதே.. ஆனால் பலர் இருக்கிறீர்கள், தனியார் மருத்துவ மனை செய்யக் கூடாது அங்கு வேலையும் செய்யக் கூடாது ஆனால் பலர் இருக்கிறீர்கள்...

கேட்டால் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பீர்கள் அதுக்கு விவசாயம் போதும், அதுவும் உங்கள் உணவுக்கு மட்டும் போதுமான அளவு செய்யுங்கள்.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் அரச பாடசாலையில் படிக்கிறது.. இலவச கல்வியை நாடுகிறது.. தனியார் பாடசாலையில் வரிசையில் நின்று கட்டனம் கட்டி சேர்த்துவிட்டு சன்மார்கம் ஜீவகாருண்யம் பேசுகிறீர்கள்..

சன்மார்க்கத்தில் இருப்பவர் எத்தனைப் பேருக்கு மலிகை கடை இருக்கு துனிக்கடை இருக்கு அதில் எத்தனை வீதம் இலாபம் வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நகை கடைகள் இருக்கு அங்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்கிறீர்கள்..

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு அப்பவின் பெயரை சேர்க்க கூடாது.. மத அமைப்பின் வெளிப்பாட்டின் அடித்தளம் இது தான்.. முடியுமா உங்களால்.. முடிந்தால் வாழ்ந்துகாட்டுங்கள்.. இன்னாரின் மகன் என்று சொல்லக் கூடாது, இன்னார் தான் எனது அப்பா என்றும் சொல்லக் கூடாது.. கேட்டால் யாரும் இல்லை என்று கூறவேண்டும்..

படைப்பே இங்கு சன்மார்க்கத்தில் இல்லை, பிறகு எதைப் பற்றி பேசுகிறீர்கள்.. உங்கள் வீட்டுக்கார அம்மா..(மனைவி) வீட்டுக்கு விலக்கு வந்தால் தான் தாயாக முடியும்,.. அதுவே மிகப் பெரிய அசைவம்... முடிந்தால் அவர்களை தொடாதீர்கள்... அப்படியே நீங்களே இரத்தம், சதை, மச்சை, மயிர் எனத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்கள் ஆகவே நீங்களே மிகப் பெரிய மாமிசம்...

சும்மா ஊரை ஏமாத்துரத்த விட்டுட்டு நேர்மையாக உழைத்து சாப்பிடுங்கப்பா... அது தான் கடவுள் ....

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment