Sunday, August 31, 2014

“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”

வணக்கம் தோழர்களே.

திரு R Prabu Mec, என்பவர் சில குற்றச் சாட்டை வைத்திருக்கிறார், அவர் சொல்வதற்கு பதில் கொடுப்பது நமது கடமை அல்லவா..

வணக்கம் R Prabu Mec,கருத்து இல்லாத தளத்தை பார்வையிட இத்தனை காலம் ஏன் காத்திருந்தீர்கள்...

இங்கு நண்பராக வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டீர்கள்...

தெரிஞ்சவங்க அமைதியா இருந்தா உங்களுக்கு எப்படி எம்மை விட முப்பு குரு பற்றி அதிகம் தெரிஞ்சவங்க இருக்காங்க என்று தெரியும்... ஒரு வேலை கனவு கானும் பழக்கம் இருக்குமோ...

அல்லது ஞான திருஸ்டியால் கண்டீர்களோ..

அப்படி ஞான திருஸ்டி என்றால் நாம் இருக்கும் விலாசம் சொல்ல முடியுமா...

நாம் எங்காவது எமக்குத் தான் இவை தெரியும் என்று பதிவிட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அல்லது எங்காவது எம்மைவிட சிறந்தவர் இல்லை என்று எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...

நீங்களா முடிவெடுத்து பேசுறதுக்கு என்ன செய்றது தம்பி.. விடயத்தில் கருத்து இருக்கா இல்லையா என்று பார்க்குறத்துக்கு அறிவு வேனும் அப்பனே..

இவை நீங்கள் எம்மைப் பற்றி கூறியது

“ நான் என்ற அகந்தை அதிகம் உள்ளது !

உங்கழுக்கும் மேலான சிறந்த முப்பு குரு மருந்து அறிந்த மூர்த்தவங்கல்லாம் அமைதியா இருக்காங்க.

"யாரொருவர் தன்னை அறிவாழியாக நினைக்க ஆரம்பிக்கின்றாறோ அக்கமே முட்டாள் ஆகிறார்"

"யாரொருவர் தன்னை முட்டாளாக கருதி அமைதி காக்கின்றாறோ அக்கனமே அறிவாழி ஆகின்றார்"

கற்றது கையலவு ,
கல்லாதது உலகலவு ..

நீங்க எல்லாரையும் முட்டாலா நினைத்து பேசுவது தவறு ..

நீங்க பக்கம் பக்கமா எழுதுரிங்கலே தவிர கருத்து ஒன்றும் இல்லை !

அவ்வளவு தொழில் நுனுக்கம் உங்களிடம் ...

தனக்கு மட்டுந்தா எல்லாம் தெரியும்னு நினைச்சி பேசுறது ரொம்ப தவறு ...”

நாம் எப்போதும் எல்லோரையும் முட்டால் என்று சொல்லவில்லையே.. முட்டாலைத் தான் அப்படி சொன்னோம்,,, ஒரு வேலை அது உங்களை பாதித்தால் நீங்கள் யார் என்று புரிகிறது..

அறிவாழி என்றால் அமைதியாய் இருப்பாங்க என்று எந்த முட்டாப் பயல் உங்களுக்கு சொன்னது..

ஆயிரக கணக்கில் பாடல்களாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துக்கள் “ தொல்காப்பியம் முதல் அர்த்தமுள்ள இந்துமதம் வரை” முட்டால்கள் எழுதினதாக நீங்க சொல்றீங்க.. அதாவது அறிவாழி அமைதியா இருந்தா... எழுதினது எல்லாம் யாரு..!

அவ்வையார் முட்டால் அது தான் அவர் பாடிய பாடலை இங்கு எமக்கு சுட்டிக் காட்டி இருக்கீங்க அப்படித் தானே.. உங்கள் கருத்துப் படி நான் அறிவாழியாக இருக்க விரும்பவில்லை... அவ்வையைப் போல் முட்டாலாகவே இருக்க ஆசைப் படுகிறேன்,,

தமிழ் இலக்கியத்தில் அவை அடக்கம் என்றும் அவயை அடக்குதல் என்றும் இரு மரபுகள் உண்டு தெரியுமா தம்பிக்கு... அது தெரிந்தால் ஏன் இந்தக் கேள்வி கேட்கப் போறீர்கள்..


அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத் தவன்

---இறைவன்.

சங்கறுப்ப தெங்கள் குலம்,சங்கரனார்க்கு ஏதுகுலம்,
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை..

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

---நக்கீரர்


நான் தமிழன்....

அடிமை அல்ல....

கேள்வி எவனிடமும் கேட்பேன், அவன் செய்வது தவறாக இருந்தால்...

நீ சரியானவனாக இருந்தால் தெளிவான ஞானம் இருப்பின் கேள்விக்கு பதில் சொல்.. இல்லையா ஓடி விடு...

சித்தர்கள் அமைதியார் இருந்தால் இந்த முப்பு குரு பற்றி நீயும் பேசியிருக்க முடியாது.. எம்மை விட மூத்த அனுபவசாலிகள் பலர் இருக்கட்டும் அவர்கள் அமைதியாய் ஏன் இருக்கிறார்கள்.. உன்னைப் போல் பலரும் பேசுவதனால் தான்..

சமூகத்துக்கு பயந்தவன் தான் அமைதியாக இருப்பான்,.. கடவுளை நேசிப்பவன் ஏன் பயப்பட வேண்டும்,

அவனின்றி அணுவும் அசையாது என்று பலரும் சொல்ல முடியும் அப்படி இருக்க வேண்டும்.. அவனே சித்தன்..

சித்து விளையாடுபவன் சித்தன் கிடையாது சித்துக்கு விளையாடுபவனே சித்தன்,,, புரிகிறதா இலக்கியம்,..

இலக்கிய அறிவுக்கு ஓர் சாட்சி மற்றும் அறிவாழி எப்படி பேசுவான் என்பதற்கும் ஓர் சாட்சி..

“ உதாரணமாக, ஒரே ஒரு பாடல்.

காளமேகம் புலவர் ஒரு அரசரின் சபைக்குச் சென்றிருக்கிறார். அங்கே சிலர் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு, இவரை மேலும், கீழுமாக ஆராய்ந்திருக்கிறார்கள்.

'யார் நீ ?', என்று அவர்கள் காளமேகத்தை அதட்ட, அவருக்குக் கோபம் வந்துவிட்டது, 'நீங்கள் யார் ? அதை முதலில் சொல்லுங்கள்' என்று எதிர்க் கேள்வி போட்டிருக்கிறார்.

'நாங்கள் கவிகள்', என்று அவர்கள் கம்பீரமாகச் சொன்னதும், காளமேகத்துக்குச் சிரிப்பு. அப்போது அவர் பாடிய பாடல்தான் இது :

'வாலெங்கே நீண்டெழுத்த வல்லுகிரெங்கே, நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காண் நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.'

கவி என்றால் கவிதை பாடுபவர் என்றும் குரங்கு என்றும் அர்த்தம்..

அறிவாழி பேசாமல் இருப்பான் என்று கூறிய முட்டாலிடம் போய் சொல்லுங்கள்.. அறிவாழி என்றால் போசனும் என்று..

பேசாமல் இருந்தால் அவன் பயந்தவன் என்று அர்த்தம்..

நாம் இங்கு கணிதம் விஞ்ஞானம் புவியியல் மெய்யியல் வானியல் என பாடமா நடத்துகிறோம்... எமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல... பின்னர் ஏன் இந்த வசனம் இங்கு போட்டிருக்கீங்க தம்பி..

“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”

இது அவ்வை அவருக்கு அவர் கூறிய விடயம்... அவரிடம் தமிழ் மற்றும் சமயம் பற்றி பேசினால் பதில் சொல்லியிருப்பார்.. மாறாக வெங்காயம் நாட்ட சிறந்த பூமி எது என்றால் இப்படித்தான் சொல்வார்..

சிந்திக்க தெரியாதவன் உங்களைப் போல் தான் கேள்வி கேட்பான்.. கருத்தும் சொல்வான்,, சிந்திக்க தெரிந்ததனால் தான் எனது பதிவின் கருத்து உனக்கு பிரியவில்லை.

இப்ப முட்டாப் பசங்க இருக்காங்கலா இல்லையா... இருந்தா அவங்கள அப்படி கூப்பிட்டா என்ன..!

கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்கும் காரணம் தெரியுமா.. உண்மை என்பது ஒன்று என்பதற்காகவே.. அப்படி இருக்க மூன்றாவது கண்ணைத் திறக்க பயிற்சி செய்றவனை முட்டால் எங்காம என்ன சொல்றது..

சூரிய உதயம் இல்லாத நாட்டுல பிறக்கும் குழந்தைக்கு எப்படிடா சாதகம் எழுதுவீங்க என்னா இது விதண்டா வாதமா.... இல்லை மணிக்கூடு ( கடிகாரம்) இல்லாத காலத்தில் எதை வைத்து நாழிகை கணித்தீர்கள் அல்லது சூரிய உதயம் கணித்தீர்கள் என்றால் விதண்டா வாதமா..!

முடிந்தால் சில அறிவாழிகளை காட்டுங்கள் நாம் அவர்களிடம் கற்க ஆவலாகவே இருக்கிறோம்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர் (சிலரின் மகிழ்சிக்காக)

No comments:

Post a Comment