Wednesday, August 27, 2014

சாதகம் பார்ப்பது...

வணக்கம் தோழர்களே,


இன்று ஒரு முக்கியமான விடயத்தை பற்றி உங்களுக்கு கேள்வி கேட்டு அதற்கு சரியான ஆய்வினை தருபவருக்கு சித்தர்கள் கூறிய மூலிகை “ நத்தைச் சூரி” எது என்ற விளக்கம் அதன் எட்டுவகைப் பெயர், பரிபாசை பாடல், குணபாடம், அகராதி விளக்கம், என அனைத்து ஆதாரங்களுடனும் தரப்படும்.

காரணம் சென்ற முறை நாம் சிவன் தான் பெருங்கடவுளா அதற்கான ஆதாரங்கள் தரமுடியுமா என்ற கேள்வியை கேட்டதற்கு ஒரு நபர் என்னிடம் நேரடியாக கேட்காமல், எம்முடைய மாணவர் என்ற ஒருவரிடம் கேட்டிரிக்கிறார்.

“ இவர் யார் கேள்வி கேட்பதற்கும் பரிசு கொடுப்பதற்கு” என்று.. அவரிடம் நாம் கேட்பது நீங்கள் யார் அதை நான் செய்யக் கூடாது என்பதற்கு... உங்களால் மறுக்கப் படும் விடயம் சாத்தியம் என்றால் அதை ஆமோதிக்க எம்மல் முடியாத என்ற சிந்தனை கூட இல்லை, கடவுளைப் பற்றி பேசுவது...

சரி விடயம் இதுதான்.. இந்த சோதிடக் கலை நிபுணர்களுக்கு இந்த கேள்வி.

”கெட்டவன் கெட்டுடில் கிட்டிடும் இராஜ யோகம்” 

சோதிடகலை நிபுணர்கள் இது இல்லை என்று கூறமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இதில் கெட்டவன் என்பது யாரை அவன் மேலும் கெடுவது என்பது என்ன?

நவக்கிரகங்கள் என்றால் ஒன்பது கோள்கள் என்று அர்த்தம் கூறும் நிபுணர்கள், இந்த ஒன்பது கோள்களில் எது அல்லது எவை கெட்டவன் என்ற பெயர் பெருகிறான் என்ற விளக்கத்தை தரவும்.

மிக அவதானமான ஆய்வுகள் எமக்கு வேண்டும், இல்லாது போனால், எம்மை குறைகூறக் கூடாது..
















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment