Friday, May 16, 2014

துவாலை மறிக்க பெண்களுக்கு

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓர் மாந்திரீகப் பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி, ஆனால் மற்றவர்கள் தங்கள் தளங்களில் போட்டு கூறி விற்காவிட்டால் போதும்.

இது பெண்களுக்கு மிக அவசியமான ஓர் பதிவாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

துவாலை மறிக்க என்ற பெயரிடப்பட்ட மந்திரிக வரிசையில் இலகுவான முறை இது. அதாவது துவாலை என்பது பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் பெருக்கை குறிக்கும். தொடர்ச்சியான உதிரப் பெருக்கு ஏற்பட்டு பெண்கள் அதிக சோர்வடைவதால் பல உடல் மன உபாதைகள் ஏற்பட்டு மிகவும் வருந்தியவன்னம் இருப்பார்கள். அவர்கள் தாங்களே இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டு பயன்படுத்த முடியும்.

மந்திரம்

ஓம் பஞ்சமாயோகி பாதாளயோகி பரமசிவனே பாரச்சட்டி என்முகம் இறங்காதே, நில்லடி அம்மே திரிமுடி காளி திருவசம் பற்றாதே தறியடி தம்போதறி சுவாக..

கிரிகை.

ஒரு சிறு கலசத்தில் கை படாமல் சுத்த சலம் எடுத்து அதில் சற்று விபூதி தூவி இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அருந்தினால் துவாலை கட்டும்.

மந்திரத்தை சித்தி செய்ய..

தினம் 108 வீதம் 7 நாட்கள் உருச் செய்யவும். பின்னர் தேவையானவருக்கு சலம் உரு செய்து கொடுக்கலாம். 









 







நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment