Monday, May 19, 2014

பிரமச்சரியம் .,,,

வணக்கம் தோழர்களே,

இந்த (இந்து) சமய மேதாவிகள் சாமியார்கள் என்ன சொல்றாங்க என்னே புரியமாட்டேங்குது. எனது புலம்பல், யாரையும் குறிப்பிடவில்லை.

முக நூலில் இணையத்தளத்தில் பரவலாக பேசப்படும் போதிக்கப்படும் விடயங்களில் இந்த சைவ அசைவ கோட்பாடு மிக கடுமையாக இருக்குது. அதிலும் பிரமச்சரியம் ஒருபக்கம்.

முக்திக்கு வழி என்ற பெயரில் நடப்பது என்ன என்ற தெளிவுகூட இல்லாமல் மக்கள் பணத்தை செலவு செய்து பாவத்தையே பாக்கியமாக பெருகிறார்கள் போல இருக்கு.

இந்த சைவம் அசைவம் இரண்டையும் பற்றி பேசி முக்திக்கு வழி காட்டும் வாதிகளிடம் ஒரு சிறு கேள்வி.

” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் “

இப்ப சிவபுராணத்தின் படி ஒரு ஆத்மா இத்தனை பிறவிகளை எடுக்கிறது என்று கூறப்படுகிறது அல்லவா..! இதன் படி மிருகமாக அசுரராக பாம்பாக பறவையாக பல பிறவிகளை எடுக்கும் போது இந்த அதே ஆத்மா எவற்றை எல்லாம் சாப்பிட்டிருக்கும். அப்படி கண்டதையும் சாப்பிட்ட அதே ஆத்மா தானே முக்தியையும் அடைய பாடுபடுகிறது. இப்படி இருக்க சைவ அசைவ விடயம் ஒன்று எப்படி முக்தியை தடுக்க முடியும். இதில் சைவ அசைவம் என்றாலே என்ன என்று இங்கு யாருக்கும் தெரியாது அது அப்படி இருக்க, இந்த சைவ அசைவ கேட்பாடுகளை கூறும், கூறியதாக கட்டப்படும் கதைகளின் அர்த்தம் என்ன.! (வியாபாரம்..!)

அப்படியே பிரம்மச்சரியம் காக்க வேண்டுமாம், விந்து கழிதமாகதவனே முக்தியை அடைவானாம், யோகம் கிட்டுமாம், ஞானம் கிடைக்குமாம், மந்திரம் சித்தியாகுமாம் இப்படி பல புரட்டுகள் வேறு. ஏங்க உங்க அம்மா அப்பா இணைந்ததால் தான் நீங்களே வந்தீங்க, இல்லேன்னா நீங்களே இல்ல, அப்படி இருக்க விந்து விடக்கூடாது பிரமச்சரியம் காக்கனும் என்றால் எப்படி சாத்தியம். சரி அதையும் விடுவோம்..... படைத்தலின் அடிப்படையே விந்தில் தானே இருக்கிறது, நீங்கள் விந்தை விடவில்லை என்றால் இறைவனின் தத்துவத்துக்கெ முறனானவராக மாறுகிறீர்கள், அப்புரம் எப்படி இறைவனை நோக்கி முத்தியை அடைவது.

பிறப்பு இல்லை என்றால் யாருங்க சமயத்தை வளர்ப்பது. பிறப்பு இல்லை என்றால் யாருங்க வரலாற்றில் உங்கள் பெயரை முக்தியடைந்தவர் இவர் என்று பதிவு செய்வது. பிறப்பில்லை என்றால் எப்படி பிரபஞ்சம் இயங்குவது, பிறப்பில்லை என்றால் யாருக்காக இறைவன் தேவைப்படுகிறான். பிறப்பில்லை என்றால் ஏனுங்க இந்த வரலாற்று சுவடுகள் நமக்கு..

விந்து என்ற சொலுக்கான பொருள் என்ன என்று தெரியாதவர் எல்லாம் சமய வாதிகள் சாமியார்கள், ஆதீனாதி பதிகள். தமிழ் அகராதியையும் நிகண்டையும் எடுத்து வைத்துக்கொண்டு பொருள் தேடும், பொருள் கூறுவதும் ஞானம் அல்ல. அதை குழந்தை கூட சொல்லும்.

ஏங்க காவி அல்லது வெள்ளை கட்டிக்கொண்டு உலக வாழ்கையை விட்டு வெளியேறினால் முக்தி கிடைக்கும் என்று யாருங்க கண்டுபிடிச்சது. அல்லது அவங்க சொன்னது சொல்றது எல்லாம் சரி என்று எந்த ஆய்வும் செய்யாமல் எப்படி இங்க நம்புகிறீங்க..!

உங்கள் வீடுகளில் இருக்கு சாமிப்படங்களில் எத்தனை சாமிகள் காவியும் வெள்ளையும் உடுத்து உலக வாழகைக்கு உட்படாமல் இருக்கு என்று பாக்க மாட்டீங்கலா..! அல்லது வெறும் படம் என்றால் ஏங்க வீட்டில் வைத்து பூசை செய்றீங்க..!

அன்றைய காலகட்டத்தில் முனிவர், சித்தர், ஞானியர், என அவர்கள் காடுகளில் இருந்தார்கள் என்றால் அதற்கான காரணத்தை சரியாக ஆய்வு செய்ய வேண்டும், அதை விட்டு அவர்கள் உலக வாழ்கையை வெறுத்து காடு சென்றனர் என்றும், பிரமச்சரியம் காத்தனர் என்றும், சன்னியாசம் பூண்டனர் என்றும் கூறுவது அறியாமையின் வெளிப்பாடே..!

இந்த ஆச்சி(ரமம்) என்ற பெயரில் பணம் சம்பாதிக்க சமயத்தையும் இறைவனையும் மக்களையும் ஏமாற்றாமல் இருந்தாலே முக்தி கிடைக்கும்.

இது எனது தனிக்கருத்து, தவறு என்று உணரும் அன்பு நெஞ்சங்கள் தடை இன்றி எனது முக நூலை விட்டு வெளியேறலாம், அதை விட்டு வாதம் செய்ய முட்பட்டு விதண்டாவாதம் செய்வதாக நம்மை பேசினால், தண்டனை உடன் கிடைக்கும் (அது தாங்க நண்பரில் இருந்து நீக்கம்) செய்யப்படுவீர்கள். உங்கள் கருத்தை உங்கள் முக நூலில் பதிவிடுங்கள். சாட்சிகளுடன் பேசுங்கள் ஆய்வு செய்வோம்.

நன்றி

சிவஸ்ரீ மா கோமுதலியார்
சித்த மருத்துவர்

1 comment: