Friday, October 18, 2013

புவனேஸ்வரி மந்திரம் - வாலாயம் செய்யலாம்

வணக்கம் தோழர்களே,

வாலாயம் செய்யும் தெய்வ வரிசையில் அடுத்து வருவது புவனேஸ்வரி மந்திரம். அதாவது சித்தர்கள் முதல் அகோரிகள் வரை பிரசித்தி பெற்ற இம் மந்திரத்தை முறைப்படி செய்யின் அட்டமாசித்திகளும் இலகுவில் கை கூடும்.

மந்திரம் 

ஓம் நமோ மாதங்கி ஈசுபரி ஸ்ரீயும் கிறீயும் சர்வ லோக வசீகரி கிலியும் சர்வ ராச வசீகரி கிலியும் சர்வ துட்ட மிருக வசீகரி புவனேஸ்வரியே சுவாகா. 

 அட்ஷரம்
















கிரிகை

சந்தன கல்லில் சந்தனத்தால் கீரி அதி இருக்கும் சந்தனத்தை தினமும் பொட்டிடவும். 

வாலாயம் செய்தல் பதிவை படிக்கவும். 

நன்றி.

வால சுப்ரமணியர் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

தெய்வங்களை வாலாயம் பன்னும் வரிசையில் மீண்டும் ஓர் பதிவு.

வால சுப்ரமணியர் எனும் முகனின் அம்சமான இவர் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். மாந்திரீக அப்பியாசம் செய்ய ஆரம்பிக்கும் அனைவரும் வணங்கவேண்டிய தெய்வம் இவர். சிவ அம்சமான சுப்ரமணியர் மாந்திரீக சக்தியும் ஞான சக்தியும் அதிகமாக கொண்ட தெய்வ அம்சமாவார். 


மந்திரம்.

ஓம் சரவணபவ ஓம் சயஒளிபவ ஓம் திரிபுரபவ ஓம் திகழொளிபவ ஓங் ஆங் ஊங் காயாதி திருட்டி ஆதி தேவா வருக வருக முருகா வருக வருக அக்கினி வா வா வீசு வீசு ஓங் கயிலை ஓங் ஆங் ஊங் அரங்ங அரங்ங அசி நசி மசி வசி அக்கினியாயாய நம. 

கிரிகை

விபூதியை எடுத்து அதில் “சரவணபவ” என எழுதி 108 உரு செய்து தினமும் பூசவும். 

சர்வ வசியம், எதிரி நாசம், சர்வ பாக்கியம் கிடைக்கும்.

நன்றி.

தூ துவலை கற்பம் - உடல் பருமன் இனி இல்லை

வணக்கம் வாசக நெஞ்சங்களே,

உடல் பருமன் தொடர்பான பல தகவல்கள் பலதரப்பட்ட இணையத்தளங்களிள்  விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவரும் சரியான மருந்தை பதிவிட்டுள்ளதாக தெரியவில்லை.

உணவுக்கட்டுப்பாடு தொடர்பாகவே எழுதி இருக்கிறார்கள். அதை சாப்பிடாதே, இதை குடிக்காதே, அதிகமாக தூங்கவேண்டாம் இப்படி பல பல ஆலோசனைகள் தரப்படுகிறது. ஆனால் அதற்கான மருந்து எது என்று யாரும் கூறுவதில்லை.

உணவுக்கட்டுப்பாடு மருந்தில்லாத போது எப்படி பலன் தரும். இருக்கும் உடலை அது மேலும் வளராது கட்டுப்படுத்தும் ஆனால் மருந்து தானே உடலை சீராக்கும். 

அப்படி உங்கள் கவலை இனி தேவையில்லை. தூ துவலை எனும் இந்த கற்ப மருந்தை முறைப்படி மண்டலம் சாப்பிட்டால் நல்ல பலன் தரும். 


தூ துவலை செடியை பலருக்கும் தெரியும் என்ற காரணத்தால் அதன் படம் இங்கு தரவில்லை.

செய்முறை

தூ துவலை செடியை சமூலமாக பிடுங்கி (அதாவது ஆணி வேர் முதல் பூ காய் கனி வரை அனைத்தும் சேர்ந்தது) நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து வண்டு கட்டி பிட்டவியலாக அவித்து மீண்டும் சூரணித்து நன்கு உலர்ந்த மூங்கில் குடுவையில் அடைத்து இரு வாரம் கடந்த பின் அந்த சூரணத்தை மூவிரல் பிரமானம் எடுத்து வலது உள்ளங் கையில் வைத்து சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டி வீதம் கலந்து அதிகாலையில் மட்டும் சாப்பிடவும்.

ஒரு மண்டலம் என்பது 40 நாள் என சிலரும் 48 நாள் என சிலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.

உணவுக்கட்டுப்பாடுடன் முறைப்படி செய்யின் நல்ல பலன் கிடைப்பது உறுதி.

உணவு கட்டுப்பாடு என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா.

நன்றி
 



Thursday, October 17, 2013

அஞ்சனாதேவி மூல மந்திரம்

அன்பான தோழரே,

உங்கள் ஆசையை மட்டும் ஏன் தடை செய்வான் என்று நீங்கள் கேட்கும் அஞ்சனாதேவி மூல மந்திரம் இங்கு தருகிறேன்.

மூல மந்திரம் எப்போதும் மிக சிறிதாகவே இருக்கும். 

அஞ்சனாதேவி மூல மந்திரம் எனது முன்னோரின் வாகட பதிவில் இருந்து.

மந்திரம் 1

ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா

 மந்திரம் 2

ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா

மந்திரம் சித்தர் பாடலில் இருந்து

ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.

இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன இருப்பினும் நான் இவை மூன்றையும் தான் பயன்படுத்துவது.

நன்றி.

மந்திர சித்தி தொடர்பான விளக்கம் மீண்டும்.

வணக்கம் தோழர்.

----   சித்தி மந்திரம்
ஓம் அய்யும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் அய்யும் நம சக்தி நடன சக்தி வீர வீரேஸ்வரியே அகோர சங்ஙார தேவி வா வா வாலை பரமேஸ்பரியே நம.

கிரிகை
வெத்திலையால் தண்ணீர் ஓதி குடித்தபின் மந்திரப்பிரயோகம் செய்யவும்
உரு முதல் தடவை 108 ம், பின்னர் 21 முரையும் செய்ய நன்று.-----


இப்பதிவின் விளக்கம் சரியாக புரியவில்லை என்று கேட்கும் நபர்களுக்காக மேலதிக விளக்கம்.

மந்திர தந்திர பதிவுகளை எதிர்பாக்கும் நண்பர்கள் உங்களுடை அனுபங்களை இங்கு விளக்கமாக கூறினால்தான் எனது பதிவுகளை சரியான முறையில் எழுதமுடியும்.

இருப்பினும் பொதுவாகவே விடயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

மந்திர சித்தி என்பது நீங்கள் யாதேனும் ஓர் மந்திர பிரயோகம் செய்யமுன் உங்க‌ளுடைய‌ சக்தியையும் நீங்கள் வாலாயம் செய்த தெய்வத்தின் சக்தியையும் அதிகரித்து மந்திரப்பிரயோகம் செய்யும் போது தடைகள் வாராமல் காத்து அப்படி தடை ஏற்படின் அவற்றை நீக்கி சித்தியடைய செய்யவே இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக தண்ணீர் ஓதும் போது சலம் அரட்டல், பிரணவம், சித்தி என அனைத்து விடயங்களும் முறையாக செய்ய வேண்டும். சுத்த நீரில் பன்னீர் விபூதி சந்தனம் மஞ்சல் குங்குமம் என பூசைப்பொருட்கள் சேர்கவேண்டும்.

அட்ஷரங்கள் ஏதும் இருப்பின் அதை தண்ணீரில் குச்சியால் கீரி பின்னர் உரிய மந்திரத்தை உருவேற்ற வேண்டும். வேப்பம் இலையால்  உருச்செய்வது பொதுவாகவும் அதை விட்டு குறிப்பிட்ட பிரயோகம் இருப்பின் அதை பயன்படுத்தவும். உதாரணமாக பூக்களால் அல்லது வெத்திலையால் அல்லது தர்ப்பைபுல் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

இவ்வாரு முறைப்படி செய்யின் பலன் கிட்டும்.

சந்தேகம் இருப்பின் தயங்காமல் எழுதவும்.


நன்றி.

சூனியத்துக்கும் நோய்க்கும் காய் வெட்ட

வணக்கம் தோழர்களே,

இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணதால் கூடுதல் பதிவுகளை எழுதுகிறேன்.

சூனியம் அல்லது நோயாளர் ஒருவருக்கு காய் வெட்டி அதன் தன்மையை குறைக்கவும் அல்லது ஏவல் செய்தவரை தாக்கவும் என இரு காரணங்களுக்காக காய் வெட்டும் முறைகள் மந்திர தந்திரங்களில் பயன்படுகிறது. அவ்வாரான ஓர் பதிவே இது.

சரவ மந்திர பிரயோகங்களில் ஒன்றான இது மிகவும் சக்தி வாய்ந்த இன்று. 

வீரபத்திரர் சரவம் மந்திரம்.

ஓம் அகோர சரவ உக்கிர பிரளய சங்ஙார வீர சரவ அங்ங வங்ங லங்ங உங்ங ஆங் ஆங் ஊங் ஐயும் கிலியும் சவ்வும் அகோர சரவ உக்கிர பிரளய சங்ஙார சிங்ங தக தக நக நக இவர் பேரில் வரப்பட்ட சர்வ ஏவல் பில்லி பேய் பசாசு வஞ்சனை சூனியங்களை முன்னேறிப் பிடி பிடி அடி அடி முறி முறி அறு அறு சங்ஙரி சங்ஙரி அகோராயா ஆதித்திராயா நம ஓம் சர்வ சத்துரு கக்கிஷ சங்ஙராயா சரவ சாலுவ சரவ வீரபத்திராயா உங் உங் படு சிவாகா. 


அட்சரம்





















கிரிகை

பாதிக்கப்பட்டவரை அட்ஷரத்தில் இருத்தி தலையில் எலுமிச்சங்காய் பாக்கு வெட்டியில் வைத்து உரு 9 தரம் செய்து காயை வெட்டவும்.

இப்படி மூன்று முறை செய்யவும், எதிராளி துன்பப்படுவான், நோயாளி குனமாவான்.

முறைப்படி வீரபத்திரருக்கு மடை வைத்து அதன் முன் அட்ஷரம் கீரி அதில் ஆலை இருத்தி செய்யவும். 

வினாயகர் மடையும் குரு மடையும் வாலை மடையும் கண்டிப்பாக வைக்கவும். 

நன்றி

வசுவாசி சூரணம் - பொதுப்பிரயோகம்

வணக்கம் தோழர்களே,

எனது பதிவுகள் அனைத்தும் என்னுடை முன்னோர்களின் (பரம்பரை) வாகடத்தொகுதியில் இருந்து மட்டுமே பதிவிடுகிறேன். அதனால் வேரு தளங்களில் இப்பதிவுகளை பிரதி செய்பவர்கள் தயவு செய்து நிருத்தவும்.

தகவல் பரிமாற்றம் செய்ய விரும்பின் இத்தலத்துக்கான முகவரியை மட்டும் பதிவிடவும். 

வசுவாசி சூரணம் 

இது சிறுவர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாத்து நீண்ட நாள் நோயின்றி வாழ உதவும்.

அதாவது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உணவுப்பொருட்கள் இலகுவில் செமிபாடடையச் செய்யும்.

வயிற்றில் ஏற்படும் அநேக நோய்களை சரி செய்யும்.
வாய் துர் நாற்றம் மாரும்,
உடல் வலுப்பெரும்,
பெண்களின் சூதக தடை விலகும்,
மாத விலக்கு சீராகும்,
மேனி வாசம் வீசும்,
இப்படி பல தன்மைகளை கொண்டது.


சரக்கு வகை

ஏலம் 
லவங்கம்
மரமஞ்சல்
அதிமதுரம்
நற்சீரகம்
சிறு நாகப்பூ
சுக்கு
மிளகு
கடுகு
திப்பிலி

இவை சம இடை அதாவது தேவைக்கேட்ப எடுக்கவும் ஆவம்ப நிலையில் 5 கிராம் வீதம் எடுக்கவும்.

இதன் மொத்த இடைக்கு வசுவாசி எடுக்கவும் 

செய்முறை

கண்டிப்பாக சுத்தி செய்ய வேண்டிய சரக்குகள் இதில் இல்லாத போதும் பொதுப்பிரயோக முறையாக அனைத்து சரக்குகளையும் சூரணம் செய்து துணியால் வஸ்திரகாயம் (அரித்து) எடுக்கவும். 

பின்னர் துணியில் வண்டாக கட்டி பசுப்பாலிள்  பிட்டவியலாக அவித்து (ஒரு மணி நேரம்) எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தவும்.

இதில் 1/2 தேக்கரண்டி சூரணத்தை தேனில் கலந்து தினமும் காலையில் உண்டு வர சர்வ ரோகங்களும் நீங்கி சுகம் தரும்.

நன்றி

திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்


ஈலை எனும் ஆஸ்துமாக்கு

வணக்கம்.

ஈலை அல்லது தொய்வு அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் படும்பாடு பார்க்கவே கடுமையாக இருக்கும்.

அவர்களின் நலன் கருதி இந்த அரிய பதிவினை தருகிறேன்.

சரக்கு

இசங்கம் எனும் முட்சங்கன் வேர் 2 பலம் 
உள்ளி 2 பலம் 
உப்பு 2 பலம்
சீனி 2 பலம்

பலம் என்பது 35 கிராம்

செய்முறை

இவற்றை குப்பைமேணிச்சாற்றில் அரைத்து கொட்டை பாக்கலவாக உருட்டி காலை மாலை உணவுக்கு முன் சாப்பிடவும். இப்படி நோய் அதிகமாக இருக்கும் போது சாப்பிட சுகம் தரும். 

தொடர்ந்து மண்டலக்கணக்காக எடுக்க மாரும்.


நன்றி





வயிற்றுக்கடுப்பு இனி இல்லை

வணக்கம் தோழர்களே,

எதை சாப்பிட்டலும் வயிறு தொல்லை தருகிறது என்று மாத்திரைகளை கையோடு எடுத்து செல்லும் தேவை இனி வராது. இந்த மருந்தை செய்து வாரம் இரு முறை உண்டால் போதும் உங்கள் உடல் நிலைக்கேற்ப சில மாதங்களின் பின் இந்த அயீரணத்தொல்லை எப்போதும் வராது.

சரக்கு

அசமதாகம் (ஓமம்) 5 கிராம்
உள்ளி 5 கிராம்
நாவல் மர துளிர் (இதன் சாறு) 100 மில்லி 

செய்முறை

அசமதாகத்தை சற்று வாசனை வர வருத்து சூரணம் செயவும், உள்ளியை துவைத்து எடுக்கவும். இவை இரண்டையும் சாறுடன் கலந்து காலையில் அருந்தவும். 

வாரம் இரு முறை தொடர்ந்து சில மாதம் (மூன்று) செய்யவும்.

நன்றி.

பருவுக்கு மருந்து

வணக்கம்,

முகத்தை அதன் அழகை நாசம் செய்யும் இந்த பருக்களை என்ன செய்தும் மாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டம். இந்த மருந்தை முறைப்படி செய்து பாருங்கள்.


சரக்கு

பிள்ளை குந்திரிக்கம் 5 கிராம்
சுத்தமான சுண்ணாம்பு 2 கிராம்
கஸ்தூரி மஞ்சல் 10 கிராம்
ஆமணக்கம் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

சரக்குகளை எண்ணெய் விட்டு மெழுகு பதமாக இரு மணி நேரமாவது அரைத்து பத்திரப்படுத்தவும். 

தினமும் காலையில் மெழுகை கண்களில் படாமல் பூசி 15 நிமிடம் கழித்து சுததமான வடிகட்டிய மெதுமெதுப்பான சுடு நீரில் கழுவி வெள்ளைத்துனியால் துடைக்கவும்.

நன்றி

ஆராத புண்க்கு பூசு மருந்து

வணக்கம் வாசகர்களே,

தொடர்ந்து மாந்திரீக தகவல்களை பதிவிட்டால் வைத்திய குறிப்புக்களை எதிர்பார்த்து வரும் வாசகர்கள் ஏமாற்றமடையக்கூடும் என்பதற்காக சில மருத்துவக் குறிப்புக்களையும் பதிவிடுகிறேன்.

பலதரப்பட்ட புண்களையும் ஆற்றும் தன்மை இந்த பூசு மருந்துக்கு உண்டு.

சரக்கு

கடுகு 
நெல்லிக்காய்
பச்சை மஞ்சல்
சுத்தமான தேங்காய் எண்ணெய்

முறை

சரக்குகளை சூரணம் செய்து எண்ணெய் விட்டு காய்ச்சி வடித்தெடுக்கவும்.

தேவையான போது புண்களில் பூச சில நாட்களில் சுகம் கிடைக்கும்.

நன்றி.

Wednesday, October 16, 2013

சூனியம் உள்ளவருக்கு திரு நீறு போட

வணக்கம்.

இதுவும் அவசியமான ஓர் பதிவாகவே இருக்கும்.


சூனியம் செய்வினை பேய் பசாசு என பாதிக்கப்பட்டவருக்கு இந்த மந்திரத்தினாள் திரு நீறு போட அவை மாறி நிற்கும் பின்னர் தகுந்த கழிப்பு முறைகளை செய்து அட்ஷரம் கட்டவும்.

மந்திரம்

ஓம் அங்ங அங்ங அகோர வீரபத்திராயா நங்ங நங்ங நரசிங்க வீரபத்திராயா இவர் பேரில் வரப்பட்ட சர்வ பூத பிரேத பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களும் சகல மருந்து மந்திரமும் மாறு மாறு அறு அறு இவரை விட்டு விலகிப்போகவே சிவாகா. 


கிரிகை

9 முறை உரு செய்து விபூதி போடவும் சுகம் கிடைக்கும்.

நன்றி

பேய் பசாசு சூனியம் - தண்ணீர் ஓதி எறிய

வணக்கம் தோழர்களே,


இன்று இன்னும் ஓர் முக்கிய பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன். 

பில்லி சூனியம் பேய் பசாசு என்று பாதிக்கபட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் வீடுகளுக்கோ இந்த மந்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் ஓதி எறிய அவ்விடத்தில் இருக்கும் சகல துட்ட தேவதைகளும் விலகும்.

நாகபாசம் எனும் ஓர் அஸ்திர மந்திர பிரிவில் வரும் இம் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தடைகளை வெட்டவும் எதிரிகளை நாசம் செய்யவும் தன்னை பாதுகாக்கவும் பயன்படும் உயர் சக்தி வாய்ந்த மந்திரங்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பதும் இந்த நாகபாசம் எனும் நாக அஸ்திரம்.

இது சிவனின் கையில் இருக்கும் அஸ்திர (ஆயுத) வகைகளில் ஒன்று.

இதில் பல பிரிவுகள் இருக்கின்றன தற்போதைக்கு இதை படியுங்கள் நேரம் வரும் போது மற்றவை தரப்படும்.

மந்திரம்

ஓம் அரி அரி நாக பாசம் திரிபுர நாக பாசம் சிவனேறு நாக பாசம் பஞ்சாட்சரத்தின் ஆணை கட்டு அவ்வும் கிலியும் றீயும் கிலியும் றீயும் மிறீயும் கொண்டு முனிவர் ஆணை கட்டு நூற்றி ஒரு வயிரவனையும் கட்டு இருபத்தி ஒரு கரையாக்கனையும் கட்டு ஏழு கன்னிமாரையும் கட்டு மாடனை கட்டு காளியை கட்டு இருளனை கட்டு காடேரியை கட்டு கம்பளிவயிரவனை கட்டு எட்டு திக்கும் பதினாறு கோணங்களிலும் வரப்பட்ட சர்வ துட்ட தேவதைகளையும் கட்ட கட்டவே சிவாகா.

கிரிகை

உரு 108 செய்து தண்ணீர் ஓதி எறியவும்

எப்படிப்பட்ட சூனியங்களும் விலகும்.

நன்றி