வணக்கம் தோழர்களே,
இன்று முதல் எமது மருத்துவ பதிவுகளை facebook ல் படிக்களாம்.
https://www.facebook.com/siththarvaakadam
எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கருத்துக்கள் பதிவிட இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி
Thursday, February 13, 2014
Tuesday, February 11, 2014
மருத்துவ பதிவுகள் - அவதானம் தேவை
வணக்கம் தோழர்களே,
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புக்கள் என்ற பெயரில் பல தகவல்கள் இன்று அனேக இணையத்தளங்களில் வெளிவந்தபடிதான் இருக்கிறது, ஆனால் அதன் நம்பகத்தன்மையை எப்படி உருதி செய்வது என்ற சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது.
அவரச அவசரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலக வாழ்கையில் நமக்கு ஏற்படும் உடல் உபாதைகலிள் இருந்து வெளிவருவதற்கு இலகுவான வழிகளை தேடும் மனித குலம் எந்த ஒரு காரியத்தையும் பொருமையுடன் செய்ய விரும்புவதில்லை மாறாக உடனிடி நிவாரணம் கிடைக்கிறதாம் என்று நம்பி தமது உடலை நிரந்தர பிரச்சினைக்கு கொண்டு செல்கிறார்கள்.
யாரோ எங்கோ படித்த தகவல் என்று கூறினால் போதும் உடனடியாக அது சரிதான் என்று நம்புவது ஒருபக்கம், புத்தகங்களை (தகுதியானதா என்று தெரியாமல்) நம்பி செயல்படுவது, மற்றும் தற்போது இணையபதிவுகளை நம்பி தமது உடலை கெடுத்து வாழ்கையை அழித்து விடுகிறார்கள்.
நன்றாக சிந்திக்கவேண்டும்.......
மருத்துவம் என்பது என்ன, உடல் உபாதைகள் ஏன் வருகிறது, இதற்கான மருந்து எது, இதை யாரிடம் அனுகி பேசுவது, யார் தகுதியானவர் என்பது போன்ற கேள்விகளை நாமே நம்மிடன் கேட்க வேண்டும்.
யார் வேண்டுமானாலும் மருந்து கூறலாம் என்றால் எதற்கு கல்விச்சாலைகள், குருகுலங்கள், பட்டதாரி படிப்பு, முதுநிலை படிப்பு, அரச சட்டம் போன்ற எதுவும் தேவை இல்லையே. இத்தனை பரிசோதனை முறைகள் கருவிகள் என ஏன் விஞ்ஞானம் கஷ்டப்பட வேண்டும், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் ஏன் அல்லல் பட வேண்டும்.
யாரும் அலோபதி மருந்துகளின் பெயர்களை கூறி இதை எடுத்தால் நோய் தீரும் என்று பதிவிடுவதில்லை காரணம் அதன் செய்முறைகள் மற்றும் கவலைகள் தெரியாது மீறி பதிவிட்டால் அலோபதி மருத்துவர்கள் சட்ட நடவடிக்கையும் எடுப்பர்.
ஆனால் சித்த ஆயுர்வேத மருந்துகள் என்றால் கேட்பதற்கும் யாரும் இல்லை, குறை கூறவும் யாரும் இல்லை, மறுப்பதற்கும் யாரும் இல்லை என்பதால் அனைவரும் பதிவிடுகிறார்கள்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் இருத்துங்கள், இது இறைவனால் அருளப்பட்ட மருத்துவம் சித்தர்களும் ஞானிகளும் தங்களது தவ ஞானத்தால் பெற்ற வரம், தவறாக செயல்படின் நிச்சயம் தண்டனை கிடைக்கும் அது தீர்க்க முடியாததாக இருக்கும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது தேவையற்ற சாபங்களை உங்களது குடுமத்துக்கு ஏற்படுத்தாதீர்கள்.
சித்த மருத்துவம் புனிதமானது இதை யார் வேண்டுமானாலும் கற்கலாம் ஆனால் சரியான தெளிவில்லாவிட்டால் அது நம்மையும் சேர்த்து அழித்துவிடும். சித்தர்கள் தமது பாடல்களில் தெளிவாக கூறியிருக்கிறார்கள், எப்படி செயல்படவேண்டும் என்றும் தவறின் அதன் விளைவு என்ன என்றும், ஆகவே பதிவுகளை பகிரமுன் அதன் விளக்கத்தை சரியாக நீங்கள் தெரிந்து பின்னர் வெளியிடுங்கள்.
ஆலோசனை கூறுவது மிக இலகுதான் அதை நீ செய்கிறீரா, என்றால் அது இல்லை. இன்று எத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்பிக்கள் வந்தாலும் சரி உலகின் மிக அபூர்வமானதும் கடினமானதும் யாராலும் செய்ய முடியாத இயந்திரம் அது மனித உடல், அப்படி மிக மிக அபூர்வமான இயந்திரத்தை திருத்தும் பனியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் அதன் மகிமை மாசுபடுகிறது அல்லவா, ஆகவே சிந்தியுங்கள். ஆலோசனை என்ற பெயரில் கண்டத்தையும் கேட்டதையும் புரியாமல் பதிவிட வேண்டாம்.
சித்த ஆயுர்வேத மருந்துகள் கடுமையானவை மிக ஆபத்தானவை கொடிய நச்சுத்தன்மை உடையவை ஆகவே அவற்றை சரியான வழிகாட்டல் இல்லாமல் செய்வது மிக ஆபத்தானது. இந்த சூரணம் சாப்பிடுங்கள் இந்த வேரை குடியுங்கள், என்ற ஆலோசனைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
மனித உடல் அதன் தன்மை மனிதனுக்கு மனிதன் வேருபடும் ஆகவே இவருக்கு இருக்கும் அதே பிரச்சினை உங்களுக்கும் இருக்கும் ஆனால் அதன் காரணம் இருவருக்கும் வேறாக இருக்கும், ஆகவே இருவருக்கும் ஒரே மருந்து தீர்வாகாது.
இந்த சிறு விடயம் புரியாமல்தான் உடல் பருமன் தொடக்கம் நீரழிவு வரை அனைவரும் ஒரே மருந்து எடுத்து எந்த பலனும் கிடைப்பதில்லை.
அத்துடன் சித்த மருத்துவத்தை பெருத்தவரை அது தேனாக இருந்தாலும் சரி கடுகு, மிளகு, சுக்கு என எதுவாக இருந்தாலும் சரி அவற்றுக்குறிய சரியான சுத்தி முறைகளை செய்யாது விடின் அதன் உண்மையான மருத்துவ குணத்தை அடைய முடியாது. மேலும் சூரணம் செய்வதற்கு எனவும் அவற்றை எப்படி உண்ன வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது, அவற்றை மீறி செய்து எந்த பலனும் கிடைக்காது மாறாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைதான் இல்லாது போகும்.
இனிவரும் காலங்களில் பதிவுகளை சரியானதா என்று ஆராய்ந்து பதிவிடுங்கள்.
நன்றி
Monday, February 10, 2014
மூலிகை விளக்கம் பாகம் 2
வணக்கம் தோழர்களே,
சித்த வைத்திய பரிபாஷை அகராதியில் இருந்து விளக்கம்
மூலிகை பற்றிய விளக்கத்தின் இரண்டாவது பாகமாக இதில் படக்காட்சிகளும், குணபாடமும், அதன் தன்மையும் விளக்கியுள்ளேன்.
உதாரண எடுத்துக்காட்டாக ஒரு வலைத்தளத்தில் இருக்கும் பதிவை சுட்டிக்காட்டி இந்த விளக்கத்தை தருகிறேன், தயவு செய்து மற்றவர்களின் தளத்தை உதாசினம் பன்னுவதாக நினைக்கவேண்டாம், சித்த மருத்துவம் மற்றும் மாந்திரீகம் பற்றிய சரியான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இன்னும் கூறப்போனால் இன்று நமது மக்கள் சித்த மருத்துவத்தையும் அதன் ஆற்றலையும் மறந்து மேலத்தேய மருந்துகளில் நாட்டம் செலுத்துவது இப்படி தவறான கருத்துக்களை போதிப்பதால் தான், காரணம் இம் மூலிகை இதை செய்யும் என நம்பி ஒருவர் முற்படும் போது அது நடக்கவில்லை என்றால் அவரது மனதில் உதயமாவது ஒன்றே அது, இது அனைத்தும் சும்மா கட்டுக்கதை என்பதே. ஆகவே நவீன விஞ்ஞான காலத்தில் இருக்கும் நாம் இனியாவது சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னரே மருத்துவ மற்றும் மாந்திரீக தகவல்களை பதிவிட வேண்டும் என்பது எனது கருத்து.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் எனும் Facebook தளத்தில் இருக்கும் ஓர் தகவலையே இங்கு உதாரணப்படுத்துகிறேன்.
மிக அவதானமாக படியுங்கள்
இதில் கூறப்படுகிறது ஆனை நெருஞ்சி பற்றிய விளக்கம் ஆனால் மூலிகையின் பெயர் யானை வணங்கி (ஆனை வணங்கி) என்று கூறப்படுகிறது.
நீர் கடுப்பு, கல்லடைப்பு போன்ற வற்றுக்கு ஓர் சிறந்த மூலிகை ஆனை நெருஞ்சி என்பதில் மாற்றம் இல்லை ஆனால் அது ஆனை வணங்கி (தேள்கொடுக்கு) அல்ல. அத்துடன் கோடைகாலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையால் யானைகளுக்கு ஏற்படும் நீர்கடுப்பு ஏற்படும் போது யானைகளி இவற்றை உண்டு பின்னர் ஆனை வணங்கியை வணங்கி செல்லும் என்றும் கூறப்படுகிறது பதிவில்.
இதில் என்ன விளக்கம் என்றால் யானை கும்பிட்டு செல்வதாக இருந்தால் அது நெருஞ்சியை தான் வணங்க வேண்டும் ஆனால் ஆனை வணங்கி என்பது வேறு அல்லவா அத்துடன் ஆனை வணங்கி மூலிகைக்கு நீர்கடுப்பை அல்லது கல்லடைப்பை மாற்றும் சக்தி அல்ல என்பதால் நிச்சயம் யானைகள் இதை உண்னப்போவதில்லை அந்த காரணத்துக்காக.
அப்படியானால் ஏன் இதற்கு ஆனை வணங்கி எனவும் தேள்கொடுக்கு எனவும் பெயர் என்று கேட்பது புரிகிறது. மூலிகை வரிசையில் அஷ்டகர்ம பிரயோகத்துக்கு என பல மூலிகைகள் சித்தர்களால் கூறப்படுகிறது. அந்த வரிசையில் மிருக ஆக்ருசனத்தில் யானைகளை வைத்து வேலை செய்ய இந்த மூலிகை பயன்படுகிறது, அதன் வெளிப்பாடாக இன்றும் யானைபாகன் வைத்திருக்கும் அங்குசத்தில் இந்த வடிவிலேயே இருக்கும். இந்த ஆனை வணங்கி மூலிகையை பிரயோகித்து யானைகளை அழைத்து அவற்றை நமது தேவைக்காக பயன்படுத்தினர் ஆகவே இது ஆனை வணங்கி என பெயர் பெற்றது. மேலும் தேள்கொடுக்கு என கூறப்படுவது மருத்துவ ரீதியான பன்பு அதாவது விஷ வைத்தியத்தில் கானாக்கடி எனும் என்ன கடித்தது என்று தெரியாத விஷக்கடியில் இது பயன்படுகிறது, அத்துடன் இது ஓர் சிறந்த விஷ மாரண மூலிகையாக தேள் கடிக்கு உதவுகிறது, மேலும் இதன் பூக்கள் இருக்கும் தண்டு தேளின் கொடுக்கி போல் இருக்கும் என்பதாலும் இதற்கு தேள் கொடுக்கு என பெயர் வந்தது.
ஆனை வணங்கி அல்லது தேள்கொடுக்கு
சித்த வைத்திய பரிபாஷை அகராதியில் இருந்து விளக்கம்
குண பாடம் தேள்கொடுக்கு
“ தேள் கொடுக்குண் டாயிற் றினவடங்குத் தப்பாது
நாட்பட்ட புண்கரப்பான் நாசமாம் கீட்பட்ட
மாந்த கணமுமறும் மானிலத்துட் சில்விடம்போம்
போந்தமருந் தாகும் புகழ்”
விளக்கம்
நாட்பட்ட புண் கரப்பான் மாந்தம் கானாக்கடி விஷம் ஆகியவை நீங்கும்.
இப்படி தினமும் பல இணையதளத்திலும் சில தவரான கருத்துக்கள் பதியப்படுகிறது, தயவு செய்து மக்களுக்கு சரியான தகவல் கிடைக்ககூடியவாறு பதிவிடுங்கள், தவரான பாதையில் சித்தர் புகழை இட்டுச்சென்று மீண்டும் ஒரு யுகம்வரை சித்த மருத்துவத்தை புதைத்து விட வேண்டாம்.
குற்றம் கூறுவதாக யாரும் கருத வேண்டாம் அன்று நக்கீரனார் சிவனையே கேட்டதனால் தான் இன்றும் நம்மால் தமிழில் பேச முடிகிறது என்பதை சிந்தியுங்கள். அடியேன் எதாவது தவராக பதிவிட்டால் சுட்டி காட்டவேண்டியது உங்கள் கடமை.
சித்தர் பாடல்களை விளக்கமாக எழுதுவது என்பது மிக கடினமான ஒன்று, அதில் இருக்கும் மறைப்புக்கள் நம்மால் உணர முடியாதவை, ஆகவே சரியாக புரியாவிட்டால் தகுந்த குருவிடம் ஆலோசனை செய்து பின்னர் வெளியிடுங்கள்.
சித்த ஆயுர்வேத மருத்துவ துனுக்குகள் வெளியிடுகிறோம் என்ற பெயரில் அங்கும் இங்கும் படித்தவற்றை சரியாக தெரியாமல் வெளியிடுவதால் தான் இன்று பல வித புதிய நோய்கள் நம்மிடையே தலைவிரித்தாடுகிறது. சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சரியான முறைகளில் சுத்தி செய்து பயன்படுத்தாவிட்டால் அது நிச்சயமக பாரிய தீங்கைத்தான் வெளிப்படுத்தும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். புத்தகங்களில் இருக்கும் மருத்துவ குறிப்புக்களை பயன்படுத்தும் முன்னர் அவை சரியானதா என்பதை ஒன்றுக்கு பல தடவை சரியான சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியரை நாடி ஆலோசனை பெற்று பின்னர் உபயோகிப்பது தான் நலம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்
Sunday, February 9, 2014
மூலிகைகள் பற்றி ஓர் விளக்கம்
வணக்கம் தோழர்களே,
மூலிகைகள் என்ற பெயரில் பலரும் பல வலைதளத்தில் புதிய புதிய தகவள்கலை பதிவிடுகிறார்கள். மூலிகைகளை இனங்கான இன்று இலகுவான ஓர் முறை தாவரவியல் பெயர் என்று பலரும் கருதி அதை வைத்துக்கொண்டு இணையத்தில் தேடி அதை பற்றிய விடயங்களை புத்தகங்களில் இருந்து படித்துவிட்டு பதிவிடுகிறார்கள்.
ஆனால் இதில் இருக்கும் ஓர் சிறிய விடயத்தை யாரும் சிந்திப்பதாக எனக்கு தோனவில்லை. அதாவது தாவரவியல் பெயர் என்பது நமது கண்டுபிடிப்பு அல்ல, அது மேலத்தேய விஞ்ஞானிகளின் விஞ்ஞான ரீதியான பகுப்பாய்விற்கான ஓர் இலகு வழி ஆம் அது நன்மையானது தாவரலியல் கற்கும் மாணவர்களுக்கு மிக அவசியமானது.
இங்குதான் நாம் தவரான பாதையில் செல்கிறோம். சித்தர்களும் ஞானிகளும் கூறியது இதுதான் என்ற முடிவு யார் எடுத்தது. குறிப்பிட்ட தாவரம் இது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது. சித்தர் கூறிய குண பாடத்தில் இருந்து எடுப்பதாக இருந்தால் அதை மேலத்தேய விஞ்ஞானிகள் செய்யவில்லை.
அதிலும் சித்தர்கள் கூறியபடி குறிப்பிட்ட நேரத்தில் குறித்த திசையில் குறித்த இடத்தில் (மண்) இருக்கும் மூலிகையை சாபம் நீக்கி எடுத்தால் தான் அது பலன் தருவதாக கூறியிருக்கிறார்கள், இப்படி இருக்கும் போது வெருமனே ஓர் மூலைகையை எடுத்து அதன் இரசாயன அல்லது வேதியல் அம்சத்தை ஆராய்ந்து கூறுவதன் மூலம் சரியான அல்லது அதன் குறிப்பிட்ட சக்தியை எப்படி நிர்னகிக்க முடியும்.
குறிப்பாக மூலிகைகள் பற்றிய பல அகராதிகள் சித்தர்களால் கூறப்படுள்ளது, அதில் ஒரு மூலிகைக்கு அதிக பட்ஷமாக முப்பத்து ஆறு வித பெயர்கள் இருக்ககூடும் என சொல்லப்படுகிறது. ஆகவே இது சரியான மூலிகைதான் என எவ்வாறு தாவரவியல் பெயரைக்கொண்டும் தீர்மானிக்க முடியும். விஞ்ஞான ரீதியாய் ஆய்வு செய்து அதன் உண்மையை கண்டிருந்தால் இன்று அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் மட்டுமே இருந்திருக்கும், ஆனால் அவர்களால் இன்றும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ விடயங்கள் சித்தர் பெருமக்கள் நம்மிடையே விட்டுச்சென்றிருக்கிறார்கள்.
மூலிகைகள் தொடர்பான ஆய்வு என்பது மிக கடினமாது அதிலும் ஓர் குறிப்பிட்ட மூலிகைக்கு மாரான கள்ள மூலிகையும் ஒன்று இருக்கிறது என்பது சித்தர்கள் கூற்று அதையே சக்காளத்தி மூலிகை என்று கூறுவர். ஆகவே இது தான் சரியான மூலிகை என்று அனைத்துவித மூலிகைக்கும் தாவரவியல் பெயரைக்கொண்டு இனங்கான முடியாது.
மிக எழிதாக பார்த்தால் நத்தைசூரி எனும் மூலிகையை இணையத்தில் தேடினால் பல வித படங்கள் கிடைக்கும், அதிலும் ஆண் என்றும் பெண் என்றும் இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ”சொன்னதை செய்யும் சூரியாம் நத்தை” என்பது சித்தர் பாடல் (மாந்திரீகத்தில்). அஷ்டகர்ம பிரயோகத்தில் தம்பனம் எனும் வித்தையை செய்வது நத்தைசூரி. குறிப்பிட்ட முறைப்படி செய்து தாயத்தாக அணிந்து சென்றால் எந்த ஆயுதம் கொண்டும் நம்மை அழிக்க முடியாது என்கிறது சித்தர் பாடல். இதை யார் இப்போது செய்து பார்த்தது, அப்படி செய்து பார்த்து விட்டு தான் கூறவேண்டும் இது நத்தைசூரி என்று என்பது எனது கருத்து.
அப்படியே தான் மருத்துவ ரீதியாகவும் செய்ய வேண்டும், இதற்கிடையில் ஒரே தன்மை கொண்ட பல மூலிகைகள் இருக்கிறது என்பதால் குறிப்பிட்ட மூலிகை தான் இது என்பதும் சரியாக கூறமுடியாத நிலையே நம்மிடம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பலராலும் இனங்கண்ட சரியான மூலிகை என கூறப்படும் மூலிகைகளை கூட சிலர் வேறு பெயரைக்கொண்டு அதற்கான மருத்துவ முறைகளையும் பதிவிடுவது மிக தவரானது.
பதிவு மிக பெரியதாக இருப்பதால் இரண்டாம் பதிவில் படங்களுடன் சில விளக்கங்களை தருகிறேன்.
நன்றி
தோழர்களை நேரில் சந்திக்க இருக்கிறேன்.
வணக்கம் தோழர்களே மற்றும் மாணவர்களே,
நமது தளத்தின் மூலம் மாந்திரீகத்தின் உண்மை பற்றி தெரிந்து கொண்ட பலர் என்னிடம் நேரில் பேச வேண்டும் என்றும் மாந்திரீகம் கற்க வேண்டும் என்றும் இன்னும் சிலர் சித்த மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இன்னும் சிலர் தங்களது தீர்கமுடியாத நோய்களை தீர்க உதவுமாறும் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள், ஆனால் அடியேன் இலங்கையில் இருப்பதாள் நேரில் சந்திக்க முடியாது என்று கவலையாக பதிலனுப்பி தபால் மூலம் கற்கலாம தீர்வு கிடைக்குமா என்றும் கேட்கிறீர்கள்.
இதன் வெளிப்பாடாக இந்தியாவில் சென்னையில் இருக்கும் எனது மாணவர் ஒருவரின் உதவியுடன் அங்கும் ஓர் குருகுல அமைப்பை ஏற்படுத்தலாம் என நினைத்திருக்கிறேன். இதுவரை எனது இந்தியப்பயனங்கள் காசி நோக்கி மட்டுமே இருந்திருக்கிறது ஆனால் இத்தளத்தை ஆரம்பித்து மக்களின் அறியாமையை என்னால் இயன்றவரை தீர்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில் மனத்திருப்தியும் அடைந்துள்ளேன். இதன் அடுத்த கட்டமாக இந்தியாவில் இருக்கும் மாணவர்களையும் பூரணப்படுத்த வேண்டும் என்ற இறை ஆணையை என்னால் முடிந்தவரை செயல்படுத்த முனைகிறேன்.
இம்முறை எனது பயனம் ஆரம்பகட்ட நிலை என்பதால் அதிக நாள் அங்கு இருக்க முடியாது ஆகவே குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே சென்னையில் இருப்பேன் என நினைக்கிறேன் ஆகவே நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று அது எது தொடர்பானதாக இருந்தாலும் சரி நினைப்பவர்கள் முன்கூட்டியே எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் அனைவரையும் சந்திப்பதற்கான ஓர் குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் காலத்தையும் தெரிவிப்பேன். விதண்டாவாதம் செய்ய இருப்பவர்களும் சந்திக்கலாம்.
இதை விளம்பரம் என நினைத்தாலும் சரி அல்லது ஓர் வாய்ப்பாக நினைத்தாலும் சரி தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்.
muthaly@gmail.com
திருவாசி மூன்றாம் மந்திரம்
வணக்கம் தோழர்களே,
திருவாசி மந்திர வரிசையில் அடுத்து வருவது பல தவவலிமை பெற்ற ஞானிகள் பயன் படுத்தியதாக கூறப்படும் ஓர் மந்திரம். முன்பே நான் கூறியது போல இதையும் மனனம் செய்யுங்கள் விரைவில் இதன் பூசை முறைகளை உபதேசிப்பேன்.
மந்திரம்
மூல மந்திரம்
ஓம் ஆம் அவ்வும் உவ்வும் சவ்வும் பிரளைய கால திரிபுர சிதம்பர சக்தி சிவாய நம.
அட்ஷரம்
கிரிகை
முதலில் சித்தி பெற மனனம் செய்யுங்கள்.
நன்றி
திருவாசி மந்திர வரிசையில் அடுத்து வருவது பல தவவலிமை பெற்ற ஞானிகள் பயன் படுத்தியதாக கூறப்படும் ஓர் மந்திரம். முன்பே நான் கூறியது போல இதையும் மனனம் செய்யுங்கள் விரைவில் இதன் பூசை முறைகளை உபதேசிப்பேன்.
மந்திரம்
ஓம் சுந்தரமூர்த்தி அன்று சுடலையில் ஆடிய பரமேஸ்பரனுக்கு எதிரே திருவாசியாய் நின்னறுத்தவளே என் ஆச்சி திரிபுரசுந்தரி பரமகல்யாணி சுந்தரி கக்கிஷ காரிகையே அடியாருக்கு ஏவிய ஆக்ருசனம் பேதனம் மோகனம் தம்பனம் வசியம கக்கிஷம் என்ற வித்தைகளை திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.
மூல மந்திரம்
ஓம் ஆம் அவ்வும் உவ்வும் சவ்வும் பிரளைய கால திரிபுர சிதம்பர சக்தி சிவாய நம.
அட்ஷரம்
கிரிகை
முதலில் சித்தி பெற மனனம் செய்யுங்கள்.
காரணம் இல்லாமல் பதிவிடவில்லை, பொருமை என்பது மிக முக்கியம், நிச்சியம் இதன் மகிமை புரியும் நாள் வரும். காத்திருங்கள்.
எனது அனுபவத்தில் இயலாது என்று பல குருமார் கூறிய விடயத்தை இம் மந்திரத்தை கொண்டு வென்றிருக்கிறேன். அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் இது ஆனால் தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவர் இதை பயன் படித்தின் அதன் தன்மை என்ன என்பது அவர்களுக்கு உடன் புரியும். எனது மாணவன் ஒருவன் கற்ற ஆர்வத்தில் தவராக பிரயோகித்து இன்றும் தனது மந்திர சக்தியை பெற முடியாது கவலைப்படுகிறார். காலம் வரும் போது இதில் இருந்து வெளிவரும் வித்தையை அவருக்கு கூறுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.
ஆகவே நேரமும் காலமும் வரும் வரை காத்திருப்பது நமது கடமை என்பதை ஞாபகத்தில் வைத்து படியுங்கள்.
நன்றி
நல்ல மாணவன் ஒருவருக்கான பாராட்டுக்கள்
வணக்கம் தோழர்களே,
திரு. மோகன் எனும் மாணவன் ( நமது ) ஒருவர் அனுப்பிய மடல் உங்கள் பர்வைக்கு.
திரு. மோகன் எனும் மாணவன் ( நமது ) ஒருவர் அனுப்பிய மடல் உங்கள் பர்வைக்கு.
” தாங்கள் தொகுத்தவிடயங்கள் அனைத்தையும் ஒரு புத்தகமாக வடிவமைத்து வைத்திருக்கின்றேன். அதை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.
யந்திரங்களையும் கீறி வைத்துள்ளேன்.
என்னுடைய வேண்டுகோல். தூய தமிழில் கூறுவதை விட பேச்சி தமிழில் கூறுவது எலோருக்கும் நன்கு விளங்கும் புரிதலும் அதிகம் உண்டு
என்னுடைய வேண்டுகோல். தூய தமிழில் கூறுவதை விட பேச்சி தமிழில் கூறுவது எலோருக்கும் நன்கு விளங்கும் புரிதலும் அதிகம் உண்டு
மன்னிக்கவும்! யந்திரங்கள் வரையும்போது சற்று தெளிவாக கீறவும்
கரணம் "ற" வலைகிறதா அல்லது "ந" வலைகிறதா என்பதில் குழப்பம்
நன்றி குருவே “
கரணம் "ற" வலைகிறதா அல்லது "ந" வலைகிறதா என்பதில் குழப்பம்
நன்றி குருவே “
குறிப்பிட்ட தம்பி அனுப்பிய (செய்த) வேலைகளில் சில.
உண்மையாக கற்க வேண்டும் என்ற என்னமும் ஆசையும் குரு பக்தியும் உள்ள ஓர் மாணவனுக்கு இவரும் ஓர் உதாரணம். நான் கூறியவற்றை அப்படியே எழுதி வைக்காமல் அது சரியா என அறிவதற்கு என்னிடமே அனுப்பி தனது தேடலின் தன்மையை நிருபித்திருக்கும் மோகனுக்கு எனது ஆசிகளும் நான் பூஜிக்கும் தேவியின் ஆசியும் கிடைக்கும் என்பதில் ஐஜம் இல்லை.
இவர் மட்டும் அல்ல பலரும் இவ்வாரு இருப்பீர்கள் என தெரியும் இருப்பினும் எடுத்துக்காட்டு ஒன்று வேண்டும் என்பதற்காகவே பெயர் குறிப்பிட்டு இவரை பாராட்டி இருக்கிறேன். எங்களை பாராட்ட வில்லை என்று யாரும் சந்தேகிக்க தேவை இல்லை.
நன்றி
Wednesday, February 5, 2014
ஒடு வைத்த ஆராத புண்களுக்கு
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் பாரம்பரிய மருத்துவ முறையோடு உங்களை சந்திக்கிறேன்.
எப்படிப்பட்ட ஒடு வைத்த புண்ணாக இருந்தாலும் சரி, கால காலமாக ஆராமல் இருக்கும் புண்களாக இருந்தாலும் சரி இது நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.
உதாரணமாக
சரக்கு வகை
நத்தை சூரி சமூலம் - ஒரு கைபிடி அளவு
அவுரி சமூலம் - ஒரு கைபிடி அளவு
இந்துப்பு - இரண்டு கழஞ்சி
மிளகு - 1 கழஞ்சி
மஞ்சல் - 1 கழஞ்சி
கடுக்காய் - 1 கழஞ்சி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
முறை
அனைத்தையும் சேர்த்து மை போல் அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி புண்களில் போடவும்.
நன்றி
மீண்டும் ஓர் பாரம்பரிய மருத்துவ முறையோடு உங்களை சந்திக்கிறேன்.
எப்படிப்பட்ட ஒடு வைத்த புண்ணாக இருந்தாலும் சரி, கால காலமாக ஆராமல் இருக்கும் புண்களாக இருந்தாலும் சரி இது நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.
உதாரணமாக
சரக்கு வகை
நத்தை சூரி சமூலம் - ஒரு கைபிடி அளவு
அவுரி சமூலம் - ஒரு கைபிடி அளவு
இந்துப்பு - இரண்டு கழஞ்சி
மிளகு - 1 கழஞ்சி
மஞ்சல் - 1 கழஞ்சி
கடுக்காய் - 1 கழஞ்சி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
முறை
அனைத்தையும் சேர்த்து மை போல் அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி புண்களில் போடவும்.
நன்றி
அரனைக்கடிக்கு மருந்து
வணக்கம் தோழர்களே,
பலதரப்பட்ட விஷ யந்துக்கள் நம்மை சுற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் அதில் பாம்பு, பூரான், நட்டுவகாலி போனற வற்றுக்கு தான் மருந்துகள் பலராலும் கூறப்படுகிறது ஆனால் அரனை எனும் ஓர் பல்லி இனம் கடித்தால் அதற்கு என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது.
அரனை கடித்தால் மரணம் என்பது பழ மொழி, அப்படிப்பட்ட அரனைக்கடிக்கு பாராம்பரிய ரீதியாக நாங்கள் கையாண்டு வரும் மருந்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பதிவிடுகிறேன்.
அரனை
மருந்து
வசம்பு
நெல்லிக்காய் கந்தகம்
உள்ளி
நல்லெண்ணெய்
முறை
சரக்கு மூன்றையும் நன்கு அரைத்து நல்லெண்ணெய்யில் கொதிக்கவைத்து 2 தேக்கரண்டி வீதம் குடிக்கவும், உச்சியிலும் கடிவாயிலும் பூசவும்.
நன்றி
திருவாசி 2ம் மந்திரம்
வணக்கம் தோழர்களே,
திருவாசி மந்திர வரிசையில் இரண்டாவது முறை இது, தயக்கம் இன்றி படியுங்கள் சரியான நேரத்தில் நிச்சயம் இது உதவும்.
மந்திரம்
ஓம் சுந்தரி கௌரி மாதங்கி திரிசூலி அல்லலுற்ற உமையே முயலகன் முதுகிலே நெறு நெறுவென நிமிர்ந்தாடிய ஈஸ்பரனுக்கு எதிரே திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தவளே என் ஆச்சி திரிபுர சுந்தரியே அடியார்க்கு விட்ட பில்லி வஞ்சனை சூனியம் மாரண கக்கிஷ தம்பன மோகன வசிய வித்தையெல்லாம் திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.
மூலம்
ஓம் கிறீயும் ஸ்ரீயும் மிறீயும் சக்தி சிவாய நம
அட்சரம்
கிரிகை
விரைவில்
நன்றி
திருவாசி மந்திர வரிசையில் இரண்டாவது முறை இது, தயக்கம் இன்றி படியுங்கள் சரியான நேரத்தில் நிச்சயம் இது உதவும்.
மந்திரம்
ஓம் சுந்தரி கௌரி மாதங்கி திரிசூலி அல்லலுற்ற உமையே முயலகன் முதுகிலே நெறு நெறுவென நிமிர்ந்தாடிய ஈஸ்பரனுக்கு எதிரே திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தவளே என் ஆச்சி திரிபுர சுந்தரியே அடியார்க்கு விட்ட பில்லி வஞ்சனை சூனியம் மாரண கக்கிஷ தம்பன மோகன வசிய வித்தையெல்லாம் திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.
மூலம்
ஓம் கிறீயும் ஸ்ரீயும் மிறீயும் சக்தி சிவாய நம
அட்சரம்
கிரிகை
விரைவில்
நன்றி
Tuesday, February 4, 2014
திருவாசி எனும் மகா மந்திரம்
வணக்கம் தோழர்களே,
அதனால் தான் திருவாசிக்கு எதிர்வாசி இல்லை என்று கூறுகிறார்கள் சான்றோர்கள்.
தோழர்கள் பலரும் மின்னஞ்சல் மூலம் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியவாரு இருக்கிறீர்கள். அத்துடன் புதிய பதிவுகள் இல்லை என்ற கவையும் வேண்டுகோளும் கூட வருகிறது. தவறாக நினைக்க தேவையில்லை அளவுக்கு மீறிய பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதால் நேரம் போதாத நிலை இருக்கிறது. அத்தோடு பதிவும் சரியானதாகவும் தேவையானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதால் குறிப்பிட்ட பதிவை சிந்தித்து பகிர்கிறேன். எதையாவது பதிவிடுவதானால் கவலை இல்லை.
மந்திர வரிசையில் இம் முறை உங்களுக்கு தரப்போவது ஓர் வரம், எனது குருமார் எனக்கு தர பல காலம் எடுத்த விடயம் இது இருப்பினும் தற்போது இதன் விளக்கத்தையும் பன்பையும் மட்டும் விளக்க இருக்கிறேன்.
தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இதை எவ்வாறு பயன் படுத்தவேண்டும் என்ற தீட்சை நிச்சயம் நம்பிக்கையுள்ள அனைத்து மாணவருக்கும் தரப்படும்.
திருவாசிக்கு எதிர்வாசி இல்லை என்பது நாட்டு பழ மொழி. இதை வைத்தே இதன் சக்தியை கணக்கிட முடியும்.
ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் அவனே சைவத்தின் தலை மகன் அவனே சிவன் என அழைக்கப்படுபவன். அவனுக்கு எதிர் நின்ற சக்தியே பராசக்தி என அழைக்கப்படுகிறாள். அவளே மந்திர வடிவினியாகவும் வாலை புவனை திரிபுரை என சித்தர்களால் போற்றப்படுபவள். அவ்வாரு போற்றப்படும் சக்தி சிவனுக்கு எதிர் நின்று செய்த மந்திர பிரயோகமே திருவாசி மந்திரம் என அழைக்கப்படும்.
இது மலையால மாந்திரீகத்திலும் சரி அதர்வன வேதத்திலும் சரி இடம்பெறாத இரகசிய மந்திர முறையாகும். பாரம்பரிய சித்தர் வம்சத்தில் வந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் ஓர் சக்தி வாய்ந்த மந்திரம் என்பதில் சந்தேகம் இல்லை.
இது 16 குத்துக்கள் கொண்டது, அதாவது 16 வகையாக பிரிக்கப்பட்டு அத்தனை மந்திரங்களுக்கும் யந்திரம் தந்திரம் மூலம் என தனி தனி சிறப்புக்கள் இருக்கிறது.
இதன் தனி சிறப்பு யாதெனில், ஒரே மந்திரத்தை பயன்படுத்தி அஷ்டகர்ம பிரயோகம் செய்ய முடியும். வசியம் முதல் மாரணம் வரை அனைத்து விடயத்தையும் செய்ய முடியும். இதை குரு மூலமாக சித்தி செய்தவர்களும் தீட்சை பெற்றவர்களும் வேறு எந்த மந்திர பிரயோகத்தையும் செய்வது இல்லை.
அதனால் தான் திருவாசிக்கு எதிர்வாசி இல்லை என்று கூறுகிறார்கள் சான்றோர்கள்.
இங்கு நான் உங்களுக்கு வரிசை கிரமமாக சில மந்திரங்களை தர இருக்கிறேன், ஆனால் அதன் சித்தி செய்முறையும் அதன் பயன்பாடும் உண்மையாக மந்திர கலையை கற்கும் மாணவர்களுக்கு தீட்சையின் பின்னர் உபதேசிக்கப்படும்.
பதிவை பார்க்கும் அன்பர்கள் கேபப்பட தேவையில்லை, இதுவரையிலும் நான் உங்களில் பலரிடம் இருந்து பெற்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொண்ட விடயம், பலரும் குரு என்ற ஒன்று இல்லாமல் தான் கண்டதையும் கேட்டதையும் கடைகளில் இருக்கும் புத்தகங்களில் உள்ள மந்திரங்களியும் படித்துவிட்டு, அதை எப்படி செய்வது இதை எப்படி உணர்வது என்று அடி தலை தெரியாமல் நேரத்தையும் காலத்தையும் வீனடிக்கிறீர்கள்.
சரியான தேடல் இருந்தால் எதையும் சாத்திக்க முடியும் என்பதில் முழுமையான நம்பிக்ககை கொண்டவன் நான், ஆகவே அவர் சரி இல்லை இவர் சரி இல்லை என்ற குற்றச்சாட்டை விடுங்கள் முதலில், நீங்கள் சரியானவரா என்று பாருங்கள்.
குருவருள் என்பது அனைவருக்கும் கிடைப்பது அல்ல என்ற என்னம் தவரானது, முயன்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குங்கள். நீங்கள் தேடுவது உண்மையானதாக இருந்தால் கிடைப்பதும் உண்மையானதாக இருக்கும்.
உங்களில் பலர் மந்திரம் கற்பதன் காரணம் என்ன என்று உங்களுக்கே தெரியாது. குடும்ப கஷ்டம் நீங்க சிலர், பணம் வர சிலர், பெண்களை எடுக்க சிலர், மற்றவரை ஏமாற்ற சிலர், திருமணமாக சிலர் என ஏதோ காரணங்களுக்காக மந்திர உபாசனை செய்கிறீர்கள். எத்தனை பேர் ஞானத்தை அடையவும் முக்தி கிடைக்கவும் என உபாசனை செய்கிறீர்கள்.
இத்தனை கவலை உங்களுக்கு ஏன் என்று நீங்கள் கேட்கலாம், நான் பாரம்பரிய சித்த மருத்துவ மற்றும் மாந்திரீக வம்சத்தில் பிறந்தவன் என்பது உங்களுக்கு தெரியும் இருப்பினும் அடியேனும் ஏதோ தேவையற்ற காரணங்களுக்காகவே மந்திர வித்தைகளை கற்க முயன்றவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், ஆனால் அதன் விளைவுகளை கடுமையாக அனுபவித்தவன் சோதிக்க நினைத்து சோதிக்கப்பட்டவன், வருத்த நினைத்து வருத்தப்பட்டவன், சித்தர்களை பிச்சைகாரன் என்று கேலிபன்னி நானும் பிச்சை எடுத்து உண்டவன், நிர்வானமானவரை கேலி செய்து நிர்வானமாக இருந்தவன் என பல வேடங்களை தாண்டிய பின்னரே பராசக்தியின் சிறிப்பை கண்டவன் அவள் மடியில் இருந்து பேசும் பாக்கியம் பெற்றவன், என் பெருமானை சுடலையில் தரிசனம் கண்டு பயந்து நடுங்கியவன், வாலை புவனை திரிபுரை என மூன்று சக்திகலுக்கும் அர்ச்சனை செய்பவன், வராகி எனும் சப்த கன்னிக்கு அடிமையானவன், கால வயிரவர் எனும் அஷ்ட வைரவர்களை பூசிப்பவன், சித்தர்களை சிவனாகவே வணங்குபவன், அனைத்துக்கும் மேலாக என்னை ஈன்ர தாயை ஆலயமாக கொண்டவன், தந்தையை மதிப்பவன், ஆக எனது வாழகை துனையோடும் குழந்தைகளோடும் இப்போது ஞானத்தையும் முக்தியையும் பெற முயற்சி செய்பவன் நான்.
”நாயினும் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனே”
ஆகவே நான் பட்ட துண்பங்களை நீங்களும் பட தேவை இல்லை என்பதற்காகவே இந்த விளக்கம், சிரியான பாதை கிடைத்தாள் அனவரும் சித்தர்களே. ஆகவே ஏன் கற்கிறோம் என்ற கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேளுங்கள்.
சரி பதிவு எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறது போல் இருக்கிறது, விடயத்துக்கு வருவோம்.
திருவாசி மகா மந்திரம் 1ம் மந்திரம்
ஓம் ஓங்ஙார சக்தி ஒளியாகி நின்ற ஈசுபரனுக்கெதிரே திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தவளே அடியார்க்கு விட்ட மருந்து மந்திர வசிய தம்பன் மோகன கக்கிஷ வித்தைகளை எல்லாம் திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.
மூலம்.
ஓம் அங் உங் ஸ்ரீங்ங ஸ்ரீங்ங ஐயும் கிலியும் சுவாகா
தந்திரம்
தீட்சையின் பின்னர்
அட்ஷரம்
கிரிகை
தற்போதைக்கு மனனம் செய்யுங்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
muthaly@gmail.com
Sunday, February 2, 2014
குரு ஏன் வேண்டும்.,
வணக்கம் தோழர்களே,
வராகி உபசனை செய்வது பற்றி தோழர் ஒருவர் கேட்டார் அவரது கேள்வி இங்கே
WITH REGARDS,
வராகி உபசனை செய்வது பற்றி தோழர் ஒருவர் கேட்டார் அவரது கேள்வி இங்கே
DEAR SIR,
I WANT VARAHI VAALAYAM FULL DETAILS WITH MANTHIRAM,YANTHIRAM,KIRIKAI.. ETC.
AND ALSO EXPLAIN THE STEPS & CONDITIONS TO BE FOLLOWED DURING
VARAHI SIDHI POOJA.SOME ARE SAYING WE GO MAD, IF WE PERFORM VARAHI SIDHI
POOJA(48DAYS) WITHOUT GETTING DEEKSHA OR UPADESHAM. I AM ASKING YOUR
IDEAS ABOUT THAT. AND GIVE MORE DETAILS IN YOUR WEBSITE ABOUT VARAHI
UPASANAI,YANTRAS,MANTHIRA PRAYOGA MURAIGAL AND ALL.
I WANT VARAHI VAALAYAM FULL DETAILS WITH MANTHIRAM,YANTHIRAM,KIRIKAI..
இவரை போன்று பலர் பலதரப்பட்ட மந்திர முறைகளை கேட்கிறார்கள் ஆனால் இவர்கள் யார், என்ன, எப்படி என்ற எந்த தகவளும் அனுப்புவதில்லை. எமது தளத்தின் மூலம் நாம் செய்ய முற்பட்டது வியாபரம் அல்ல, தொண்டு.
மந்திர தந்திரங்களை நம்பி பலரும் ஏமாரும் இக்காலத்தில் நாம் அனைவருக்கும் கொண்டுசெல்ல முற்பட்டது அதன் உண்மையை மட்டுமே. சித்தர்கள் சிவனிடம் பெற்ற தீட்சைகளை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஏமாற்றுக்காரரிடம் இருந்து விலகி உங்களை நீங்களே அறிவதே சிறந்தது என்ற முறையில் தான் பல பதிவுகளை எனது குரு வம்சத்தின் ஆசியுடன் உங்களுக்கு பதிவிட்டேன்.
அதற்கு சாட்சியாகவே எனது வைத்திய முறைகளுக்கான படங்களையும் பகிர்ந்திருக்கிறேன்.
அத்துடன் இவர் யார், குருவாக இருப்பதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற என்னம் கூட இருக்கலாம், அதுவும் சரியானதே அடியேன் யாரையும் என்னிடம் வாருங்கள் என்று அழைக்கவில்லை, மாறாக எனது பதிவுகளை கையாண்டு திருபதியும் அதன் உண்மையையும் உணர்ந்த பலர் கேட்டதன் காரணமாகவே இந்த குருகுல ஏற்பாடு.
மேல் இருக்கும் தோழர் கேட்பது வராகி எனும் சப்த கன்னியின் உபாசனை, அதையும் தீட்சை இல்லாமல் கற்க விரும்புகிறார்.
வராகியை பற்றி ஒரு பாடல்
“ வாலை புவனை திரிபுரை
மூன்றிவையும் வையகத்திற்
கலயும் மாலையும் முச்சியும்
மாக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன்
பாதத்தை அன்பினிலுன்னி
மாலயன் தேவர் முதலான
பேர்களும் வாழ்த்துவரே”
சித்தர் பெருமக்கள் கூறும் பெரும் தேவதைகள் மூன்றும் இங்கு வராகியை துதிப்பதாக கூறப்படுவது அவதானிக்க வேண்டியது.
இப்படி இருக்கும் ஓர் சக்தியை உபாசனை செய்ய என்ன கட்டுப்பாடுகள் வேண்டும் என்று சிந்தியுங்கள்.
இப்போது விளங்கும் குருவின் அருள் ஏன் வேண்டும் என்று. அதனால் தான் குரு குலம் மூலம் சரியான பாதையை (எனக்கு புரிந்தவரை, நான் கற்றவரை) உங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறேன். கற்றது கையலவு என்பது அனைவருக்கும் பொது அது சித்தர்களுக்கும் அப்படியே. அதனால் தான் சித்தர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி பாடினர்.
தீட்சை என்பது இரகசியம் அது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு போன்றது. சிவனும் சக்தியும் போன்றது. குருவும் மாணவனும் மட்டும் தெரிவது அது. இதை வைத்தே மும் மலங்களையும் அடக்கும் சக்தியை பெற முடியும், பஞ்ச பூதங்களை உணர முடியும்.
மந்திர யந்திர பூசைகளை கற்பது கல்வி அல்ல, அது யார் வேண்டுமானாலும் பாடமாக்கி ஒப்பிக்க முடியும், ஒன்றுக்கு 100 முறை சொன்னால் சித்தி கிட்டும், ஆனால் ஆத்மாவை பரம்பொருளை பிறவா வரத்தை அடைவது இயலாது.
” புழுவாய் பிறக்கினும் புண்ணியான் நின்னடி என்மனத்தே வலுவாதிருக்க வரம் தரவேனும்”
என்று அப்பர் பாடியது அதனால் தான்.
ஆகவே குரு என்பவர் யார் என்பது ஒருபுரம் இருக்க அவர் வயது மருபுரம் இருக்க, தகுதியானவரா என்பதே முக்கியமானது.
”குருவை கண்டவன் கோடியில் ஒருவன்”
இந்த வாக்கு உண்மைதான் அதன் படி நான் அந்த பாக்கியம் பெற்றவன் என்பதில் இறைவனுக்கு இறக்கும் வரை நன்றி.
அன்பு மாணவர்களே, மந்திரம் கற்பது ஏன் என்ற தெளிவு இருந்தால் மட்டும் முயற்சியுங்கள்.
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்.
குருகுல செயற் திட்டம்
வணக்கம் தோழர்களே,
குருகுலத்தில் இருந்து 2 km தூரத்தில் ஓர் குலம்

சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது எமது மூலிகை ஆய்வு மையமும் தோட்டமும் அதன் முகப்பில் எமது குருகுலம்.
கடந்த பொங்கல் திரு நாள் அன்று காட்டில் மூலிகை ஆய்விற்காக சென்றப்போது கடுமையான மழையிலும் பணியிலும் மாட்டியதன் விளைவாக கடந்த வாரம் உடல் உபாதைகள் ஏற்பட்டு தற்போது தான் ஓரளவுக்கு உடல் தேரி வருகிறது.
அத்துடன் நமது குருகுல வேலைகளும் தொடர்ந்து நடக்கிறது. பல தோழர்களும் இது சம்பந்தமாக கேட்டவண்ணம் இருக்கிறார்கள், இலங்கயிலும் சரி வெளி நாட்டவரும் சரி தகுதியானவர் என நான் கருதும் மாணவர்கள் கண்டிப்பாக அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவர்.
குருகுலம் என்றதும் இங்கு மந்திர யந்திர பூசைகள் மட்டும் கற்பிக்கப்படும் என்று கிடையாது, மாறாக இது ஓர் மூலிகை ஆய்வு மையமாகவும், தோட்டமாகவும் சித்த மருத்துவத்தையும் அதன் இரகசியங்களையும் மீண்டும் இந்த உலகுக்கு வெளிப்படுத்தும் ஓர் சித்தர் பீடமாகவும் இருக்கும்.
இன்றய சித்த மருத்துவம் கற்கும் மாணவர்களிடையே கானப்படும் மூலிகைகள் தொடர்பான ஐயங்களையும் சரியான முறைகளில் மருந்துகள் செய்யும் விளக்கங்களையும் கற்பிக்கும் ஓர் பீடமாகவும் இது இருக்கும்.
மந்திர பிரயோகம் கற்க விருப்பம் உடையவர்கள் முறைப்படி சித்தி பெறவும் சிவ சக்தி தீட்சைகளை பெறவும், முத்தி அடையவும் சரியான ஓர் பாதையாக இது இருக்கும்.
மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்ட மந்திரங்களை தாருங்கள் என்று இனி யாரும் கேட்க தேவையில்லை, முறைப்படி கற்க விருப்பம் உடையவர்கள் தங்களின் உண்மையான சுயவிபரங்களை அனுப்பி உங்களுக்கான பதிவுகளை குருகுலம் மூலமாக பெறலாம்.
முழு நேர மாணவராக சித்தர் மருத்துவத்தையும் மாந்திரீகத்தையும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்கள் எமது குருகுலத்தில் தங்கி தோட்டவேலைகளில் பங்கேற்று மாத வருமானத்துடன் கல்வியையும் கற்கமுடியும். உணவும் தங்குமிடமும் இலவசமாக கிடைக்கும்.
வெளினாட்டு மாணவர்கள் ஒரு முறையேனும் வந்து தீட்சை பெற்றால் தான் அவர்களின் மந்திர யந்திர பூசைகள் சித்தி பெறும் என்பதுடன் உண்மை நிலையையும் புரிய முடியும். பின்னர் அவர்க்ளின் பாடத்தொகுப்பு SKYPE மூலம் தரப்படும். மருத்துவம் கற்கும் வெளினாட்டு மாணவர்களின் செயற்திட்டம் ஒலி ஒளி மூலம் கான்பிக்கப்படும்.
வெருமனே இணையத்தில் பதிவுகள் போடுவதன் மூலம் யாரும் சரியான பலனை அடையமுடியாது என்பது எனது கருத்து. அத்துடன் தேவையற்ற கருத்துக்களும் அவற்றின் மீதான சந்தேகங்களும் தான் அதிகமாகிறது. பரிபாசையாக இருக்கும் சித்தர் பாடல்களும் சரி மந்திரங்களும் சரி இரகசியமான முறையில் தான் இதுவரை காலமும் கற்பிக்கப்பட்டுள்ளது, அதை மீறி செயற்படும் போது ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளை நாம் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, ஆகவே குறிப்பிட்ட தேவைக்காக மட்டும அல்லாமல் உலக மக்களின் சேவைக்காகவும் நமது முத்தியை அடைவதற்காகவும் விரும்பும் மாணவர்கள் தயக்கமின்றி எனது குருகுலத்தில் இனையலாம்.
இத்தளமும் விரைவில் அங்கத்தவர்கள் மட்டும் நுலையும் வசதியை பெறும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.
குருகுல செயற் திட்டத்திற்கான படங்கள் சில.
குருகுல பிரதான பாதை
குருகுலத்தில் இருந்து 2 km தூரத்தில் ஓர் குலம்

சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது எமது மூலிகை ஆய்வு மையமும் தோட்டமும் அதன் முகப்பில் எமது குருகுலம்.
குருகுல கட்டிடம் சிரிதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம் இது எனது தனி முயற்சி என்பதால் தற்போது இருக்கும் நிதி வசதியை கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறேன் எதிர்வரும் காலங்களில் மூலிகை தோட்டத்தின் மூலம் வரும் பணத்தை கொண்டும் மாணவர்களின் பங்களிப்பை பொறுத்தும் குருகுலம் அபிவிருத்தி அடையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
” உரைத்த பரப்பெலாம் ஓதவும் வேண்டா
குருத்துவ மாகிய கூத்தனருள் பெற்று
ஒருக்கியைம் பூத மூடன்கர ணாதி
வருத்தி மனத்தினில் மரிக்கவல் லார்க்கே. “
என்ற திருமூலர் வாக்குக்கு அமைய வாழ்வோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
Subscribe to:
Posts (Atom)



















