Saturday, January 18, 2014

இயமன் படுகளம் எழுப்ப

வணக்கம் தோழர்களே,

மந்திர வரிசையில் அடுத்து வருவது ஆலயங்களில் தெய்வம் ஆடும் போது கட்டுண்டு கிடந்தால் அதனை தண்ணீர் தெளித்து எழுப்பும் முறை ஒன்று.

இம் மந்திரம் இயமன் (எமன்) எனும் உயிர் பிரிக்கும் தேவன் மூலம் கட்டு பட்டு கிடக்கும் தேவதைகளை எழுப்பும் முறையாகும்.

மந்திரம் 

ஓம் அரி அரி பாதாளம் நடு நடுங்க எமலோகம் கிடு கிடென பாசக்கயிரு கொண்டு பலுத்த கிடா மேல் இயமனும் படுகளத்துக்கு எழுந்தருளி வாரான் ஓம் அரி அரி சங்ஙரி ஆதி சக்தி பரமேஸ்வரி ஆணை இந்தா பார் எழும்பு சுவாகா.

கிரிகை

மந்திரத்தை சித்தி செய்த பின்னர் தேவைப்படும் போது சுத்த சலத்தை கையில் எடுத்து மூன்று முறை மந்திரத்தை கடுமையாக உச்சரித்து தண்ணீரை கட்டு பட்டுகிடக்கும் தேவதையின் முகத்தில் எறிய தெய்வம் ஆடும். 

மந்திர சித்தி பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் ஆகவே எடுத்ததும் கேட்காமல் தளத்தை நன்கு பார்த்து விட்டு பின்னர் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நன்றி

No comments:

Post a Comment